search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐஏ அதிகாரிகள்"

    • தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாநில போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப் உத் தக்ரீர்' என்கிற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரசாரம் செய்து ஆட்களை திரட்டியதாக சென்னையில் கடந்த மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோதுதான் சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஹமீது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் யூடியூப் சேனல் வழியாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக ஹமீது உசேனின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக, இருந்த மேலும் 3 பேரும் கைதானார்கள்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்களை திரட்டியது அம்பலமானது.

    கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை போலீசார் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ராயப்பேட்டை, முடிச்சூர் ஆகிய 2 இடங்களில் இன்று காலை 5.30 மணியில் இருந்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு அப்துல் காதரின் மகன் அப்துல் ரஹ்மான் இல்லாததால் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

    அவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள். அப்துல் ரஹ்மானிடமும் விசாரணை நடத்தினர். பின்பு அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதியில் முகமது இசாக் என்பவர் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


    • மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஐ.எஸ். தொடர்புடையவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில வாரங்களில், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, மயிலாடுதுறை என 40 இடங்களில் சோதனை நடக்கிறது.

    இதில் கோவையில் மட்டும் கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடந்தது.

    இந்த வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் 16 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது.

    சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டு வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    இதபோல் பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த சையது ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.

    சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இருப்பினும் சோதனை முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் தெரியவரும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பல தகவல்களையும் கூறியுள்ளனர்.

    அவர்களிடம் பெற்ற ஆதாரங்கள், வீடியோக்களின் அடிப்படையிலேயே இன்று இந்த சோதனையானது நடந்தது.

    சென்னையில் இன்று 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது. டவுன் கரிக்காத்தோப்பைச் சேர்ந்த அன்வர்தீன், ஏர்வாடி கட்டளைத் தெருவைச் சேர்ந்த கமாலுதீன், தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் ஒருவர் வீடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆரீஸ் என்பவர் வீட்டில் இந்த சோதனை நடந்தது.

    ஒரே நேரத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.
    • ராஜா முகமது வீட்டுக்கு இன்று காலை உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. 

    • கேரளா என்.ஐ.ஏ. அதிகாரியான எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாமிட்டுள்ளது.
    • 8 பேர் கொண்ட அந்த குழுவினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும், உடனடியாக விடுதலை செய்து தங்களது நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

     இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி திருச்சி மத்திய சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை நிறைவில் சிலரின் செல்போன்களை அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கைப்பற்றி சென்றனர்.

    தற்போது செல்போன்களின் ஆய்வின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி வந்துள்ளனர். கேரளா என்.ஐ.ஏ. அதிகாரியான எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாமிட்டுள்ளது.

    8 பேர் கொண்ட அந்த குழுவினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறப்பு முகாமின் தலைவரான கலெக்டர் பிரதீப் குமாரிடம் அந்த அதிகாரிகள் அனுமதியை நாடி உள்ளனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது, என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் திருச்சியில் முகாமிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் அதிகாரிகள், சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் ஓமலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • இருவரும் துப்பாக்கி தயாரித்ததற்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மே மாதம் 20-ந் தேதி ஓமலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் 2 துப்பாக்கிகள் இருந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரித்தபோது இருவரும் செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், துப்பாக்கி தயாரித்ததில் தொடர்புடைய, அவர்களின் நண்பரான அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே கபிலன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை பூந்தமல்லியில் உள்ள தனி நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர்.

    அவர்கள் 2 பேரையும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2 பேரிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்திற்கு ரகசியமாக அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் அதிகாரிகள், சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் ஓமலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செட்டிச்சாவடியில், துப்பாக்கி தயாரித்த வீட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இருவரும் துப்பாக்கி தயாரித்ததற்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் எந்தவித தடை செய்யப்பட்ட அமைப்புடனும், இருவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே சென்ற கபிலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும் சேலத்திற்கு அழைத்து சென்றனர்.

    ×