என் மலர்
நீங்கள் தேடியது "6 பேர்"
- சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் கொலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம்:
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதர்(வயது 26). இவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாடிய கொண்டிருந்த பொழுது அவர் தரப்பினருக்கும் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் காரணமாக கை களைப்பு ஏற்பட்டது.
இதில் ஸ்ரீதர் ஒருசிலரால் தாக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து ஸ்ரீதர் கொலை வழக்கு சம்பந்தமாக ஓமலூர் போலீசார் முதல் கட்டமாக விக்ரம் மற்றும் மோகன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக், லித்திஷ், கோகுல், மற்றொரு கார்த்திக், பெருமாள் மற்றும் நித்திஷ்கண்ணன், ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
- 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி:
சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராமன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் போலீசாருடன் அப்பகுதிக்கு சென்று சோதனை யிட்டனர். அப்போது, சூதாட்டம் விளையாடிக கொண்டிருந்த அப் பகுதியைச் சேர்ந்த சந்திரபோஸ் (வயது 44), நலப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த மணி (27), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28), ராஜேந்திரன் (35), விஜயகுமார் (31), குப்ப னூரை சேர்ந்த நவீன் (28) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
- இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ், சுப்பிரமணி, மாரியப்பன், விநாயகமூர்த்தி, ராஜ்குமார், கேசவன் ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
- நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
- மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்த நாமக்கல் பழையபாளையத்தை சேர்ந்த கமலகண்ணன் (47), வீசாணம் சந்திரகுமார் (42), தூசூர் வீரகுமார் (38), வெள்ளாளத்தெரு அருள் (50), கிழக்கு வீதி மணிராஜ் (26), கோம்பை தெரு பாஸ்கர் (40) ஆகிய 6 பேரை பிடித்து போலீசார் கைதுசெய்தனர். மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- தகவலின் பேரில் முதியவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குமாரபாளையம் தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன்(வயது 77), ஈரோடு ரமேஷ்( 25), பள்ளிபாளையம் தினேஷ்குமார்(30), குமாரபாளையம் வெங்கடேசன்(34), ஈஸ்வரமூர்த்தி(36), அல்லிமுத்து(57) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மொபைல் போன்களும், லோகநாதனிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க அந்தியூர் சிறப்புதனிப்பிரிவு போலீசார் முருகன், தேவராஜ், சென்னிமலை, சசிகுமார் , பிரபுகுமார் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் உள்பட 9 பேர்கொண்ட தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.
இவர்கள் கடந்தசில நாட்களுக்கு முன்பு 4 தந்தங்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அந்தியூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட சந்திய பாளையம் பள்ளம் என்ற இடம் அருகே சோதனை நடத்தினர்.
அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்தியூர் அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்த வரதராஜ் (47), சந்திபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (40), பழைய வளையபாளையம் கரும்பாறை பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (37), வாணிப்புத்துர் பகுதியை சேர்ந்த மாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (33), ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான 3 பேரை தேடிவருகிறார்கள்.
இதேபோல் பர்கூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரியூர் பகுதியில் மாதேவன் (37) என்பவரது வீட்டில்இருந்து ஒரு தந்தத்தையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தனிப்படைபோலீசார் யானை தந்தங்களை தேடி வருகின்றனர்.
- கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருபாகரன் (36) சந்திரன் (40), ரமேஷ் (46), தயாநிதி (45), செந்தில் குமார்(45), சிவா (40) எனவும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ. 22 ஆயிரத்து 900, 5 மோட்டார் சைக்கிள்கள், 7 செ ல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.