search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி விடுதி"

    • விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் மண்டலம், குட்ல வல்லேருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மந்திரி கொள்ளு ரவீந்திரன், கலெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கங்காதரராவ் ஆகியோர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரகசிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய கேமரா பொருத்தியதாக பிரகாசம் மாவட்டம், புல்லல செருவு, அடுத்த கனிகரியை சேர்ந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவரும் அவருக்கு உதவி செய்ததாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


    அவர்களிடம் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நீங்களா கேமராக்களை பொருத்தினீர்கள் என கிண்டல் அடித்து கோஷமிட்டனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுடன் கல்லூரி முழுவதும் அதே நவீன கேமராக்களை கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் எந்த கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் விடுதிக்கு சென்றனர்.

    • கல்லூரியில் நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விடுதி கழிவறையில் (Washroom) இருந்த கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது. தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் கழிவறைக்கு செல்லவே பயப்படுகின்றன. அங்கே செல்வதையே தவிர்த்து விடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார்? என்பதுதான் மாணவிகளின் கேள்வியாக உள்ளது.

    • கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ், 7 கல்லூரி விடுதிகள்

    (3 மாணவர்கள் விடுதிகள், 4 மாணவிகள் விடுதிகள்) செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயனடையலாம்.

    இதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டிற்கும் கல்லூரிக்கும் உள்ள தூரம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

    (பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூரில் பணி புரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீத மும், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.

    மாணவ- மாணவி களுக்கு விடுதிகளில்3 வேளைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கு தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல். சாதிச்சான்று, வருமான சான்று, பள்ளி மாற்று சான்று, நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலையத்தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 30-ந் தேதி வரை ஒப்படைத்து விட்டு https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    • விழிப்புணர்வு கூட்டத்தில் ஊழியர்களுக்கு அறிவுரை
    • போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, மாண வர்களை கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து தொகுதி வாரியாக குழுமம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளி,கல்லூரி விடுதி களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கும் கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது.

    கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, உதவி இயக்குநர் மற்றும் போதை பொருள் தடுப்பு அலுவலருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு போதைபொருள்கள் வெளி இடங்களிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசுத் துறையினரும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீரா சாமி, கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    • வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.
    • காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது.

    வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.அதுபோல் குப்பக் குறிச்சியை சேர்ந்த மாணவர்களும் இதே விடுதியில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் மின்விளக்கை போடுவது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விடுதி காப்பாளர் சம்பந்தப்பட்ட மாண வர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் வெளியிலிருந்து நண்பர்களை வரவழைத்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன், தாசில்தார் சுப்புலட்சுமி, பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீதாராமன், மார்த்தாண்ட பூபதி கல்லூரி சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×