என் மலர்
நீங்கள் தேடியது "slug 258761"
- அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநக ராட்சிக்குட் பட்ட வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண் காட்சி நேற்று நடைபெற் றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக் காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல் மைச்சர் தொடங்கிவைத்த திட்டங்களான, முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட் டம், மக்களை தேடி மருத்து வம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது, கன்னியாகுமரிமாவட் டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட் டம், விவசாயிகளுக்குபுதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்க றித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்,
மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யின்போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அர சின் திட்டங்களை தெரிந் துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்ப டும் அரசு நலத்திட்ட உத விகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம்.
- சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3 லட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சேலம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3 லட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90 ஆயிரம் வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளில் 80 ஆதிதிராவிடர்களுக்கும், 20 பழங்குடியினருக்கும் வழங்கப்படும். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.90 லட்சம், வங்கி கடன் ரூ.1.95 கோடி என முடிவு செய்யப்பட்டு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.90 ஆயிரம் வீதம் ரூ.1.80 லட்சம் ஆகவும், பழங்குடியினர் 1 நபருக்கு ரூ.90 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி., பான் கார்டு, அட்ரஸ் புரூப் இருக்கவேண்டும்.
விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டபின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத் தொகை டான்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள்http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
டி.என்.பாளையம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்தி ற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன்,
கள்ளிப்பட்டி நெல் கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- புதிதாக ரூ. 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.
சீர்காழி:
தருமபுரம் ஆதீனத்தின் அருள் ஆட்சிக்கு உட்பட்ட 28 தேவஸ்தானங்களிலும், ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய கட்டளை மடங்கள் பழையன புதுப்பித்தும், புதியன கட்டப்பட்டும் திறப்பு விழா செய்யப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமான் ஞானப்பால் அருந்திய சட்டநாதர் கோவில் கிழக்கு சன்னதியில் புதிதாக ரூ 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க திறந்து உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு தருமபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சொக்கநாதர் பெருமான் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருஞான சம்பந்தத ம்பிரான், சொக்கலி ங்கம்தம்பிரான், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, ஆன்மிகபேரவை ஒருங்கி ணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் மற்றும் தருமபுரம் மடத்தினை சேர்ந்த கோதண்டராமன், செந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தருமபு ரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.