என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எலி மருந்து"
- ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி,
தடைசெய்யப்பட்ட எலி மருந்து உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ரேட்டால் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்ட மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் இந்த மருந்தை விற்பனை செய்யக்கூடாது.
அதேபோல, பொதுமக்களும் இந்த மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இம்மருந்து விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிய வேளாண்துறையை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் தருமபுரி (9443635600), நல்லம்பள்ளி (7010172866), பாலக்கோடு (9952401900), காரிமங்கலம் (8526719919), பென்னாகரம் (9443207571), அரூர் (7010983841), மொரப்பூர் (6369976049), பாப்பிரெட்டிப்பட்டி (9444497505) ஆகிய வட்டாரங்களுக்கான பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.
- அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
- தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
குடிமங்கலம்:
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி கடன் திட்டங்கள், மானியத் திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மிக எளிதாக மளிகைக் கடை, பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் எலி மருந்தைப் பயன்படுத்தி பல தற்கொலைகள் நிகழ்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடோல்) பூச்சி மருந்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.அதேநேரத்தில் தடையை மீறி இந்த எலி மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எலிகளைக் கட்டுப்படுத்த தோட்டம் மற்றும் வீடுகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் பாஸ்பரஸ்க்கு எதிர்வினை மருந்து இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் விற்பனை செய்யக் கூடாது.மீறி விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகஸ்தர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் குடிமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலரை 9788425208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி பயன்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் தற்கொலை முயற்சிக்கு தூண்டுகோலாக அமையும் என்ற வணிக பெயரில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை வேளாண்மை மற்றும் இதர உப யோகங்களுக்கு பயன்படுத்த ஒன்றிய அரசு முற்றிலும் தடைவிதித்துள்ளது.
பொதுவாக மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தானது வீட்டு உபயோகங்களுக்கு எலிகளை கட்டுப்படுத்து வதற்கு பயன்படுத்தப்படு கிறது. மேலும் இதனை குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி பயன்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இதற்கு எதிர்வினை மருந்து இல்லாத காரணத்தினால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதனை தயா ரிப்பது மற்றும் பயன்படுத்து வதை முழுவதுமாக தடை செய்துள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும், பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
மேலும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர கடை விற்பனை யாளர்கள் மஞ்சள் பாஸ்ப ரஸ் எலி மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சி மருந்து தடைச்சட்டம் 1968-ன் கீழ், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
- மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா்.
காங்கயம்:
காங்கயம் ஆவங்காளிபாளையம் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 55). லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவருக்கு கடந்த பல வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா். இதையறிந்த அவரது குடும்பத்தினா் பழனிசாமியை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- மணிமேகலை கடும் வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
- 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவாணர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் இருந்த அசோக் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார்.
- இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் நாடார் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (45). இவரது கணவர் சென்னியப்பன் (54). இவர் தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.
மது அருந்தும் பழக்கம் காரணமாக சென்னிய ப்பனுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்