என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deeparathana"

    • தனிசன்னதியில் செல்வ முத்துக்குமரர், செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் அருள்பாலிக்கின்றனர்.
    • சூரசம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெருமானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வை த்தீஸ்வ ரன்கோ யிலில் தருமபுரம்ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனிசன்னதியில் செல்வ முத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இங்கு நடைபெறும் சூரச ம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெரு மானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம். இதனிடையே செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு கந்த சஷ்டி விழா சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.

    முன்ன தாக கிருத்திகை மண்ட பம் எழுந்தருளியவள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமா ரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம் செய்து மகாதீபா ராதனை காட்டப்பட்டது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமா ச்சாரிய சுவாமிகள்பங்கேற்று தரிசனம் செய்தார்தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் தருமபுரம் ஆதீனம் அடிபிரதட்சணம் செய்து வழிப்பட்டார்.

    இதில் கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச னம் செய்தனர்.

    • குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
    • முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி திருவளர் மங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.

    குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நிறைவு நாளான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சண்டியாக பெருவிழா நடைபெற்றது.

    முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, கோ தனம், மண்டப பலி, மகாபூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பைரவர் பலி தானங்கள், சுவாசினி, வடுக பூஜை, பட்டுப்புடவை ஹோமம், மகாபூர்ணஹீதி, தீபாராதனை, கலசாபிஷேகம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளினார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்க லில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.

    சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

    அதற்கேற்ப சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளினார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்க லில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.

    சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

    அதற்கேற்ப சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • அரிசி சாதம் கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை.
    • சேந்தங்குடி வள்ளலார் கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை மற்றும் சோடச ஆராதனை செய்யப்பட்டது.

    இதில் துணை கண்காணிப்பாளர் கனேசன், கணக்காளர் வெங்கட்ராமன், நகர மன்ற உறுப்பினர்கள் சர்வோதயம், சதீஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் சேந்தங்குடி வள்ளலார் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    ஆலய குருக்கள் பாலச்சந்திர சிவாச்சாரியார் பூஜைகள் செய்தனர்.

    இதில் கண்காணிப்பாளர் அகோரம், நகர மன்ற உறுப்பி னர் ரமேஷ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொன்டு தரிசனம் செய்தனர்.

    • 108 கிலோ அரிசியால் அன்னம் மற்றும் பழங்களால் சிவனுக்கு அலங்காரம்.
    • மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம்.

    சீர்காழி:

    சீர்காழியில் பொன்னாக வள்ளி அம்பாள் உடனாகிய நாகேஸ்வர முடையார் (ஆதி ராகு) கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பவுர்ணமி முன்னிட்டு நாகேஸ்வரமுடையாருக்கு 108 கிலோ அரிசியால் அன்னம் மற்றும் வாழைப்பூ பரங்கிக்காய், திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களினால் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா திருவாய்மூர் கிராமத்தில் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்ததை முன்னிட்டு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    அப்போது புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திருவாய்மூர் கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

    • புனிதநீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவிலை வலம் வந்தது.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து. பின்னர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் வீதி உலா புறப்பாடு காட்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • 7-ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், 9-ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெறும்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநா தசுவாமி கோயில், நவக்கி ரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குகிறது.

    இத்தலத்தில் ராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

    இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூ ர்த்திகள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடி மரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி, மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்ச ள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தனுர் லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனைசெய்வி க்கப்பட்ட பின்னர், சுவாமிகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்ப ட்டது.

    இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாள் விழாவில் ஓலைசப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன காட்சி, 7ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், 9ம் நாள் விழாவில் தேரோட்டமும், 10ம் நாள் விழாவில் கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    நிறைவு நாளான 11-நாள் விழாவில் விடையாற்றி நிகழ்ச்சியும், இரவு புஷ்ப பல்லாக்குடன் வீதியுலா உற்சவத்துடன் நடை பெறுகிறது.

    • வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த குளிச்சார் கிராம குள த்தங்கரையில் உள்ள ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ தேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை குளிச்சார்செல்வம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • கோவில்நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.
    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    கார்த்திகை திருநாளையொட்டி தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    முன்னதாக பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில்நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னியை லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.

    மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன. சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர்.

    மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    • சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம்.
    • மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரணேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மந்திரங்கள் முழங்கிட அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 1008 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், உபயதாரர் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, கோவில் மேலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×