என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி"

    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
    • விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.

    இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிஸின்கள் IRCTC யை கிழித்தெடுத்து வருகின்றனர்.
    • இதுபோல் மற்றோரு சம்பவம் காசி எக்ஸ்பிரஸிலும் நடந்துள்ளது.

    குலாப்ஜாமுனில் உயிருடன் ஊர்ந்த கரப்பானப்பூச்சி.. பயணி வெளியிட IRCTC உணவு வீடியோ

     இந்திய ரயில்வேயில் IRCTC சார்பில் காண்ட்ராக்ட் மூலம் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. பயணி விரும்பினால் பயணத்தின்போது ஆர்டர் செய்து இருக்கைக்கே உணவை வரவழைக்கும் வசதி உள்ளது. ஆனால் உணவின் தரம் குறித்து பாசிட்டிவான ரிவியூவ்கள் வருவகிறதா என்பது கேள்விக் குறித்தான்.

    அந்த வகையில், கோராக்பூரில் இருந்து மும்பை லோகமான்யா திலக் டெர்மினல் செல்லும் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட IRCTC உணவுவில் வழங்கப்பட்ட இனிப்பு வகையான குலாப்ஜாமூனில் உயிருடன் கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    Cockroach in food byu/Aggravating-Wrap-266 inindianrailways

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிஸின்கள் IRCTC யை கிழித்தெடுத்து வருகின்றனர். இதுபோல் மற்றோரு சம்பவம் காசி எக்ஸ்பிரஸிலும் நடந்துள்ளது. உணவில் கிடந்த பூச்சியின் படத்தை பயணி ஒருவர் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவியது. இந்த சமபாவங்கள் தொடர்பாக IRCTC நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

     

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
    • சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    வந்தே பாரத் விரைவு ரெயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

    வந்தே பாரத் ரெயிலில் சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு பரிமாறியதாக பணியாளரிடம் வயதான பயணி ஒருவர் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த பணியாளரை கோவத்தில் அந்த பயணி அறைந்துள்ளார்.

    அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    பணியாளர் ஒருவர் தவறுதலாக உணவு பரிமாறியதற்காக அவரை அடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பணியாளருக்கு ஆதரவாக சக பயணிகள் பேசியதையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.
    • நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன்.

    ராஜ்தானி விரைவி ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரெயிலில் உள்ள குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ராஜ்தானி விரைவு ரெயிலின் பரிதாப நிலை இது. ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இது எங்களின் மகிழ்ச்சியான பயணத்தை கெடுத்துவிட்டது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட பாத்ரூமின் நிலை மிக மோசமாக உள்ளது.

    நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன். ரெயில் சுத்தமாக இல்லை. ரெயில் பெட்டிகளுக்குள் அனுமதியில்லாமல் சிலர் பொருட்களை விற்கின்றனர். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கின்றனர். மொத்தத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    ரெயில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் எனது மகன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். பிரதமர் மோடி அவர்கேள தயவு செய்து இதை சரிசெய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவில், இந்திய ரெயில்வே துறை, ரெயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை அவர் டேக் செய்துள்ளார்.

    இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ரெயில்வே, உங்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 


    • எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி கீழே இறங்க முயன்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.
    • ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சியில் பல்லவன் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே, கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் பயணி சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்திற்கிடையே ரெயிலுக்கு அடியில் சிக்கியவரை ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிக்கெட் இல்லாத பலர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
    • உங்கள் பயண விவரங்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    காசு கொடுக்க தயாராக இருந்தும் ஏன் சாதாரண எக்பிரஸ் ரெயிலில் செல்ல வேண்டும் என்று நொந்துகொள்பவர்களுக்காகப்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு பிரத்தேயகமாக அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத்.

    அப்படிப்பட்ட அதிநவீன ரெயிலிலும் டிக்கெட்டை புக் செய்து சொகுசாக பயணிக்கலாம் என்ற கற்பனையுடன் எதிர்பார்த்து வந்த பயணி தனக்கு சீட் கூட கிடைக்காமல் தவித்ததாக எக்ஸ் தளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், #VandeBharatExpress இல் எனது அனுபவத்தால் ஏமாற்றமடைந்தேன். டிக்கெட் இருந்தும், இருக்கைகள் கிடைக்கவில்லை, டிக்கெட் இல்லாத பலர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    மோசமான நிர்வாகம், இருக்கை கிடைப்பதை சரிபார்க்காமல் வகைதொகை இல்லாமல் டிக்கெட்டுகளை விற்கிறது. @RailMinIndia டிக்கெட்டுகளுக்கான சரியான சோதனைகள் இல்லை என்று பதிவிட்டு ஒரு போட்டோவையும் அட்டாச் செய்துள்ளார். 

    இந்த போஸ்ட் ரெயில்வே துறை கண்ணில் தட்டுப்படவே , உங்கள் பயண விவரங்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தைரியம் கொடுத்து ஆறுதல் படுத்தி உள்ளது. 

    • லாட்ஜில் தங்கியிருந்த சுற்றுலா பயணி இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மேற்குவங்கம் முர்ஜிதாபாத்தை சேர்ந்தவர் அமலன் பதன் பதோ பாய். இவர் சிலருடன் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு பெருமாள் தெப்பம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்கிறது.
    • 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது.

    திருப்பூர்

    மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூரில் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தினமும் மாலை 4:20மணிக்கு சென்னையில் புறப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 7:10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 4:55க்கு மங்களூரில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 8:05 க்கு சென்னை செல்கிறது.சென்னையில் இருந்து மங்களூருக்கு (12685) செல்லும் போது, ஜோலார்பேட்டை - சேலம் இடையே மொரப்பூரில் இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் நிற்கிறது. அதே நேரம், மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது மதியம் 2:40க்கு சேலத்தை கடக்கும் ரெயில் மாலை 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது. மொரப்பூரில் நிறுத்தப்படுவதில்லை.

    இது குறித்து திருப்பூர் ெரயில் பயணிகள் கூறியதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ஜோலார்பேட்டைக்கு பயணிக்கும் ெரயில்களில் இன்டர்சிட்டி, சென்னை எழும்பூர் ஆகிய ெரயில்கள் மதியத்துக்கு முன்பாக மொரப்பூர் கடந்து விடுகிறது.மாலையில் கோவை எக்ஸ்பிரஸ், இரவில் சபரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வடமாநிலத்தில் இருந்து வரும் வாராந்திர ெரயில்கள் நின்று சென்றாலும், அவற்றில் ெரயில் பெட்டிகளில் கால் வைப்பதுக்கு கூட இடமிருப்பதில்லை. தர்மபுரி, பொம்மிடி, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர், திருவண்ணாமலை பகுதிக்கு மொரப்பூரில் இருந்து செல்வோர் பலர் உள்ளனர்.மங்களூரு செல்லும் போது நிறுத்தப்படும் ரெயில் சென்னை திரும்பும் போது நிறுத்தப்படாததால் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மங்களூரு - சென்னை ெரயிலை மொரப்பூரில் மாலையில் நிறுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    ×