search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 பேர் கைது"

    • ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான நடந்த கொடுமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    ஆனால் ரெயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும் போலீசாரின் தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் காளைமாட்டு சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலா ளர் சிந்தனை ச்செல்வன் தலைமையில், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் அறிவு தமிழன், மேற்கு மண்டல செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் நிர்வாகிகள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து ஊர்வலமாக ரெயில் மறியலுக்கு செல்ல தொடங்கினர்.

    அப்போது காளை மாட்டு சிலை பகுதியில் தயாராக இருந்த டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர்.

    அதை மீறி நிர்வாகிகள் செல்ல முயன்றதால் 5 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியி னர் கைது செய்யப்பட்டு தயார் நிலையில் வை க்கப்பட்டிருந்த வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வெளியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்கவும், எல்லைப்பகுதியான கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது.

    பவானி, அந்தியூர், ஈரோடு தாலுகா, மலையம்பாளையம், புளியம்பட்டி, வெள்ளோடு, ஈரோடு வடக்கு, அரச்சலூர், திங்களூர், பெருந்துறை உள்பட பல்வேறு பகுதி களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீ சார் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
    • ரெயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்திக்கு விதிக்க ப்பட்ட தண்டனையை கண்டித்தும், அந்தத் தண்டனையை திரும்ப பெற வலியுறுத்தியும், இதேப்போல் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை ஈங்கூர் ரெயில் நிலையத்தில் சென்னிமலை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை ஈங்கூர் நால் ரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னிமலை வடக்கு வட்டார தலைவர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், ரவி, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, ராவுத்குமார், ஆண்ட முத்துச்சாமி, சர்வே ஸ்வரன், சென்னிமலை முன்னாள் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் தில்லை சிவக்குமார் கிருபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஈங்கூர் சண்முகம், பனியம்பள்ளி நடராஜ், வாசுதேவன், சக்திவேல், அசோகபுரம் பழனிசாமி, சீதாபதி, பழனிவேல், மணி, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஈங்கூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஈங்கூர் ரெயில் நிலையம் நுழைவாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகிகள் ரெயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்ட காங்கிர சாரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    கடலூர் சாவடியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

    கடலூர்:

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரியத்தில் 2018 ல் தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத் தின்படி 1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணி யிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திட வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கருணைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) கடலூர் சாவடியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுஅதன்படி மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் தலைமையில் சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைத் தலைவர் கருப்பையன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் செம்மண்டலம் பகுதியில் திரண்டனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் கதிர வன் மற்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்ட னர் பின்னர் போலீசார் கடலூர் சாவடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் என தெரிவித்துள்ளீர்கள்? ஏன் கடலூர் செம்மண்டலம் பகுதியில் நிர்வாகிகள் திரண்டு உள்ளீர்கள்? என கேட்டனர். அப்போது ஏராளமான நிர்வாகிகள் வரஉள்ளனர். இதன் காரணமாக அனைவரும் ஒருங்கிணைந்து கடலூர் செம்மண்ட லத்தில் இருந்து செயற்பொறியாளர் அலுவ லகம் வரை ஊர்வலமாக சென்று மறியல் போராட் டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.


    அப்போது போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது. உங்கள் போராட்டத்தை நீங்கள் அறிவித்த இடத்தில் சென்று செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். அப்போது எங்களது அடிப்படை கோரிக்கை களை வலியு றுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆகை யால் நாங்கள் இங்கி ருந்து ஊர்வலமாக தான் செல்வோம் என தெரி வித்தனர். இதன் காரண மாக போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் கடும் வாக்கு வாதம் நடந்து வந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் எங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி அந்த பகுதியில் சென்று நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடு கிறோம் என தெரிவித்த னர். ஆனால் போலீசார் செம்மண்டலம் பகுதியில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும் ஏற்கனவே அறிவித்தது போல் மறியல் போராட்டம் வழக்கம் போல் நடை பெறும். அங்கு எங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என நிர்வாகிகள் தெரிவித்தை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இத னால் செயற்பொறியாளர் அலுவலகம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
    • 581 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோைவ,

    குடியரசு தினவிழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கோவை புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம் சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 122 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல பேரூர் சப்- டிவிசனில் 10 பேர் கைது செய்யப்பட்டு 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கருமத்தம்பட்டி சப்- டிவிசனில் 5 பேர் கைது செய்யப்பட்டு 135 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி சப்- டிவிசனில் 11 பேர் கைது செய்யப்பட்டு 171 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை சப்- டிவிசனில் 3 பேர் கைது செய்யப்பட்டு 19 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சப்- டிவிசனில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புறநகரில் மொத்தமாக நேற்று ஒரே நாளில் 42 பேர் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை மாநகரில் காட்டூர், சாய்பாபா காலனி, வைசியாள் வீதி, குனியமுத்தூர், லங்கா கார்னர், கண்ணப்பன் நகர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தமாக கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தடையை மீறி மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 581 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அதை வெளியிடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 5 சப்.டிவிசன்களுக்குட்பட்ட போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    ×