search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பெண்கள்"

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன் தலைமையிலான போலீசார் நாககுப்பம் மற்றும் தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். இதில் கஜேந்திரன் மற்றும் சுதாகர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அதேபோல் தகரை கிராமத்தில் மூணாங்கண்ணி குட்டை அருகே கலா (42), சுரேஷ் (32) ஆகியோர் சாராயம் விற்பனை செய்து வந்தவரை போலீசார் மடிக்கி பிடித்தனர். அப்போது சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் பிடிபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற கஜேந்திரன், சுதாகர், சுரேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட ௨௬ பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி போலீசார் தங்கள் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்கணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடத்தூர், புளியம்பட்டி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, கோபி, திங்களூர், வரப்பாளையம், அந்தியூர், பவானி, சித்தோடு, மொடக்குறிச்சி, சிவகிரி, பெருந்துறை, கருங்கல் பாளையம், கொடுமுடி.

    ஈரோடு தாலுகா, சத்திய மங்கலம், ஈரோடு வடக்கு, அறச்சலூர், ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, மலைய ம்பாளையம், சென்னிமலை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்த னர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • 3 பெண்கள்-தொழிலாளி மாயமானார்கள்.
    • டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பேராநாயக்கன்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகள் மகாலட்சுமி (வயது19). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் பவித்ரமூர்த்தி (28). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருச்சுழி அருகே உள்ள ஒட்டன் குளத்தை சேர்ந்தவர் வினோத் (32). இவரது மனைவி கவுசல்யா (20). இவர் அடிக்கடி செல்போனில் பேசினார். இதனை கணவர் கண்டித்தால் சம்பவத்தன்று கவுசல்யா மாயமானார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பூங்கொடி (24). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      நாகர்கோவில்:

      சுதந்திர தினத்தை யொட்டி டாஸ்மார்க் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்துக்கு புகார்கள் வந்தது.

      இதனால் மாவட்டம் முழுவதும் சோதனை தீவிர படுத்த அவர் உத்தரவிட்டார். போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருட்டு மது விற்பனை செய்து கொண்டிருந்த செல்வி (வயது 52), செல்வசிங் (49), சோபனதாஸ் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 224 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      இரணியல் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமை யிலான போலீசார் பறையன்விளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு திருட்டுமது விற்பனை செய்து கொண்டிருந்த பாலகிருஷ்ணன் (63) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையி லான போலீசார் குருந்தன் கோடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற கஸ்தூரி (65) என்பவரை கைது செய்தார் .அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் எறும்புக்காடு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு திருட்டு மது

      விற்பனை செய்து கொண்டிருந்த சுயம்பு லிங்கம் (63) என்பவரை கைது செய்துஅவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

      அருமனை சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நெடுங்குளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த இரும்புலி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (63) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிதறால் பகுதியில் மதுவிற்ற வேலன் (48) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமா ரன் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

      அப்போது மது விற்ற சரண் (36) என்பவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 16 மது பாட்டில்கள் மற்றும் 11 ஆயிரத்து 960 பணத்தையும் பறிமுதல் செய்தனர். அம்பலக்காலை பகுதியில் மதுவிற்ற சுனில் வயது (36) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      மார்த்தாண்டம் புல்லானி பகுதியில் மது விற்ற முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த பத்மசீலன் 34 சசிகுமார் 46 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஆசாரிப்பள்ளம் சப் இன்ஸ்பெக்டர் மேரிமரிபா தலைமையிலான போலீசார் மேலசூரங்குடி சானல் கரை பகுதியில்மது விற்ற நாராயண மணி (39) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 4 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

      நேற்று மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மது விற்பனை செய்ததாக 3 பெண்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

      ×