என் மலர்
நீங்கள் தேடியது "ஜெய் ஸ்ரீ ராம்"
- இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது
- அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனிருத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
- மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக சட்டப்பிரிவு 295A-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும்
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் மசூதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவது என்ன மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் 3 முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு இளைஞர் ஒருவர் செருப்பால் அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கடந்த மாதம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் 3 சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை இளைஞர் உடன் வந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன.
- நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.
காங்கிரஸ் திருவனநாதபுர எம்.பி. சசி தரூர் இந்து மதத்துக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழாவில், எழுத்தாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் பேசுகையில், "ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன. ஞான யோகம் இருக்கிறது, அது வாசிப்பு மற்றும் அறிவு மூலம் கிடைப்பது, ஆன்மீகக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் படித்துணர்வது. அதை தான் நான் முயற்சிக்கிறேன்.
பக்தி யோகம் இருக்கிறது, அதுதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். பின்னர் ராஜ யோகம் இருக்கிறது, உள்நிலை, தியானம், உங்களுக்குள் உண்மையைத் தேடுவது அது.
இறுதியாக மகாத்மா காந்தி கடைபிடித்த கர்ம யோகம், அதாவது உங்கள் சக மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்து அதன்மூலம் மூலம் கடவுளை வணங்குவது.
இந்து ஒருபோதும் வெறுப்பு என்னும் தீயை பற்றவைக்க மாட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம்முடையது [ இந்து மதம் ] மட்டுமே ஒரே வழி என்று சொல்வதற்கு இடமில்லை.
துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தை சிலர், ஒரு அடாவடியான பிரிட்டிஷ் கால்பந்து குழு போன்ற சிறு அடையாளமாக குறைக்கிறார்கள். மேலும் அவர்கள், நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லையானால் உங்களை சவுக்கால் அடிக்க போகிறேன் என்று மிரட்டுகிறார்கள். அது இந்து மதம் இல்லை. அதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
- இப்போது, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது
பாஜகவின் 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்திற்கு 'ஜெய் சிவாஜி' மற்றும் 'ஜெய் பவானி' என்ற முழக்கம் மூலம் பதிலடி கொடுக்குமாறு தனது கட்சியினரிடம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள முலுண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "யாராவது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னால், அவர்கள் ஜெய் சிவாஜி மற்றும் ஜெய் பவானி என்று கூறாமல் அங்கிருந்து செல்ல அனுமதிக்காதீர்கள். பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதை பாஜக ஆரம்பத்தில் எதிர்த்து. ஆனால் இப்போது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே பேசினார்.
- ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பி பட்டாசுகளை வெடித்தனர்.
- 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.
நேற்று நியூசிலாந்து உடனான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் நேற்று இரவு சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் 100 ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. இரு தரப்பிலிருந்தும் கல்வீச்சுக்கு சம்பவங்கள் அரங்கேறின.
பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மோவ் கூடுதல் எஸ்பி ரூபேஷ் திவேதி தெரிவித்தார்.
- நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் டிராபி பட்டம் வென்றது.
- மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்தது.
இரவு 10 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர்.
இந்நிலையில், இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் தலைகளை மொட்டையடுத்து போலீசார் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- டெல்லியில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்துகொண்டார்
- வதோதராவில் கெஜ்ரிவாலின் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை பாஜகவினர் கிழித்து எறிந்தனர்.
வதோதரா:
விஜயதசமி தினத்தில் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள் புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து கடவுள்களுக்கு எதிராக உறுதிமொழி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினர். அத்துடன், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் கவுதமை நீக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெறும் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திட்டமிட்டபடி மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கிய அரவிந்த கெஜ்ரிவால், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். இதன்மூலம், தான் இந்து மதத்திற்கு எதிரானவன் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் பாஜகவை சாடிய கெஜ்ரிவால், "அவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். கடவுளைக்கூட அவர்கள் அவமதிக்கிறார்கள்." என்றார்.