என் மலர்
நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
- அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.
இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது. ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
- இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
மும்பை:
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.
தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.
பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.
- ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
- இலங்கை அணி 3-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் இருக்கிறது.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் 'டிரா' ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 75.56 சதவீதத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இறுதி போட்டிக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. ஆஸ்திரேலியா 15 டெஸ்டில் 10 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 136 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அடுத்து இந்திய மண்ணில் 4 டெஸ்டில் விளையாடுகிறது. 4 டெஸ்டில் தோற்றால் ஆஸ்திரேலியாவின் சதவீதம் 59.65 ஆக குறையும். ஏதாவது ஒரு டெஸ்டில் டிரா செய்தாலே அந்த அணி இறுதி போட்டிக்கு நுழைந்து விடும்.
மேலும் 4 டெஸ்டிலும் தோற்றாலும் இலங்கை-நியூசிலாந்து போட்டியை பொறுத்து முடிவு இருக்கும். ஆஸ்திரேலியா முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைய வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி 14 டெஸ்டில் 8 வெற்றி 4 தோல்வி, 2 டிராவுடன் 99 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளிகள் 58.93 ஆகும். வங்காள தேசத்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரை 4-0, 3-1 அல்லது 3-0 என்று கைப்பற்றினால் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒரு வேளை 2-0, 2-2 என்ற கணக்கில் முடிந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இதே போல இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும் போட்டியில் உள்ளன. இலங்கை அணி 5 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் 64 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளியில் 53.33 ஆக உள்ளது. அந்த அணி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 13 டெஸ்டில் 6 வெற்றி, 6 தோல்வி, 1 டிராவுடன் 76 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 48.72 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்னும் 3 டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை இறுதி போட்டியை நிர்ணயிக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்திய மண்ணில் இந்த தொடர் நடக்கிறது. இலங்கை-நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்டில் விளையாடுகிறது.
- இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும்.
- ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து ஐசிசி புதிய புள்ளிப்பட்டியலை வெளியிட்டது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 113 ரன்களில் ஆட்டமிழந்தது.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.
இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில் ஆஸ்திரேலிய அணி (66.67%) முதல் இடத்திலும், இந்தியா (64.06%) 2ம் இடத்திலும், இலங்கை (53.33%) 3ம் இடத்திலும் உள்ளன.
எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை.
இந்த நிலையில் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் 16-வது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவிற்கு காயம் அதிகளவில் இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐயின் மருத்துவக் குழு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் நிலையில், அவர் நேரடியாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- நியூசிலாந்து வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
- ஜூன் 7-ந்தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 7-ந்தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
- அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்.
- அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
புதுடெல்லி:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லோகேஷ் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்.

ஏனென்றால் ராகுல் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை தேர்ந்து எடுக்கும் போது லோகேஷ் ராகுலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப்பண்ட் விபத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் எந்தவித போட்டியிலும் விளையாடமாட்டார். பண்ட் இடத்துக்கு கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவரது பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தான் அவர் இடத்தில் ராகுலை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் தொடக்க வீரராக ஆடிய ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டார். அதோடு லோகேஷ் ராகுலின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது இடத்தில் இடம் பெற்ற சுப்மன்கில் தொடக்க வரிசையில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.
தொடக்க வீரர் வரிசையில் சுப்மன்கில் நல்ல நிலையில் இருப்பதால் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்து 6-வது வீரராக களம் இறக்கலாம் என்ற யோசனையை கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.
- ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டி ஜீன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்தியா இந்த முறை அதை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
அதேவேளையில் உலக டெஸ்ட் சாம்பியந்திப்பின் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக நுழைந்துள்ள ஆஸ்திரேலியா தனது முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கும்.
இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில் யார் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

சமீபத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வலுவான அணியாக காணப்பட்ட இந்தியாவுக்கு இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.
இரு அணிகளும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நாம் காண்போம் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
- 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை.
மும்பை:
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கபட உள்ளது. இதனை ஐசிசி அறிவித்துள்ளது.
- இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார்.
- ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
புதுடெல்லி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது. இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முடிந்ததும் சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றனர்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The technique, back foot defence, the feet movement everything looks so soothing. #WTCFinal2023 | #YashasviJaiswal pic.twitter.com/ZBMIMo7vft
— Vicky Singh (@VickyxCricket) May 31, 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலா இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
- இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.
துபாய்:
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.
விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்ட வீடியோவை ஐசிசி வெளியிட்டது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ரெட் ரிடெம்ப்ஷன் என்ற ஆக்ஷன் படத்தின் போஸ்டரில் ரோகித் சர்மா இடம் பெற்றிருக்கிறார். போஸ்டருக்கு 2021 உலக டெஸ்ட் இறுதிப் போட்டியை விட இந்தியா சிறப்பாகச் செயல்படுமா? என்றும் ரெட் பால் ரிடெம்ப்ஷன் என்ற வார்த்தையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ-யின் எமொஜியை தலைப்பாக வைத்திருக்கிறது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
- இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில் இந்திய அணி வீரர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அதை தவிர விராட் கோலி, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேமரூன் கிரீன், அலேக்ஸ் கேரி, அஸ்வின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி.
இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது:-
பேட் கம்மின்ஸ் எளிதான தேர்வாக இருந்தது. ஸ்டார்க் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், ஒவ்வோரு பந்தையும் மாறுபட்டு (variation) வீசுவதாலும் அவரை 10-வது வீரராக தேர்வு செய்தேன்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துணைக் கண்டத்திலோ அல்லது இந்தியாவிலோ நடந்தால், நான் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இந்த போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.
ஆல்-ரவுண்டராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்வேன். அவர் 8-வது இடத்தில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.