என் மலர்
நீங்கள் தேடியது "காலை உணவு திட்டம்"
- குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
- பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
உலகளவில் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். பல மில்லியன் ஃபாளோயர்களை கொண்டிருக்கும் மிஸ்டர் பீஸ்ட் தான் உருவாக்கும் வீடியோக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். யூடியூப் மட்டுமின்றி பல்வேறு செயல்களில் ஆர்வம் கொண்டவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற ஜிம்மி டொனால்டுசன்.
அந்த வரிசையில், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது அறிவித்து இருக்கும் திட்டம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதன்படி ஆப்பிரிக்கா பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குவதாக மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கோகோ தோட்டங்களில் பணியாற்ற வைக்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
கோகோ தோட்டங்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைத்தால் அவர்கள் பள்ளுக்கு செல்வர் என்று டொனால்டுசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் ஆப்பிரிக்க சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் காலை உணவு திட்டத்தை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
- தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றி மாணவர்களுடைய கருத்தை கேட்டறிந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது எஸ்.புதூர் ஒன்றியத்தில் உலகம்பட்டி, கட்டையன்பட்டி, குளத்துப்பட்டி உள்ளிட்ட
47 அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் இடம், நேரம், சுகாதாரம், சுவை உள்ளிட்ட ஆய்வுகளை கோட்டாட்சியர் சுகிதா மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் முறை மளிகை பொருட்கள், காய்கறிகள், பராமரிக்கும் முறை, மாணவ- மாணவிகளுக்கு தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றிய மாணவர்களுடைய கருத்து ஆகியவற்றை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் ருசித்துப் பார்த்தார். அவருடன் மாவட்ட ஒன்றிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது.
- திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும்.
தாராபுரம் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ஏழை எளிய-மக்களுக்காகவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும் தி.மு.க.வில் அடிமட்டதொண்டனையும் நினைவு கூர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று தனது அறிவுரையால் தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துவது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை கவர்ந்துவெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவராக வெற்றி நடைபோட்டு வரும் அவருக்கு வருகிற 27-ந் தேதி பிறந்த நாள் விழாவை சீரும் சிறப்போடும் ஏழை எளிய-மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.
கருணையுள்ளதோடு இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.
தேர்தல் ஆணையத்தால் ஆண்டு தோறும் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், இடமாற்றம் ஆகியவற்றை செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திருப்பூர் மாவட்டம், ஒன்றிய நகர பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை இடம் பெற செய்ய வேண்டும்.திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.விற்கு சேர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு
- சமையல் ஒப்பந்ததாரருக்கு பாராட்டு
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.
ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் உள்ள முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் குழந்தை களுக்காக சமைக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளது என சமையல் ஒப்பந்ததாரர் ஜெமினி ராமச்சந்திரனை பாராட்டினார்.
பின்னர் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாச சேகர், நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் குணா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குண்டடம் :
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஜோதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு சமையல் கூடங்கள் ,முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாராபுரம் நகராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா கட்டுமானப்பணிகளையும், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப்பொருட்கள் குறித்தும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகளையும் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா சாமி பேட்டி
- மாணவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலா சாமி இன்று காலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்ப டும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் மாணவர்களுக்கு 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யப்படும் இடத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது எத்தனை குழந்தைகளுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து பள்ளிகளுக்கு உணவு எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது போன்ற தகவல்களை கேட்டு அறிந்தார்.
பின்னர் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளி யில் மாணவ- மாணவி களுக்கு காலை உணவு வழங்கப்ப டுவதை பார்வையிட்டார். அப்போது குழந்தை களுடன் தரையில் அமர்ந்து ஜோதி நிர்மலாசாமி கலெக்டர் அரவிந்த் ஆர்.டி.ஓ. சிவப்பிரியா மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் உணவை சாப்பிட்டனர்.
