search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரை"

    • நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
    • காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

    நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது.

    நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து உரையாற்றிய அவர்,

    முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பீகார் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு. வெள்ள மேலாண்மைக்காக அசாம் மாநிலத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒடிசாவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்படும். பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ரூ.21,400 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

    நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

    25 ஆயிரம் ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டு வரப்படும். நடப்பு நிதியாண்டில் கடன்களை தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபி-யில் 4.09 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், விதிகள் எளிமையாக்கப்படும். வெளிநாடுகளில் இந்திய ரூபாய் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ஜிஎஸ்டி வரி முறை மேலும் எளிதாக்கப்படும். புற்றுநோய்க்கான 3 முக்கிய மருத்துகளுக்கு சுங்கவரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மொபைல் போன்கள், அது தொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

    தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைப்பு. பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
    • சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) காலை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அவரது உரையில்,

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும். ஆந்திராவிற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. பீகாருக்கு சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுககு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் துவங்கப்படுகிறது. மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.

    திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும். பிரதமரின் நகர்ப்புற வூட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகளின் வீடு தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் மீது உரையாற்றி வருகிறார்.
    • கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

    அவரது உரையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது மக்கள் மீண்டும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

     ✵இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ✵நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்

    ✵பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ✵வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ✵வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தப் படும் 

    ✵பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்

    ✵அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம்...

    ✵மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

    ✵கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    ✵நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ✵உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் 

    ✵பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.

    ✵20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்...

    ✵நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

    ✵ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம்.
    • கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எழுப்பிய கருத்துகளின் உரையில் கூறியிருப்பதாவது,

    1. முதலில், நீட் முறைகேடு குறித்த விவாதத்தின் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். NEET-UG 2024 முடிவுகளின் பகுப்பாய்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் ராஜஸ்தானில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையங்களில் குவிந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம். 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அதிக சதவீத விண்ணப்பதாரர்களைக் கொண்ட 50 நீட்-யுஜி தேர்வு மையங்களில், 37 மையங்கள் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மட்டும் அமைந்துள்ளன. 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 30,204 மாணவர்களில், 2,037 பேர் சிகாரைச் சேர்ந்தவர்கள். இந்த அரசு நீட் தேர்வை மறைக்க முயல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் மிக முக்கியமானது.

    2. ஒவ்வொரு உறுப்பினரும் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவாத மேடையாக பாராளுமன்றம் செயல்படுகிறது. எனவே, சபையில் ஒவ்வொரு உறுப்பினரையும் சமமாக நடத்த வேண்டும். சிறிய கட்சிகளுக்கு 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்குவது நெறிமுறைக்கு புறம்பானது. ஒவ்வொரு உறுப்பினரும் அமர்வு நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பேசும் நேரத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.

    3. தற்போது, ஒரு மணி நேர கேள்வி நேரத்தில் வாய்வழி பதில்களுக்காக ஒரு நாளைக்கு 20 கேள்விகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன, பொதுவாக 5 முதல் 6 கேள்விகள் மட்டுமே விவாதிக்கப்படும். எனவே, கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    4. எல்லை நிர்ணய நடவடிக்கையால், மீனவர் சமூகம் உட்பட பல சமூகங்களுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அவர்களின் படகுகள் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். மத்திய அரசு அவர்களை இந்திய மீனவர்களாக அங்கீகரிக்காதது வருத்தமளிக்கிறது. இந்த அமர்வில் இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    5. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2023-ம் ஆண்டு இந்தியா மீதான மத சுதந்திர அறிக்கை, சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், தாக்குதல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு, கடை உரிமையாளர்கள் தங்கள் அடையாளங்களை பெயர்ப் பலகைகளில் காட்ட வேண்டும் என்று மதப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் நிலை குறித்து சபையில் விவாதம் அவசியம்.

    6. இறுதியாக, எஸ்சி மற்றும் எஸ்டிகளின் நிலை குறித்த விவாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன. NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட SDG அறிக்கை, நாட்டில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மோசமான தோல்வியைக் குறிக்கிறது. எனவே, இந்த முக்கியமான பிரச்சினையில் விவாதம் அவசியம்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து விமர்சித்து வருகிறார்.
    • அனைவருக்கும் பொதுவான நூல் என்பதால் அது உலக பொதுமறை என போற்றப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் தத்துவாஞ்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு வருகை தந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    திருக்குறள் உலகப் பொதுமறை. அதற்கு ஜி. யூ. போப் மொழி பெயர்த்தது குறித்து கவர்னர் ரவி விமர்சிக்கிறார்.

    சமயத்தை பற்றி அவர் கூறவில்லை என்று கூறுகிறார்.திருக்குறளுக்கு திரு. வி. க.,  மு.வரதராசனார், கருணாநிதி, நாவலர் உள்ளிட்ட பலர் உரை எழுதியுள்ளனர்.

    இந்துக்களுக்கு பகவத் கீதை, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குரான் என்பது சமய நூல்கள்.  ஆனால் திருக்குறள் சமய நூல் அல்ல.

    அனைவருக்கும் பொதுவான நூல் என்பதாலேயே அது உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது.

    சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக அரைகுறையாக தெரிந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இது தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    ×