search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி-கல்லூரி"

    • பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விருதுநகர் கலெக்டர் புத்தகம் வழங்கினார்.
    • வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நல விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலெக்டர் ஜெயசீலன் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். புத்தகம் ஒரு மனிதனை மேன்மையாக்குகிறது. புத்தகம் படிப்பதன் மூலம் அறிவு மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேசுவரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    இக்னீஷியா என்கிற பெயரில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான போட்டி தொடங்கியுள்ளது.

    இதனை அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்பேரல் பேஷன் டிசைன் துறை தலைவர் அருந்ததிகோஷல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், வாழ்த்தி பேசினார். பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாள் முக ஓவியம், சிகை அலங்காரம், காய், பழங்களில் அலங்காரம் செய்தல், படத்தொகுப்பு, ஓவியம், மின்னணு கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு, கழிவு பொருட்களில் கலை பொருட்கள் தயாரிப்பு, மெஹந்தி, நகத்தில் ஓவியம் தீட்டுதல், விளம்பர படம், குறும்படம் தயாரிப்பு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.2-ம் நாள் பேஷன் ஷோ, குழு நடனம், தனிநபர் நடன போட்டிகள் நடைபெற்றன.

    அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாய்ப்பாட்டிசை (செவ்வியல்), வாய்ப்பாட்டிசை, கருவி இசை (தாள வாத்தியம்), கருவி இசை (மெல்லிசை), நடனம் (செவ்வியல்), பாராம்பரிய நாட்டுப்புறக்கலை, காட்சிக்கலை (2டி), காட்சிக்கலை, மூன்று பரிமாணங்கள் (3டி), ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், 430 பேர் பங்கேற்றனர். இறுதிநாளன்று நடனம் மற்றும் நாடகம் போட்டி நடந்தது.பாரம்பரியம் மற்றும் கிராமிய நடனத்தில் 120 பேரும், நாடகத்தில் 35 பேரும் பங்கேற்றனர்.

    • கோவை மாநகரில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தகவல்கள் தெரியவரும்போது அதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    கோவை

    போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து தெரிந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத கல்வி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசாா் எச்சரித்துள்ளனா்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்கள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கல்லூரி, பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த 2 பேர் பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தின் பின்புறம் நின்றுகொண்டு அண்மையில் புகைப் பிடித்துள்ளனா்.

    இது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கும் அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இனி வரும் காலங்களில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தகவல்கள் தெரியவரும்போது அதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    இதனை தலைமை ஆசிரியா் அல்லது பள்ளி, கல்லூரி முதல்வா் ஆகியோா் மறைப்பதன் மூலம் போதைப் பொருள்கள் விற்பனைக்கு உடந்தையாகச் செயல்படுவதாக கருதப்பட்டு அவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பல்வேறு பகுதிகளில் ‘எனக்கு வேண்டாம் மது’ என்ற தலைப்பில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.

    மதுரை

    மதுரையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் செல்லூர், கூடல் புதூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கே.வி சாலை தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட உதவி கமிஷனர் விஜயகுமார் பேசும்போது, "குடிபோதையில் வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

    நீங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் 'எனக்கு வேண்டாம் மது' என்ற தாரக மந்திரத்தை போதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து அவர்களை காப்பாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க சொல்லுங்கள். இதனால் குடும்பம் பாதுகாக்கப்படும். சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தடுக்கலாம். தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும் என்றார்.

    மதுரை மாநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதேபோன்று விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இதில் செல்லூர் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம் (சட்டம்- ஒழுங்கு), வேதவள்ளி (குற்றப்பிரிவு) கூடல்புதூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வசந்தா, சப் இன்ஸ்பெக்டர் ரீகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகரில் செல்லூர், கூடல்புதூர் மட்டுமின்றி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 'எனக்கு வேண்டாம் மது' என்ற தலைப்பில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.

    ×