என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள்"

    • வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க ப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூரில் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சங்க வளர்ச்சி, பணிகள், உறுப்பினர் சேர்க்கை, வரவு,செலவு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக மீண்டும் வள்ளுன்நம்பி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய செயலாளராக சேகர், இணை செயலாளராக சுகுமார், பொருளாளராக சிவராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பொறு ப்பாளர்களுக்கு வக்கீல்கள் பொன்னடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
    • மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல குமரி மாவட்டத்திலும் 2 ஆயிரத்து க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.மேலும் பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாப புரம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயிலில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ராஜு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன், வக்கீல்கள் குடந்தை ராஜன், சதாசிவம், ராஜ்குமார், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைகண்டித்து கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் வக்கீல்கள் சௌந்தர்ராஜன், மதியழகன், சின்னமணி, சிகாமணி, பாஸ்கர், பிரபு, செபாஸ்டின், ஆனந்தராஜ், காஜாமைதீன், சுபாஷ் சந்திர போஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் பழனியப்பன், வல்லம் பேரூர் தலைவர் முகமது பாட்ஷா, கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார், மக்கள் நல பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உறந்தை மனோகரன், மானம்புசாவடி பிரபாகர், மாவட்ட சேவா தளம் திருஞானம், கோமதி, தொழிற்சங்கம் நிர்வாகி சந்திரசேகர், கண்ணன், இனாத்துகன்பட்டி ராமலிங்கம், நிர்வாகி மகேந்திரன், விசிறி சாமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
    • கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி அருகே தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

    பூதப்பாண்டி வன அதிகாரிகள் தெற்கு கருங்குளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேலும் 3 பேரை வனத்துறை யினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் வழக்கறிஞர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட 2 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் வழக்கறிஞர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

    வக்கீல்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் திடீரென கோர்ட் வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி, வக்கீல்கள் சரவணன், மரிய ஸ்டீபன், சோமசுந்தரம், பாலாஜி உள்பட 60 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜோதி பணிபுரிந்தார்.
    • போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோதி. இவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இந்நிலையில் செஞ்சி டி.எஸ்.பி.அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இந்நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டி. ஐ ஜி. பகலவன் உத்தரவின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    • இலவசமாக சேவைபுரிய குற்றவியல் வக்கீல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
    • தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வசதியற்ற வா்களுக்கான குற்றவியல் வழக்குகளை நடத்த குற்றவியல் வழக்குரை ஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த அலுவலகத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெசிந்தா மாா்ட்டின் திறந்து வைத்து பேசியதாவது:

    வசதி இல்லாதவா்கள் தங்களுடைய குற்றவியல் வழக்குகளைத் தொடா்புடைய நீதிமன்றத்தில் வழக்காட, எதிா் வழக்காட, பிணையில் எடுக்க ஆகியவற்றுக்கு இலவசமாக சேவை புரிய குற்றவியல் வழக்குரைஞா்கள் தோ்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனா். இவா்களை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மாவட்ட, அனைத்து வட்ட நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இம்மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேல், சாா்பு நீதிபதியும், மையச் செயலருமான இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

    • போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
    • 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.
    • வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது

    நாகர்கோவில் :,

    குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள், உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

    வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பு தலைவர் நந்தகுமார் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ஜெயச்சந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் சுரேஷ், சுந்தர் சிங், ஜோசப் ராஜ், பழனி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆதி லிங்கம், மூத்த வழக்கறி ஞர்கள் ராஜ குஞ்சரம், பரமதாஸ், வெற்றிவேல், ஜோசப் பெனடிக், ராதா கிருஷ்ணன், மரிய ஸ்டீபன், செல்வகுமார் , வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சரவணன், அனிதா ராஜன், ஜாக்குலின் ஆஷா, கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரேம்குமார், சுரேஷ் தங்கம் , முருகேஸ்வரன் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர் . மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது.

    • ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் உள்ள வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகளை கண்டித்து ஆலங்குடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆலங்குடி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, சார்பு நீதிபதி (கூடுதல்), மாவட்ட நீதிபதிகள், இவர்களுக்கு வருகின்ற குற்ற வழக்குகளுக்கு எதிரிகளிடம் இருந்து முன் தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும் என உத்தரவு விடுகின்றனர். குற்றவாளிகளை பிணையில் விடும்போது அவர்கள் அந்தந்த பகுதிகளில் கையெழுத்து போடவிடாமல், மாவட்டம் விட்டு மாவட்டமும், தாலுகா விட்டு தாலுகாவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள நீதிபதி காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்ட்டு புதுக்கோட்டை தாலுகா அதிகார எல்லை வரம்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட அதிகார எல்லைவரை நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் வக்கீல்களுக்கு உரிய மரியாதை அளிக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் ஆலங்குடி கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அமைய இருக்கிற ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புககுக்கான இடம் ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84-ல் 5.54 ஹெக்டேர் மற்றும் சர்வே எண் 97-ல் 1.95 ஹெக்டேர் ஆக மொத்தம் 18.5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 917 ஆகும்.

    தற்போது நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறோம். ஏற்கனவே மேற்கண்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது சம்பந்தமாக கலெக்டரிடம் சிவபத்மாதன் கூறுகையில், ஏற்கனவே பாதை பிள்ளையான் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடத்தை இந்த இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனுக்களையும் வழங்கி இருக்கிறோம். அன்றைய தினத்தில் பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வழிப்பாதை சம்பந்தமாக சில விதிமுறை கள் இருப்பதை சுட்டிக்காட்டி யதாக கூறினார்.

    அப்போது தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் புகழேந்தி, கைலாசம், மாட கண்ணு, வீரமணி கண்டன், ராஜா முத்துக்குமாரசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
    • மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×