search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"

    • 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும்.
    • இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும்.

    மெல்போர்ன்:

    3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள நாதன் லயனின் வீடியோ பதிவில் 'நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக நடப்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு செஷனில் சரியாக செயல்படாவிட்டாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோற்க நேரிடலாம். ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியாக இருந்தால் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும்.

    அத்துடன் ஆதிக்கம் செலுத்தினால் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற முடியும். 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும் இந்த இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக இல்லாமல் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் போட்டியில் சவாலும், விறுவிறுப்பும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    • முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை தொடங்கிய இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. முதல் சீசனில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

    அதன்பின் நடைபெற்ற 2-வது ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    3-வது முறையாக அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வென்ற ஐசிசி சாம்பியன்ஷிப் தனக்கு உலகக் கோப்பை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    2023 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் சாய்த்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என வென்றது.
    • டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் கடும் சரிவை சந்தித்தது.

    துபாய்:

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என வென்று முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்கதேசம் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து கிடுகிடுவென முன்னேறி 5வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • அந்த மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
    • நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தேதி மற்றும் நடைபெறும் இடம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்-ஆஃப்ட் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     


    முன்னதாக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டி ஓவல் மைதானத்திலும் நடைபெற்றன. இவற்றில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.

    இரு பிரிவுகளில் முதல் இடத்தை பிடிக்கும் இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இந்த இரு அணிகளைத் தொடர்ந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்றது.
    • டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

    துபாய்:

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

    புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 68.52 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.இதை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

    1. நியூசிலாந்து – 75%

    2. இந்தியா – 59.52%

    3. ஆஸ்திரேலியா – 55%

    4. வங்கதேசம் – 50%

    5. பாகிஸ்தான் – 36.66%

    6. மேற்கிந்திய அணி -33.33 %

    7. தென் ஆப்பிரிக்கா – 25.00%

    8. இங்கிலாந்து – 21.87%

    9. இலங்கை – 00.00

    • இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
    • ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தாகும்.

    இந்நிலையில், ஐதராபாத் டெஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற சமன் செய்தபோது இந்திய அணி 54.16 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது.

    ஐதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பின்தங்கியது. 2-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் பின்தங்கி சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய அணி 54.16 புள்ளியில் இருந்து 43.33 புள்ளிகளாகக் குறைந்து இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 55.00 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், வங்காளதேசம் 4-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 50 சதவீத புள்ளிகளுடன் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
    • இதனால் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் 3-0 என பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா 56.25 சதவீதத்துடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியா 54.16 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 50 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், வங்காளதேசம் 50 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
    • இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. மற்றொன்று டிரா ஆனது. இதன்மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.

    இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.

    முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்தியா மழையால் டிரா ஆனது. இதனால் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்துள்ளது.

    பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (54.17%) 3-வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5-வது இடத்திலும், உள்ளன.

    ×