என் மலர்
நீங்கள் தேடியது "அர்ஷ்தீப் சிங்"
- சஞ்சு சாம்சன் சதத்தால் இந்தியா 296 ரன்கள் குவித்தது.
- அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் சாய்க்க தென்ஆப்பிரிக்கா 218 ரன்னில் சுருண்டது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன.
இந்த நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஹென்ரிக்ஸ்- ஜோர்ஜி ஜோடி நல்ல தொடக்க கொடுத்தது. ஹென்ரிக்ஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ஜோர்ஜி 81 ரன்னில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவரில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீ்ழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.
- முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சண்டிகர் முல்லான்புரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுடன் 25 வயதான அவர் பஞ்சாப் அணிக்காக 59 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முகமது ஷமியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முகமது ஷமியின் சிறந்த பந்து வீச்சு 15/3 ஆகும். அர்ஷ்தீப் சிங்கின் சிறந்த பந்து வீசு்சு 32/5 ஆகும்.
பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சந்தீப் ஷர்மா 61 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அக்சார் பட்டேல் 73 போட்டிகளில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
- பும்ரா 3 ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் நடைபெற்றும் வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி அயர்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஆண்ட்ரூ பால்பிரைன் (5), பால் ஸ்டிர்லிங் (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.
அதன்பின் அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 ரன்களை தாண்டுமா? என்ற நிலை இருந்தது.
கர்ட்டிஸ் கேம்பர் 12 ரன்களும், டெலானி 26 ரன்களும், லிட்டில் 14 ரன்களும் எடுக்க அயர்லாந்து 70 ரன்களை கடந்தது. இறுதியாக 16 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் தவிர ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக 2014 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அந்த வகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் 10-க்கும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் மேற்கொண்டார். இதுதவிர டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார்.
நேற்றைய போட்டியில் முதல் பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங் அமெரிக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்தது. அமெரிக்கா சார்பில் நிதானமாக ஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களிலும், நிதிஷ் குமார் 27 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் குவித்தனர்.
- 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
- இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைச் சேர்த்து.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சொல்கிறேன்.
ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அர்ஷ்தீப் போன்ற ஒரு வீரர் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால், நிச்சயம் பந்தை சேதப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும். அதனால் இதுகுறித்து நிச்சயம் நடுவர்கள் கவணிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு இன்சமாம் உல் ஹக் கூறினார்.
- உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்ததே பாகிஸ்தான் தான்.
- நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும்.
டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தினாரா என்பதை நடுவர்கள் கண்காணிக்கவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விமர்சித்திருந்தார்.
ஏனெனில் புதிய பந்தை போலவே 15வது ஓவரில் பழைய பந்தை அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாக இன்சமாம் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா, சூரியனுக்கு கீழே பிட்ச் காய்ந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். நாங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் விளையாடவில்லை. இங்கு அனைத்து அணிகளுக்குமே ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கிறது. எனவே இந்த அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் மூளையை பயன்படுத்துங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த எங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ரோஹித் சர்மாவுக்கு இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானி டிவி எனும் தொலைக்காட்சியில் இன்சமாம்-உல்-ஹக் பேசினார். அப்போது, "முதல் விஷயம் ரிவர்ஸ் ஸ்விங் நடந்ததாக ரோகித் ஒப்புக்கொண்டார். எனவே நான் அதை சரியாக கவனித்தது உறுதியாகியுள்ளது. இரண்டாவதாக சூரியனுக்கு கீழே பிட்ச்சில் எப்படி பந்து ரிவர்ஸ் ஆகிறது என்பதை ரோகித் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகிற்கு அதைச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இது போன்றவற்றை பேசுவது சரியல்ல என்று அவரிடம் சொல்லுங்கள்.
செய்தியாளர் அவரிடம் தவறான கேள்வியை கேட்டுள்ளார். உண்மையில் நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் பரிந்துரைத்தேன். ஏனெனில் 15வது ஓவரிலும் பந்து ரிவர்ஸ் ஸ்விங்கானது. இப்போதும் நடுவர்கள் கண்ணையும் மனதையும் திறந்து வைத்து இந்திய பவுலர்களை கண்காணிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனை. ரோகித் மூளையைப் பற்றி பேசினார். நான் கண்கள் மற்றும் மனதை திறந்து பார்க்குமாறு மட்டுமே சொன்னேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
- அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்கர்னி 107 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 44.4 ஓவரில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
அப்போது பவுலராக இருந்து சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனே ருதுராஜ் பந்தை ஆக்ரோஷமாக தரையில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இப்போட்டியில் பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கியது
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்தார்.
61 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 80 போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- இந்தியா- இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:-
யுஸ்வேந்திர சாஹலின் ஆல் டைம் ரெக்கார்டை உடைத்ததற்காக மன்னிப்பு (காதுகளின் மீது கை வைத்தவாறு மன்னிப்பு கேட்டு சைகை செய்தார்) கேட்டுக் கொள்கிறேன்.
இது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு தருணம். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. நாட்டுக்காக இன்னும் நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்து என்றும் நன்றி உள்ளனாக இருப்பேன்.
என அர்ஷ்தீப் சிங் கூறினார்.
- ஐசிசி டி20 தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் 8-வது இடத்தில் உள்ளார்.
- கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 வீரராக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் ஐசிசி டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் (17) வீழ்த்தியவர்களில் 2-வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தின் தொடக்க ஜோடி 6.2 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
- அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 214 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஷ்ரேயாஸ் அய்யர் 78 ரன்கள், கே.எல். ராகுல் 40 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 10 ஓவர்கள வீசி 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.
இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். 7-வது ஓவரின் 2-வது பந்தில் டக்கெட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 6.2 ஓவரில் 60 ரன்னாக இருந்தது.
அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டாம் பாண்டன் 41 பந்தில் 38 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் படேல் பந்தில் வெளியேறினார்.
ஹாரி ப்ரூக் (19), பட்லர் (6) ஆகியோரை ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். இறுதியாக இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- புதிய பந்தில் ராணா எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஹர்ஷித் ராணா
- ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ராவுக்கு பதில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி 20 கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அபாரமாக பந்து வீசினார் என்று அனைவருக்கும் தெரியும். அர்ஸ்தீப் சிங்கிடம் நல்ல திறமை இருக்கிறது. பும்ரா போல் அவரால் பந்து வீச முடியும். புதிய பந்தையும், பழைய பந்தையும் பயன்படுத்தி அர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார். இதனால் பும்ராவுக்கு பதில் அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக ஹர்ஷித் ராணாவை நான் குறை சொல்லவில்லை. அவரிடமும் நிறைய திறமை இருக்கின்றது. புதிய பந்தில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டத்தின் டெத் ஓவரில் பந்து வீச முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். எனவே நான் கேப்டன் ஆக இருந்தால், அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்துவேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.