என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushroom"

    • போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.
    • காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதைக் காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் விளைகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதைக்காளானும் ஒரு வகையாகும். இவை மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும் இங்கு இயற்கையாகவே கிடைக்கிறது.

    போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக உள்ளது.

    இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறையால் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் போதைக்காளான் குறித்த தகவல் வந்தால் அவர்களும் இதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே போதைக் காளான் கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    • சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    * அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.

    * காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

    * ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.


    * உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

    * மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.

    * முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.

    * ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.

    * முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்

    * அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.


    * டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.

    * பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.

    * நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.

    • சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
    • சிக்கன் மஷ்ரூமை சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    மஷ்ரூம் - 1/2 கிலோ

    சோள மாவு - 100 கிராம்

    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - தேவையான அளவு

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 முழுஅளவு

    பிரெஷ் கிரீம் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கன், சோளமாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அவற்றை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மஷ்ரூம்களை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.

    பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதனை தொடர்ந்து ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாக வரும் நேரத்தில் பிரெஷ் கிரீமை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.

    சிக்கன் மஷ்ரூம் கிரேவி சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    • ரெயிலுக்குள் நிலவும் ஈரமான சூழலில் காளான்கள் செழித்து வளர்ந்துள்ளது.
    • இந்த புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ரெயிலுக்குள் காளான் வளர்ந்துள்ள புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த படத்தில், ரெயிலுக்குள் நிலவும் ஈரமான சூழலில் காளான்களும் பாசிகளும் ஒன்றாக செழித்து வளர்ந்துள்ளது.

    அந்த பதிவில், இந்தியாவில் நீண்ட தூர ரெயில் பயணம் செய்யும் சைவப் பயணிகள் இப்போது 2 அல்லது 3 நாட்கள் இந்த காளான்களை பறித்து சாப்பிட்டு கொள்ளலாம்" என்று அவர் கிண்டல் அடித்துள்ளார்.


    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.

    வடமதுரை:

    மழை காலத்தில் இடி, மின்னல் அடிக்கும் போது காளான் முளைப்பதுண்டு. கிராமப்புறங்களில் இந்த காளான்களை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வழக்கம் நகர் புறங்களிலும் தொடரவே செயற்கை முறையில் காளான்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

    காளான்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் உடலில் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக ஆய்வுகள் கூறிவரும் நிலையில் இதன் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. செங்குளத்துப்பட்டியில் உள்ள சுந்தர மகாலட்சுமி என்பவரது தோட்டத்தில் இன்று காலை 2 கிலோ எடையுள்ள மிகப்பெரிய காளான் முளைத்திருந்ததை அவரது மகன் கவின் பார்த்தார்.

    இதுகுறித்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவவே அந்த காளானை ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் அந்த காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, மொட்டுக்காளான் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
    • விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    அதற்கு கூடுதல் முதலீடு தேவை என்பதாலும், சந்தையில் போதிய விலை கிடைக்காதலும் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். அதன்படி கொய் மலர்கள் சாகுபடி, காளான் உற்பத்தி விவசாயத்தில் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.

    குறிப்பாக நீலகிரியில் மொட்டு காளான் வளர்ப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    வங்கிகளில் மானியம் பெற்று தங்கள் நிலத்தில் காளான் உற்பத்தியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். குன்னூர், கேத்தி, குந்தா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் காளான் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, மொட்டுக்காளான் விலை ஏறுமுகமாகவே உள்ளது. உள்ளூரில் ஓரளவு விலை குறைந்து இருந்தாலும் வெளியூர்களில், 10 கிலோ கொண்ட ஒரு 'பாக்ஸ்' குறைந்தபட்சம் ரூ.1500 வரை விற்பனையாகிறது.

    குன்னூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் மொட்டு காளான் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு மற்றும் சேலம், கரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட ங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மலை காய்கறி பயிரிடுவதை குறைத்து மொட்டு காளான் உற்பத்திக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது மொட்டு காளான் விலை ரூ.180 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வருகிறது என்றனர்.

    • வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
    • வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்மங்குடியில் வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கா.ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோ. பார்கவி வரவேற்றார்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன் மதிப்பு கூட்டுதல் பற்றியும் அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக பயிற்சி அளித்தனர். தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம், விதைச்சான்று அலுவலர் கனகம், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

    வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன், சவுந்தரராஜன் மேற்கொண்டனர். இறுதியில் உதவி வேளாண்மை அலுவலர்.ராமன் நன்றி கூறினார்.

    ×