என் மலர்
நீங்கள் தேடியது "சிராஜ்"
- முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
- ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.
முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.
நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.
இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.
இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.
இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.

இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது:
அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.
கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.
வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.
இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.
நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்தது
- மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து பெறும் வெற்றியை பெற்றது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
சமீபத்தில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, இத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது கண்மணி அன்போடு காதலன் பாடலை அனுமதியின்றி உபயோகித்ததாக வழக்கு தொடர்ந்தார், தற்பொழுது இந்த பிரச்சனையும் ஓங்கி எழுந்துள்ளது. இந்த வழக்கிற்கு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனியிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
- எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சிராஜ் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சிராஜ்-க்கு அம்மாநில அரசு போலீஸ் டிஎஸ்பி பதவியை வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் மகன் முதல் டிஎஸ்பி வரையிலான எனது பயணம் என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எனது அப்பா ஆட்டோ டிரைவர். எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் குறையவில்லை. எனது எதிர்காலத்திற்காக கிரிக்கெட்டை மட்டுமே நம்பினேன். நான் எப்போதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு கண்டேன்.

எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஆர்சிபி அணியில் இணைந்தது மிகப்பெரிய தருணம். அப்போதுதான் எனது உண்மையான பயணம் தொடங்கியது. அணியில் இணைந்த நேரத்தில் விராட் பாய் எனக்கு ஆதரவாக இருந்தார்.

எனது தந்தையின் மரணம் போட்டியின் போது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். அதன் பிறகும், நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவை நினைத்துப் பார்த்தேன். இதனால் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அந்த தொடரில் வெற்றி பெற்றோம்.

ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியே என்னுடையே சிறந்த பந்து வீச்சு ஆகும். அந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது வெற்றிக்கு உதவியது. அதன்பிறகு எனது செயல்பாடுகள் மேம்பட்டு வருகின்றன. எனது உழைப்பிற்காக அரசு எனக்கு டிஎஸ்பி பதவியை வழங்கி உள்ளது.

என்னுடைய இந்த பயணம் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். என சிராஜ் கூறியிருந்தார்.
- 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.
- பும்ரா 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெர்த்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே பும்ரா செக் வைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆன மெக்ஸ்வீனியை டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கம்மின்சை சிராஜ் அவுட்டாக்கினார். மேலும் பும்ரா அடுத்த ஓவரிலேயே லபுசாக்னேவை வீழ்த்த அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. உஸ்மான் கவஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
- சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார்.
- அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அடிலெய்டு:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து டிராவிஸ் ஹெட் கூறியதாவது, நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்.
- டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தினார்.
- சிராஜ் என்னை தவறாக புரிந்து கொண்டார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது . இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அப்போது டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிராவிஸ் ஹெட், "நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார் என்று சிராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சிராஜ், "டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நான் கொண்டாடினேன். பின்னர் அவர் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். இதை தொலைக்காட்சியிலும் நீங்கள் பார்க்கலாம். அப்போது நன்றாக பந்து வீசினாய் என்று டிராவிஸ் ஹெட் சொல்லவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறானது. அது எனக்கு பிடிக்காததால் கோபப்பட்டேன்" என்று தெரிவித்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி முடிகிறது.
இதனை தொடர்ந்து 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிலர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஓபராக செயல்படுகிறார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இரு தொடரிலும் தேர்ந்தெடுக்கபடலாம் எனவுக் தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை வருகிற 12-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2022 இல் இருந்து தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் சிராஜ் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
2022ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முகமது சிராஜ் தான் முதலிடத்தில் உள்ளார். 2022 இல் இருந்து தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் அவர் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், முகமது சிராஜ் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து பேசிய கேப்டன் ரோகித், "இன்னிங்சில் பந்து பழையதாகும்போது சிராஜின் பந்துவீச்சு எடுபடவில்லை. அதனால்தான் அவரை அணியில் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
- மாற்று வீரர்களாக இந்திய அணியில் இடம் பெறுகின்றனர்.
- காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் அணியில் இருந்து விலகினர்.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயமடைந்துள்ளதால் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். எனினும் மூன்று பேரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஷமியின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அவர் அணியில் இடம் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பெர்த்தில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பின்னர் பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்தியா வீரர்கள் அங்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.