search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் தோவல்"

    • ரஷிய அதிபர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
    • அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைன் அரசும் அதற்கு ஒத்துழைத்தால் பேச்சு வார்த்தையில் பங்கேற்க ரஷியாவும் தயங்காது என அதிபர் புதின் சமீபத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.

    இதுதொடர்பாக, அதிபர் புதின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-ரஷியா இடையே இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ரஷிய பயணத்தின்போது உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது.

    பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
    • போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

    புதுடெல்லி:

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

    இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

    இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காகச் செல்லும் அவர், ரஷியா மற்றும் சீனா நாடுகளின் உயரதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அஜித் தோவலின் இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்துப் பேசுகிறார். அப்போது ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கலாம் என தகவல் வெளியானது.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்னை வந்துள்ளார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வரவேற்றார்.

    சென்னை:

    சென்னை வந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வரவேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார்.
    • இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.

    கொழும்பு:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

    அஜித் தோவல் இன்று காலை கொழும்பு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அஜித் தோவல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாடியதாக தெரிகிறது.

    இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக ஆகியோரையும் சந்தித்தார்.

    இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தற்போது விரிவிடைந்துள்ளது. இதில் மொரிசியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
    • அஜித் தோவல் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் அவர் இப்பதவிக்கு நியனம் செய்யப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 3-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார்.

    அஜித் தோவல் 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நீடிப்பார். அவரது பதவிக்காலம் பிரதமரின் பதவிக் காலத்துடன் இணைந்ததாக இருக்கும்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது.

    1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார்.

    • ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார்.
    • அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி ஓடியது தவறு. அப்போதிருந்து அங்கு நிலைமை முன்னேறவில்லை. அல்-கொய்தா உள்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை அங்கு முடுக்கி விட்டுள்ளன. 40 லட்சம் மக்கள், அவசரமான மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கிடைக்கும் அபினில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து செல்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள சில நாடுகள் முயற்சிக்கலாம். இவற்றுக்கெல்லாம் நாம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரத்துக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.
    • அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு சி.ஐ.எஸ்.எப். கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காலையில் பெங்களூருவை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் காரைக் கொண்டு மோத முயன்றார். ஆனால் அவர் இடையிலேயே வழிமறித்து கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தின் போது அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 கமாண்டோ வீரர்கள் மற்றும் அஜித் தோவலுக்கு பாதுகாப்பு வழங்கும் படையின் தலைவரான டி.ஐ.ஜி மற்றும் அவரது கீழ் அதிகாரி ஆகியோர் மீது நீதி விசாரணை நடந்து வந்தது. இதில் அஜித் தோவலின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், அஜித் தோவல் வீட்டின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 கமாண்டோ வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×