என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னணு எந்திரங்கள்"

    • கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
    • ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராக தொடங்கி உள்ளது.

    டெல்லியில் இது தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரச்சார கட்டுப்பாடுகள் என்று பல்வேறு வகைகளில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண் கோயல் ஆகிய மூவரும் மாநில வாரியாக சுற்றுப் பயணம் செய்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். 543 தொகுதிகளிலும் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பார்கள்.

    அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 7 கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தடவையும் அதேபோன்று ஓட்டுப்பதிவு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் 10 லட்சத்து 18 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க முதல் கட்டமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை கூடுதலாக தேவைப்படும். எனவே ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மின்னணு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில் இந்த தடவை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையர்கள் கருதுகிறார்கள்.

    இது தவிர சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    • முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

    சின்ன சின்ன அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களோ, மோதலோ ஏற்படவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகிறது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

    மாலை 6 மணிக்கு பிறகு வரிசையில் நின்றவர்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து ஓட்டு போட்டனர். இதனால் சில மையங்களில் இரவு 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பிறகே பல வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதே போன்று 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட மையங்களில் எண்ணப்படுகிறது.

    தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்தே ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசும், 4-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    டி.எஸ்.பி. அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் பல இடங்களில் அந்த பணிகள் நீடித்தன.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு இன்று காலையில் கொண்டு சேர்க்கப்பட்ட மின்னணு எந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்' என்று அழைக்கப்படும் அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    ஸ்டிராங் ரூம் அறையை சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை தாண்டி மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இப்படி வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 10 ஆயிரம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடை பெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகை யில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி யிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.

    காலை நேரம் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் மதிய நேரம் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சிறிது சுனக்கம் ஏற்பட்டது. பின்னர் மாலை நேரம் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி அளவில் 10.95 சதவீதமும், 11 மணி அளவில் 26.03 சதவீதமும், மதியம் 1 மணி அளவில் 42.41 சதவீதமும், மதியம் 3 மணி அளவில் 53.63 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 64.02 சதவீதமும் பதிவானது.

    அதைத்தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலை விட 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.

    வாக்குப்பதிவு முழுமை அடைந்தவுடன், ஓட்டு போட்ட வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. பதிவு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர மின் இணைப்புகள் முறைப்படி துண்டிக்கப்பட்டன.

    பின்னர் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி. பேட் கருவிகள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக் கொண்டனர். அப்போது படிவங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டன.

    பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் எண் வரிசைப்படி எந்திரங்கள் வைக்கப்பட்டன.

    மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகமான ஸ்ரீகாந்த், தேர்தல் பொது பார்வையாளர் ஆகிய முன்னிலையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பு அறையின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பணி நள்ளிரவு வரை நடந்து அதிகாலை 4 மணியில் நிறைவடைந்தது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 அடுக்கு பாதுகாப்பு கொண்டு வரப்பட்டது.

    இன்று முதல் அடுக்கில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், 2-ம் அடுக்கில் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாரும், 3-ம் அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 4-ம் அடுக்கில் உள்ளூர் போலீசார் என 400 போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனங்களுடன் முன்னெ ச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து நாளைமறுநாள் (சனிக்கி ழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணி க்கை தொடங்குகிறது. முதலில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு கிறது. 14 மேஜைகளில் 17 சுற்றுகள் வரை எண்ணப்ப டுகிறது. அன்று மதியம் முடி வுகள் அறிவிக்கப்படுகிறது.

    • வருவாய்த்துறையின் கண்காணிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையில் 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2007 ம் ஆண்டு உள்ள மின்னணு எந்திரங்களான 771 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 310 கட்டுப்பாட்டு கருவி என மொத்தம் 1081 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த் துறையின் கண்காணிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கணபதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×