search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கொலை"

    • மேற்கு வங்க மக்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

    ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குவது தொடர்பான மம்தா பானர்ஜியின் முடிவு தொடர்பாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா முஜும்தார் கூறியதாவது:-

    ஜூனியர் டாக்டர்களின் சில நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்கமாட்டேன் எனத் தெரிவித்தார். மேற்கு வங்க மக்கள் நிபந்தனைகள் வைத்த நிலையில், அவர்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இது திட்டமிட்ட தோல்வி என்பது பாஜக-வுக்கு தெரியும். இதற்கு யாராவது ஒருவர் பொறுப்பு என்றால், அது போலீஸ் கமிஷனரோ, மற்ற ஒருவரோ அல்ல. முக்கியமான குற்றவாளி மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

    மக்கள் விரும்பினால் ராஜினாமா செய்வதாக அவரே தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
    • நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த வேலை நிறுத்தம் நேற்று 36-வது நாளாக நீடித்த நிலையில், கடந்த 8 நாட்களாக மாநில சுகாதாரத்துறை அலுவலகம் முன் டாக்டர்கள் தர்ணாவிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்கு திரும்புமாறு மம்மா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால், டாக்டர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்குவிடுத்தார். பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    இதையடுத்து நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் 5 நிபந்தனைகளை விதித்தனர். அவற்றில் 3 நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நகரின் வடக்கு பகுதி போலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை நீக்க மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளையும் நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தங்களின் கோரிக்கைகள் மீது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் வரை தங்களது 'பணிநிறுத்தம்' மற்றும் ஆர்ப்பாட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை பதவியில் இருந்து நீக்குவது குறித்த பானர்ஜியின் அறிவிப்பை பாராட்டிய டாக்டர்கள், இது அவர்களின் தார்மீக வெற்றி என்றும் கூறினர்.

    மேலும் "முதல்வர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் வரை நாங்கள் சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் எங்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்வோம் என்றனர்.

    • ஐந்து நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்ற மம்தா பானர்ஜி சம்மதம்.
    • கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை நீக்க மம்தா சம்மதம்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைநிறுத்தம் 36 நாட்களை கடந்துள்ளது.

    போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்கு திரும்புமாறு மம்மா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால், டாக்டர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்குவிடுத்தார். பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் ஐந்து நிபந்தனைகள் விதித்தனர். அவற்றில் மூன்று நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர், ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நகரின் வடக்கு பகுதி போலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை நீக்க மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளையும் நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    "இந்த கூட்டம் நேர்மறையாக இருந்ததாக நினைக்கிறேன். உறுதியாக அவர்களும் அப்படி நினைப்பார்கள். டாக்டர்களின் 99 சதவீத நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனென்றால் அவர்கள் எங்களுடைய இளைய சகோதரர்கள். நாங்கள் சென்று ஆலோசனை நடத்தி அதன்பிறகு போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என அவர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் நிலையைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இருந்தபோதிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவமனையின் கட்டமைப்பு உயர்த்துவதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை நீக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

    • நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்த நிலையில் சந்திப்பை நேரலை செய்தால்தான் வருவோம் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் போராட்ட களத்துக்கு சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினார்.

    இதன்பின் நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது. வீட்டுக்குள் வரமால் மழையில் நனைந்தபடி வெளியிலேயே நின்ற அவர்களை மம்தா உள்ளே அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது மருத்துவர்கள் நேரலையை மீண்டும் வலியுறுத்தினர்.

    ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் நேரலைக்கு சாத்தியமில்லை. உச்சநீதிமன்ற அனுமதி பெற்று இந்த சந்திப்பை வீடியோ பதிவு செய்து, அதன் நகல் உங்களுக்கு தரப்படும் என்று மம்தா விளக்கினார். மேலும் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார். இதனால் மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். எனவே 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

     

    மருத்துவர்கள் பொதுக்குழுக் கூட்டம் கூட்டி, பயிற்சி பெண் மருத்துவர் கொலைக் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும்,காதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் என்பவரை சி.பி.ஐ. கைது செய்தது.
    • மேலும் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    கொல்கத்தா:

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் சந்தீப் கோஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உள்பட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ், போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    இவர்கள்மீது ஆதாரங்களை அழித்தல், மோசடி ஆவணங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மலையில் நனைந்தபடி நின்றனர்
    • என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சந்திப்பை நேரலை செய்தால் மட்டுமே தாங்கள் வருவோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எனவே தங்களின் பிடிவாதத்தை விட்டு தற்போது மம்தாவை இல்லத்தில் சென்று போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்

    மம்தாவை அவரது இல்லத்தில் சந்திப்பதாக போராடும் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கு மம்தா உடனே சம்மதித்துள்ளார். அதன்படி தனது வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மலையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்து கலக்கம் அடைந்த மம்தா, நீங்கள் என்னை சந்திக்க விருப்பினீர்கள். நான் அதற்கு சம்மதித்து உங்களுக்காக காத்திருக்கின்றேன். என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள், ஏற்கவே ஒருமுறை உங்களுக்காக 2 மணிநேரம் காத்திருந்தும் நீங்கள் வரவில்லை. தயவு செய்து வீட்டுக்குள் வாருங்கள். என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.

    எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கின்றோம். நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் உள்ளே வந்து தங்களின் கோரிக்கைகைகளை எடுத்துரைத்தனர். எனவே அவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

    • எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர்.
    • நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை இரண்டு நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்திப்புக்கு மம்தா அழைத்திருந்தார்.

    ஆனால் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் 2 மணி நேரமாக மம்தா காலை இருக்கைகளுக்கு முன் காத்துக்கிடக்க நேர்ந்தது. இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் மம்தா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    இந்நிலையில்சுவஸ்திய பவன் முன் போராடும் மருத்துவர்களைச் சந்திக்க மம்தா நேரிலேயே சென்றுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் முன் உரையாற்றிய மம்தா, நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல. எனது பதவி பெரிதல்ல. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் இங்கு போராடிக்கொண்டிருந்தீர்கள். இதனால் நேற்று இரவு நான் தூங்கவேயில்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக தான் கலைப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையைத் தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி என்று மம்தா தெரிவித்திருந்தார். மம்தா அங்கிருந்து சென்ற பின்னர் ஊடகத்திடம் பேசிய பேசிய மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர். 

     

    • மம்தா வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
    • மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சகத்தின் முன் போராடி வரும் மருத்துவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி பேசுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பேசுவார்த்தயை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மருத்த மம்தா, யாரும் வராததால் 2 மணி நேரம் காலி இருக்கைகளுக்கு மத்தியில் மம்தா காத்துக்கிடந்தார். மேலும், இந்த விவகாரத்தால் தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்த மம்தா போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் நீதியை விரும்பவில்லை தனது நாற்காலியையே விரும்புகின்றனர் என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

     

    இந்நிலையில் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார். 'மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். பொதுவெளியில் அவரை புறக்கணிப்பேன். மம்தா உள்துறை அமைச்சர் பொறுப்பையும் அதே சமயம் சுகாதர அமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்துள்ளது இந்த நேரத்தில் நகை முரணாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லேடி மாக்பெத், ஹூக்லி நீரை கையில் வைத்திருந்தும் தனது கரை படிந்த கரங்களை கழுவ முடியாமல் விழிக்கிறார். மாநிலத்தின் முதல்வர் பாதுகாப்பதற்குப் பதிலாகப் போராடுகிறார். நகரங்களிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் என அனைத்து இடங்களிலும் வன்முறை தான் மலிந்துள்ளது என்று ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.

    மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மாக்பெத் என்ற படைத் தலைவன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு மன்னரைக் கொலை செய்து அரியணையைக் கைப்பற்றுவான். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வாலும், தனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தாலும் மேலும் பலரை கொன்று குவிப்பான். இதனால் நாட்டு மக்களிடையே கலவரம் வெடித்து உள்நாட்டு போர் உருவாகும்.

    தற்போது மாக்பெத்தின் சூழலில் மம்தா உள்ளதாக ஆளுநர் விமர்சித்துள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல்வாதி போல் பேசி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் சுகாதார அமைச்சகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் இன்றோ நாளையோ நாங்கள் முதல்வர் மம்தாவை சந்திக்க தயாராக இருக்கிறோம்

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியும் கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் சுகாதார அமைச்சகமான ஸ்வத்ய பவன்[Swathya Bhavan] முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு நேற்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால் ஜுனியர் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தின் கெடுவை புறக்கணித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளாக 12 முதல் 15 பேர் அடங்கிய குழு இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மம்தாவை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் 25 முதல் 35 பேர் கொண்ட குழுவாக தாங்கள் வருவோம் என்றும் முதல்வர் உடனான சந்திப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் போராடும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகள் கொண்ட புதிய கடிதத்தை மேற்கு வங்க தலைமை செயலருக்கு இமெயில் மூலம் போராடும் மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் இன்றோ நாளையோ நாங்கள் முதல்வர் மம்தாவை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று அந்த இமெயிலில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு தரப்பில் இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அப்படி நடந்தால் மம்தா- மருத்துவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.
    • அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

    இந்நிலையில் மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு எதிர்வரும் துர்கா பூஜா பண்டிகையில் கவனம் செலுத்தும்படி மம்தா பானர்ஜி கூறியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தாய் மம்தாவின் கருத்தை சாடியுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது, நாங்கள் இதுவரை எங்கள் மகளுடன் துர்கா பூஜா பண்டிகையை கொண்டாடி வந்தோம். ஆனால் இனி வரும் வருடங்கள் அனைத்திலும் அது நடக்கப்போவதில்லை. அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் எனது மகளை அவர்கள் கொலை செய்தார்கள், இப்போது அந்த கொலைக்கு நீதி கேட்கும்  போராட்டத்தையும் ஒடுக்க பார்கிறார்கள் என்று பெண் மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். 

    • கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
    • பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

    போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக

    ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.

    நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது.
    • பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நாட்டில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும்.

    குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும். கற்பழிப்பாளர்களின் வீரியம் ஒழிக்கப்பட வேண்டும்.

    பெண்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இருக்கமுடியாது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தீவிரமான தண்டனை, அவர் தனது கடைசி மூச்சு வரை தனது குற்றத்திற்காக அவதிப்படுவதை உறுதி செய்யும். மேலும், இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    ×