search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதிகா சரத்குமார்"

    • இன்று நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
    • திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.
    • பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.

    புதுடெல்லி:

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

     சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.

    • வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

    வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்
    • வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

     

    அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது.
    • சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

    அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி வழங்கினர்.

    இந்த அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

    • நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார்.
    • தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
    • விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார். இவரது கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரக இருந்தார். எனினும், தேர்தலுக்கு முன் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்து விட்டார்.

    ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார். ஏற்கனவே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவாக இருக்கும் மாணிக்க தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தனது மனைவி ராதிகா  விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என சரத்குமார் பராசக்தி அம்மன்  கோவிலில் அங்கப்பிரதிஷ்டம் செய்தார். இவர் அங்கப்பிரதிஷ்டம் செய்யும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • கடந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
    • நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    பின்பு தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

    கடந்த மாதம் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

    அதில், "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் அவர் டேக் செய்துள்ளார்.

    இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாக பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்று பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அண்மையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
    • சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    பின்பு தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

    அண்மையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இந்நிலையில் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் அவர் டேக் செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான். அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. வினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம்.

    தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன். இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது," தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைப்பதாக" விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவோம்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்தியாவை காப்பாற்றுவதாக் கூறும் முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்கிறார்கள். அது காமெடியா இல்லை நிஜத்தில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும்.
    • பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தொகுதியில் சிறப்பான பல திட்டங்களை என்னால் கொண்டு வர முடியும். விருதுநகருக்கும் -டெல்லிக்கும் நான் பாலமாக இருப்பேன். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அடுத்த பிரதமர் மோடிஜி தான் என உறுதியாக கூறுகின்றனர். 400-க்கும் மேற்பட்ட எம்.பி. தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும். இந்த தொகுதியில் வெற்றி பெற்று நான் எம்.பி.யாக பாராளுமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

    இப்பகுதியின் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி சிகரெட் லைட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பிரச்சனையை தீர்க்க கோரிக்கை வைத்தனர். அவர் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் எடுத்துக் கூறி இறக்குமதி செய்யப்படும் சீன லைட்டர்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க செய்தார். அதனால் தற்போது லைட்டர் விற்பனை முடக்கியது.

    இப்போது சிவகாசி தீப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் இவ்வளவு நாள் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. முதல் முறையாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள். யாருக்காக இவர்கள் இரண்டு பேரும் ஓட்டு கேட்கின்றனர்? எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழக பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார். அவர் யாரை சந்திப்பார்? யாரிடம் முறையிடுவார்? ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் பீஸ் ஆகிவிட்டார். இனி அவர் என்ன செய்யப் போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×