search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டகை"

    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
    • ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


    நாகர்கோவில் : கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மங்காவிளையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்காவிளை ஊர் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்களின் வேண்டு கோளுக்கு இணங்க மாங்கா விளையில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சோதனைகள் பல வந்த போதும் இப்பகுதி மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம் என்றும் இருந்து வருகிறார்கள். ஊர் கூடி தேர் இழுப்பது போல அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறார்கள்.

    வெற்றி, தோல்வி வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது. என்றும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். உங்களின் உயர்வே எனது உயர்வு. தொடங்கப்பட்ட இப்பணிகள் விரைவில் நிறைவடையும். இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அய்யப்பன், கவுன்சிலர்கள் புனிதா கலையரசன், அமுதசெல்வி, செல்ல பெருமாள், பரமேஸ்குமார், மங்காவிளை ஊர் செயலாளர் துளசிமணி, பொருளாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் அய்யப்பன், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், டாஸ்மாக் பிரிவு செயலாளர் மணிகண்டன், புத்தளம் சிவகந்தன், தெங்கம்புதூர் முத்துகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தீ வேகமாக சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பலானது.
    • பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வேட்டங்குடியிலிருந்து தொடுவாய் செல்லும் சாலை ஓரத்தில் சீர்காழியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கீற்றுக் கொட்டகை உள்ளது.

    காலை அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து காற்று வீசும்போது பனை மரத்திலிருந்து தீ வேகமாகச் சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பல் ஆனது.

    இதில் கொட்டகைக்குள் இருந்த உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆயின.

    தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் யாரோ சில இளைஞர்கள் வந்து அங்குள்ள பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டதாகவும், பனை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் பரவி கொட்டகையில் பட்டு கொட்டகை தீயில் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றிரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    ×