search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்கலம்"

    • உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம்.
    • இந்தியா இறுதிப்போட்டிக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    பாரீஸ்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கூறியதாவது:

    இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் மீண்டும் வென்றுள்ளோம். இந்திய ஹாக்கி அணி வளர்ந்துள்ளது. எந்தப் பெரிய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இது முழு நாட்டிற்கும் பெரிய விஷயம், எங்களுக்கும் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.

    நிறைய காத்திருக்க வேண்டிய நிலை இது. நீங்கள் பல கட்டங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஹாக்கி வீரராக, இது எளிதானது அல்ல.

    நாங்கள் ஒரு அணியாக விளையாடியதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். பயிற்சியாளர்களுக்கு நன்றி.

    இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

    பதக்கத்தின் நிறத்தை மேம்படுத்த அணி முயற்சி செய்யும். இங்கு தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் கனவாக இருந்தது. அனைவரும் எங்களை நம்பினர்.

    எப்பொழுது மைதானத்திற்கு வந்தாலும் வெற்றி பெறத்தான் வருவோம் என்பதே நமது மனநிலை. சில நேரங்களில் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. இது எங்கள் விதி என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியாவில் ஹாக்கியின் வரலாறு மிகப் பெரியது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்லவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.

    ஹாக்கிக்கு அன்பைக் கொடுங்கள், எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இதை விட சிறப்பாகச் செய்து நாட்டிற்கு பதக்கங்களை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

    இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
    • இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

    கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.

    • 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  4-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் 49.09 வினாடிகளில் இலக்கை எட்டினார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 11 தங்கத்துடன் ஜப்பான் முதல் இடத்திலும், 5 தங்கம், 7 வெள்ளி பெற்று சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • வெண்கல சிலை சென்னையில் தயாராகிறது
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் சிலை உள்ளது.

    இதையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்பொழுது பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்து வருகிறார். வெங்கல சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அழைத்து திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான பணிகள் திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் நடந்து வருகிறது. அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சிலை அமைக்கப்பட உள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது .சென்னை ஓமந்தூரார் அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தயாரித்த தீனதயாள் என்பவர் சிலையை தயாரித்து வருகிறார்.சென்னை மீஞ்சூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலசிலை தயாராகி வருகிறது. இந்த சிலையை அடுத்த மாதத்திற்குள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியுடன் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
    • 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சிஐஎஸ்சிஇ நியூ டெல்லி சார்பில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் பன்னாட்டு பள்ளி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சிஐஎஸ்சிஇ பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளியில் இருந்து 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், சம்ரிதா 26 கிலோ பெண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், தர்ஷன் 60 கிலோ ஆண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், பக்கா லோகேஸ்வர் ரெட்டி 60 கிலோ மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் விஷ்ணு ராம் 55 கிலோ எடை பிரிவு, ராகினி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். ஆசிரா 46 கிலோ எடைப்பிரிவு, வருனேஷ் 45 கிலோ எடை பிரிவு,

    சந்தோஷ் 40 கிலோ எடை பிரிவு, கமலேஷ் 50 கிலோ எடைபிரிவு, பிரணவ் 35 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடை பிரிவிலும் ,ஏகநாதன் 45 கிலோ எடை பிரிவிலும், நவ்ஷத் 66 கிலோ எடை பிரிவிலும், வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    லீனா ஸ்ரீ 14 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

    கலந்து கொண்ட பதினைந்து பேர்களில் 14 பேர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கல, பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த தோடு 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஓவரால் சாம்பிய ன்ஷிப்பும், பெற்று தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்கள் அனை வரும் ஹயாஷிகா கராத்தே கழகத்தின் தஞ்சை செயலாளர் மற்றும் பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் மற்றும் கராத்தே பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தாளாளர் திரு ஜெரால்ட் பிங்னோரா ராஜ் மற்றும் பள்ளியின் இயக்குனர் திருமதி ரபேக்கா , பள்ளியின் முதல்வர் திருமதி விஜயலட்சுமி' ஆகியோர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

    தங்கப்பதக்கம் வென்ற விஷாலினி, சம்ரிதா, தர்ஷன், பக்கா லோகேஸ்வர் ரெட்டி ஆகியோர் அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வா கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    ×