என் மலர்
நீங்கள் தேடியது "தேக்கு மரம்"
- பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல்:
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவராகவும், விவசாய முன்னேற்ற கழக தலைவராகவும் இருப்பவர் செல்ல.ராசாமணி.
இவர் ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
இது தொடர்பாக கூட்டுறவு துறை சார்பாக அளித்த தகவலின்பேரில் வருவாய்துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்போது பதவி வகித்து வந்த சங்க செயலாளர் பொன்னுசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என சங்க உறுப்பினர் நாச்சிமுத்து என்பவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தேக்கு மரங்களை வெட்டுவதற்கு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும், முறையாக அனுமதி பெறாமல் வெட்டப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிரடியாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
- பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அருவங்காடு:
குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.
பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
- நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பாட்டில் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த வளாகத்தில் தேக்கு மரங்கள் இருந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் நெல்லிக் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்திடம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் இருந்தது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனுக்கு தகவல் அளித்தனர். மேலும் இரவு நேரத்தில் நகராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் யார் திருடி சென்ற மரத்தை வைத்தார்கள்? என விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுமட்டும் இன்றி வெட்டப்பட்ட தேக்கு மரத்தை நகராட்சி அலுவலர் மற்றும் ஊழியரின் உடைந்தையுடன் வைத்தார்களா? என பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி திருடப்பட்ட தேக்கு மரத்தை மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் வழங்கினார்
- ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்கள் வழங்கினார்.
கன்னியாகுமரி:
ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது சுங்கான்கடை எல்லை பகுதியில் ராகுல்காந்திக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமையில் துணை தலைவர்கள், வட்டார தலைவர்கள், கிராம ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார். மேலும் ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்களை அஜிகுமார் வழங்கினார்.
அதனை பெற்று கொண்ட ராகுல் காந்தி அந்த புறாக்களை வானில் பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் 2½ அடி உயரமுள்ள தேக்கு மரத்தாலான ராஜீவ் காந்தி உருவ சிலையை ராகுல் காந்தியிடம் அஜிகுமார் வழங்கினார்.