என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகிர் உசேன் கல்லூரி"

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் கருத்தரங்கம் நடந்தது.
    • தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை அனுப்பி வைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பில் இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது .

    முதல் நாள் கருத்தரங்கில் துறை தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார் பேராசிரியர் நசீர்கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினராக புதுடெல்லி இந்திய பொது நிர்வாக நிறுவன பேராசி ரியர் சுரேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பி வைத்தனர். அதை வணிகவியல் துறை சர்வதேச தரவரிசை புத்தகத்தை பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா, பாரதியார் பல்கலை கழக பேராசிரியை சுமதி ஆகியோர் வெளியிட அதை கல்லூரி ஆட்சி குழு தலைவர் அகமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அகது, ஆட்சி குழு உறுப்பினர் ஹமீது தாவூது, அப்துல் சலீம், சிராஜுதீன் முதல்வர் அப்பாஸ் மந்திரி பெற்றுக் கொண்டனர். உதவி பேராசிரியர் - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார் .

    முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் சுமதி பங்கேற்று பேசினார். 2-ம் அமர்வில் சிறப்பு விருந்தினராக மைசூர் எஸ்.டி. எம். மேலாண்மை மேம்பாடு கல்வி நிறுவன பொருளாதார உதவி பேராசிரியர் ரியாஸ் அகமது பங்கேற்று பேசினார்.

    கருத்தரங்கின் 2-ம் நாளில் உதவி பேராசிரியர் சம்சுதீன் இப்ராகிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின ராக மைசூர் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் நாகராஜா பங்கேற்று இந்திய பொருளாதாரத்தில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.

    மற்றொரு அமர்வில் உதவி பேராசிரியர் பவுசியா சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலை வர் கிருஷ்ணகுமார் நவீன வங்கி செயல்பாட்டில் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் பிராந்திய இயக்குநர் சதக்கத்துல்லா பங்கேற்று பேசினார். உதவி பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு இயற்கை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வன சரக அதிகாரி சுபாஷ் கலந்துகொண்டு இயற்கை வனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இறுதியாக இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து என் மண், என் தேசம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    நிகழ்வில் சிவகங்கை, நேரு யுவகேந்த்ரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோருடன் இணைந்து நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த நாகப்பாண்டி மற்றும் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் உசேனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.

    இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

    மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல தபேலா இசைக்கலைஙர் சாகிர் உசேன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார்.

    பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதைதொடர்ந்து, சாகிர் உசேன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகளவில் உள்ள திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாகிர் உசேன் மறைவுக்கு பிரமதர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் சாகிர் ஹுசைன் ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்.

    இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார்.

    அவர் தனது இணையற்ற தாளத்தால் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்த தபேலாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்தார்.

    இதன் மூலம், உலகளாவிய இசையுடன் இந்திய பாரம்பரிய மரபுகளை தடையின்றி இணைத்தார். இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக மாறினார்.

    அவரது சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மற்றும் ஆத்மார்த்தமான இசையமைப்புகள் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை ஊக்குவிக்கும்.

    அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உலக இசை சமூகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, சாகிர் உசேன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் ராகுல் காந்தி கூறுகையில், " சிறந்த தபேலா கலைஞர் உஸ்தாத் சாகிர் உசேனின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

    அவரது மறைவு இசை உலகிற்கு பேரிழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உஸ்தாத் சாகிர் ஹுசைன் தனது கலையின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார், அது எப்போதும் நம் நினைவில் இருக்கும்" என்றார்.

    • சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
    • பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி கல்லூரி நேரத்தில் அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஓட்டுநர் உரிமம் பெற்ற 17 மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் செய்யது அபுதாஹிர் கலந்து கொண்டார்.

    இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 895 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். மிக குறைத்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.  

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    மானாமதுரை

    75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி 3 நாட்கள் நடந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

    மழை காரணமாக கல்லூரி மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலையில் அனைத்து போட்டிகளும், இளையான்குடி ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி போட்டியை பார்வையிட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு), பொருளாளர் அப்துல் அஹது தலைமை தாங்கினர். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லா கான் தலைமையுரையாற்றினார்.

    சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    இறுதி போட்டியில் கேரள மாநிலத்தின் கிருஷ்ணா கல்லூரி அணி முதலிடம் பெற்று 7 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது. கோவை ரத்தினம் கல்லூரி அணி 2-ம் இடத்தை பெற்று 6 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது.

    கேரள மாநிலம் திருச்சூர் எம்.டி.கல்லூரி அணி 5 அடி உயர பரிசுகோப்பையுடன், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்று 3-ம் இடம் பெற்றனர். 4-ம் இடத்தை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி கைப்பற்றி 4 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 5ஆயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றது.

    சிறந்த வீரருக்கான பரிசை கோவை ரத்தினம் கல்லூரி அணி வீரர் முஹம்மது ஷானானும், சிறந்த கோல்கீப்பர் பரிசை சாகிர் உசேன் கல்லூரி அணி வீரர் ஆல்வினும் பெற்றனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஷபினுல்லாஹ் கான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் முஹம்மது அலி, செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜிமுதீன், வெற்றி, ஜென்சி, கோகுல் ஆகியோருடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    ×