பின்னர் ஜோதி நிர்மலா சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செட்டிகுளம் அரசு பள்ளியில் நேரடியாக வந்து ஆய்வு செய்தோம். 52 குழந்தைகள் இங்கு உணவு சாப்பிடுகிறார்கள். பொங்கல் சாம்பார் குழந்தை களுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. உணவில் முந்திரி பருப்பு போடப்பட்டுள்ளது. குழந்தை களுக்கு சத்தான உணவாக இது அமைந்துள்ளது. குழந்தை களும் சந்தோசமாக இந்த உணவை சாப்பிட்டு வரு கிறார்கள். ஆசிரியர் இடம் இது குறித்து கேட்டோம். பெற்றோர்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. அவர்கள் அவசரமாக வேலைக்கு செல்லும்போது சமைக்கின்ற வேலை இல்லை.
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுவது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்கள் .
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் எஸ் பி அலுவலகம் அருகே உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விடுதியையும் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணன் கோவிலில் அமிர்த் திட டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
- பள்ளி வளாகத்தில் உள்ள காலியான இடத்தில் ஊட்டச்சத்து காய்கறித்தோட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தற்போது வழங்கியுள்ளார்.
திருப்பூர்:
முதல்வரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி மாணவர்க ளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில்உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தற்போது வழங்கியுள்ளார்.
அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காலை உணவுத்திட்டங்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் சிறு தானியங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அதன் மூலம் காலை உணவுத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்.
தினந்தோறும் மாணவர்களுக்கு வழங்கும் குடிநீர் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்தல் அவசியம். சத்துணவு உண்போர் அன்றாட எண்ணிக்கையினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள் மூலம் தினமும் காலை 11மணிக்குள் தவறாது எஸ்.எம்.எஸ்., அனுப்பிட வேண்டும்.பள்ளி வளாகத்தில் உள்ள காலியான இடத்தில் ஊட்டச்சத்து காய்கறித்தோட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.
சென்னை:
74-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண-சாரணியர் மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியகொடி ஏற்றினார். நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரத சாரண-சாரணியர் இயக்கத்தில் 10 லட்சம் மாணவர்களை இணைக்கவேண்டும் என்ற இலக்கில் செல்கிறோம். பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். மதுரை கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரை கலைஞர் நூலகம் திறக்கப்படும். இதற்கான திறப்பு விழா குறித்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும்.
நிதி நிலைமை படிப்படியாக சரிசெய்யும் பணியில் முதல்-அமைச்சர் ஈடுபட்டு வருகிறார். பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில், 22 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.
காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் 'ஜி20' கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துகொள்கின்ற போது தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூர் மாவட்டத்தில் மட்டும் 7 ஒன்றியங்களில் 55 பள்ளிகளில் 114 புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
- புதிய பள்ளி கட்டிடங்களை மாணவ- மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வேலூர்:
காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நான் இங்கு விழா பேரூரையாற்ற வரவில்லை. உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். இந்த பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த பள்ளிக்குள் நுழைந்ததும் அமைச்சர் துரைமுருகன் அவர் இங்கு படித்ததாக கூறினார். அவர் படித்த பள்ளியில் இது போன்ற திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிய வகுப்பறைகள் கட்டவும் ரூ. 2400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கட்டிடங்கள் பழுதான வகுப்பறைகள் சீரமைக்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் ரூ.784 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் 7 ஒன்றியங்களில் 55 பள்ளிகளில் 114 புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்க நாட்டப்பட்டுள்ளது.
நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல் ஒன்றை குறிப்பிட்டு வருகிறேன். இந்த அரசை பொறுத்தவரை கல்வி மருத்துவம் இரண்டு கண்களாக பாவித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தொகுதி வாரியாக திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
அவ்வாறு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றபோது காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறோம் என உருக்கமாக பள்ளி மாணவ- மாணவிகள் என்னிடம் கூறினார்கள். இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனை தொடர்ந்து காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செப்டம்பர் 15-ந்தேதி முதல் அதனை பல பகுதிகளில் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். சில பள்ளிகளில் மரத்தடியில் மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. உடனடியாக அதை சீர் செய்யும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பள்ளி கட்டிடங்களை மாணவ- மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்தி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன் நந்தகுமார் அமுலு விஜயன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
- வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாமக்கல்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்றிரவு நாமக்கல்லுக்கு வந்தார். அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் நளா ஓட்டலில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் அழகு நகரில் உள்ள நகராட்சி பள்ளிக்கு திடீரென சென்றார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்தார்.
