என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரம்"

    • எங்கள் நிறுவனத்தில் வாங்கிய கடனை கொடுக்காததால் அவரை கொலை செய்யப்போகிறோம்.
    • நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அப்போது தஞ்சை மாவட்டம் குளிச்சப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி கார்த்திகா (வயது 31 ). இவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எனது கணவர் விஜயராகவன் குடும்ப வறுமை காரணமாக மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஆனால் பணி செய்த நாட்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 5-ம் தேதி எனது மாமியாருக்கு அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு போன் வந்தது.

    அதில் விஜயராகவன் எங்களது நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரை கொலை செய்யப் போகிறோம் என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர்.

    மறுநாளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயராகவனை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.70 லட்சம் ரொக்க பணம் வேண்டும் எனக்கூறி மிரட்டினர். அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் நாங்கள் வசிக்கும் இடத்தை அந்த நிறுவனத்தில் உள்ள ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினர். இதனால் இந்த நிறுவனத்தில் உள்ள ஒருவர் எங்களிடம் இருந்து

    ரூ. 5 லட்சம் வாங்கி சென்றார். எனது கணவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுகின்றனர் ‌‌ . நான் என் கை குழந்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

    இதனால் எந்த கணவரை அந்த நிறுவனத்திலிருந்து பத்திரமாக மீட்டு தர வேண்டும். இவ்வாறு கார்த்திகா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

    • உரிய முத்திரை தீர்வை-கட்டணத்துடன் பத்திரம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட சார்பதி வாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மதுரை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 26 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. நடப்பு 2023-24 நிதி ஆண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி, தெற்கு மாவட்டத்திற்கு ரூ.57 ஆயிரத்து 125 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதில் இந்த மாதம் வரை மதுரை வடக்கு மாவட்டத்தில் ரூ.139.29 கோடியும், தெற்கு மாவட்டத்தில் ரூ.14 ஆயரத்து 159 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அலு வலர்கள் தங்களது இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவல கங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    சார் பதிவாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவு தாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதில் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதி வாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
    • ரூ.1 லட்சத்திற்கு மேல் பாலிசி பிரிமியம் செலுத்தி திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் உத்தரவின் பேரில் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு முகாம் சீர்காழி தலைமை அஞ்சலத அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தனியார் தொலைகாட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சீர்காழியை சேர்ந்த சகோதரிகள் அருணா மற்றும் அகிலா ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தனர்.

    அவர்களுக்கு பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் சிறப்பம்ச ங்களை அஞ்சல் ஊழியர்கள் விளக்க உரையாற்றினர்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் தேவையையும்,முக்கிய அம்சங்களையும் அருணா மற்றும் அகிலா இருவரும் எடுத்துரைத்தனர்.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக பாலிசி பிரிமியம் செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் அனைத்து பொதுமக்களும் சேர்ந்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.
    • ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 200 பத்திரப்பதிவுக்கான டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.

    ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் முதல் நாளே முகூர்த்த தினம் என்பதால் பத்திரங்கள் அதிகம் பதிவாகும் என எதிர்பார்த்து 200 டோக்கன்கள் வழங்கப்பட்டது. தினமும் அதிகம் பதிவாகும் அலுவலகங்களில் 100க்கு பதிலாக, 150 டோக்கன்கள் வழங்கலாம் என்று பத்திரப்பதிவு துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார்.

    திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஜாயின்ட்-1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார் - பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இதுதவிர்த்து நல்லூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், கணியூர், உடுமலை, கோமங்கலம் என 15 அலுவலகங்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது. பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய இடங்களில் 100க்கு மேல் பத்திரங்கள் பதிவாயின. ஆயுத பூஜை முடிந்தநிலையில் பத்திரப்பதிவு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்ட பதிவாளர் லிங்கேஸ்வரன் கூறுகையில், வரும் முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கிறோம்.

    சர்வர் பிரச்னை காரணமாக பதிவு பணி சற்று தாமதம் ஆனது என்றார்.

    • இதை எதிர்த்து அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • ம.பி. உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது.

    வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்று மனுதாரர் எந்த நிபந்தனையையும் பத்திரம் எழுதும்போது விதிக்கவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள்,  ம.பி. உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.

    இதுபோன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது.

    சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    ×