அப்போது அருகில் இருந்த மாணவ-மாணவிகளிடம் போதுமான அளவு சாப்பாடு வழங்கப்படுகிறதா, அந்த உணவு சுவையாக உள்ளதா, ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் இந்த உணவை வழங்க வேண்டும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பான ரெக்கார்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துடன் கூடிய உணவு கிடைக்கும் வகையிலும், மாணவர்கள் கால தாமதமாக வருவதை தடுக்கும் வகையிலும், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கலெக்டர் ஸ்ரேயாசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- காலை உணவு திட்டம் மூலம் சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
- வரும் நாட்களில் இந்த திட்டத்தால் பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் குறிக்கோள் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது, பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பதுதான் ஆகும். தற்போது இந்த காலை உணவு திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் காரணமாக மாணவர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருகையானது அதிகரித்துள்ளது மாநில திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட திட்டக்குழு பகுப்பாய்வின்படி தமிழகத்தில் 217 பள்ளிகளில் வருகை முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் இந்த திட்டத்தால் அனைத்து மாவட்டங்களிலுமே மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அங்குள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முழு சதவீதமான 100 விழுக்காடை எட்டியுள்ளது இந்த திட்டத்திற்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் காலை உணவு திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் 98.5 சதவீதமும், கரூர் 97.4 சதவீதமும், நீலகிரி 96.8 சதவீதமாகவும் காணப்படுகிறது.
இதுதவிர இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள பள்ளிகளில் 1,086 பள்ளிகளில், மாணவர்கள் வருகை என்பது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 22 பள்ளிகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து மாநில திட்டக்குழு அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 1,543 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது என்பதை அறிய நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம்.
எங்கள் ஆய்வானது திட்டம் செயல்பாட்டில் உள்ள 1,543 பள்ளிகளில் உள்ள வருகை பதிவேடுகள் மற்றும் புவியியல் ஒருங்கிணைப்புகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை, தொடர்ந்து 75 சதவீதத்திற்கு மேல் வருகை தருபவர்கள் ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்டனர். இதில் 72 பள்ளிகளில் வருகை என்பது நேர்மறையான போக்கினை காட்டியது.
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 1.14 லட்சம் மாணவர் பயன்பெற்றனர். 2-வது கட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தத்தில் இந்த திட்டம் மூலம் சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சாப்பாட்டுக்கு 12 ரூபாய் 71 காசு செலவாகும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, இந்தத் திட்டமானது மேலும் பல மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த திட்டத்தால் பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது நாங்கள் முதல் கட்ட ஆய்வினை மட்டுமே செய்துள்ளோம். தொடர்ந்து அடுத்தடுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
- ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?
சென்னை:
சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.) பேசினார். அப்போது மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்தான் அ.தி.மு.க. ஆட்சியின் போது மாணவ-மாணவிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினமும் பல பகுதிகளில் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த வகையில்தான் அ.தி.மு.க. ஆட்சியில் உணவு கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர அதை அரசு சார்பில் கொடுத்ததாக கூற முடியாது" என்றார்.
அப்போது மா.சுப்பிரமணியன் ஆட்சேபகரமான ஒரு வார்த்தையை தெரிவித்ததற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அரசு சார்பில் காலை உணவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்தினார்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "2018-19-ம் ஆண்டு கவர்னருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
2019-20-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி கவர்னருக்கு வழங்கி இருக்கிறார்கள். அந்த பணத்தில் இருந்துதான் தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சய நிறுவனத்துக்கு காலை உணவு வழங்கியதற்காக பணம் கொடுத்து இருக்கிறார்கள்.
அதுவும் முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு கவர்னர் ரூ.1 கோடி தான் உணவு வழங்க செலவழித்துள்ளார்.மீதி ரூ.4 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கான கணக்கும் இதுவரை இல்லை", என்றார்.
இதற்கு மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "இது ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?" என்று விளக்கம் கொடுத்தார்.
இதனால் காரசார விவாதம் நடந்தது.
அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து,"கவர்னருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி பணம் பற்றி கவர்னர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.