என் மலர்
நீங்கள் தேடியது "பாபர் மசூதி இடிப்பு"
- மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
- மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.
மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.
மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.
- சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
- இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அலகாபாத்:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியாவைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.
- ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
- ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன
இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.
- பள்ளிகளில் ஏன் வன்முறை பற்றி கற்பிக்க வேண்டும்?
- ஆக்கப்பூர்வமான மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறோம்.
புதுடெல்லி:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், குஜராத் கலவரம் பற்றிய பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி, '3 குவிமாடம் கொண்ட கட்டுமானம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. நடத்திய ரத யாத்திரை, கரசேவகர்கள் செயல்பாடுகள், மசூதி இடிப்பு, பா.ஜ.க. அரசுகள் டிஸ்மிஸ், கலவரம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
அயோத்தி பற்றிய பகுதிகள், 4 பக்கங்களில் இருந்து 2 பக்கங்களாக சுருக்கப்பட்டுள்ளது. முந்தைய விரிவான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வழிவகுத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாய மன்னர்கள் அக்பர், ஹுமாயுன், ஷாஜகான், அவுரங்கசீப், ஜஹாங்கீர் ஆகியோரின் சாதனைகள் பற்றிய 2 பக்க பகுதி நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:-
பள்ளிகளில் ஏன் வன்முறை பற்றி கற்பிக்க வேண்டும்?. நாங்கள் ஆக்கப்பூர்வமான மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறோம். வன்முறை மனநிலையும், மனச்சோர்வும் கொண்ட மனிதர்களை அல்ல. வன்முறையை பற்றி கற்பிப்பது எங்கள் நோக்கம் அல்ல. வளர்ந்த பிறகு மாணவர்களே அதைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று புரிந்து கொள்வார்கள்.
1984-ம் ஆண்டு நடந்த கலவரம் பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டபோது இதுபோன்ற ஆட்சேபனை எழுந்தது இல்லை. எனவே, தற்போதைய எதிர்ப்பு தேவையற்றது. மேலும், பாடப்புத்தக மாற்றம் என்பது உலகம் முழுவதும் நடக்கும் நடவடிக்கை. இது ஆண்டுதோறும் நடக்கிறது. இதை மேலே இருந்து யாரும் திணிப்பது இல்லை. கல்வி நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்கிறது.
மேலும், இதை காவிமயமாக்குதல் என்பது தவறு. நடந்த உண்மைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வரலாற்றை சொல்லித் தருகிறோம். அது எப்படி காவிமயமாக்குவது ஆகும்?
சில தகவல்கள் பொருத்தமற்றவையாக மாறும்போது, அவை நீக்கப்படுகின்றன. புதிய தகவல்கள் சேர்க்கப்படுகின்றன. கொரோனா காலத்தில், மாணவர்களின் சுமையை குறைக்க சில பகுதிகள் நீக்கப்பட்டன. அதுபோல்தான் எல்லா நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
- ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி, பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது
- இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன்.
அயோத்தியில் பாபர் மசூதி சிதைந்ததை போல காங்கிரசின் கட்டமைப்பு இன்று சிதைந்விட்டது என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், இன்று காங்கிரசின் கட்டமைப்பு பாப்ரியை [பாபர் மசூதி] போல சிதைந்துவிட்டது. ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி , பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது. அடிமைத்தனத்தின் கட்டுமானம் உடைந்தது. அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதற்கான பாதை வகுக்கப்பட்டது. இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன். அவர்கள்[காங்கிரஸ்] சாதி அரசியல் மூலம் உங்களை பிரிக்கின்றனர்.
நான் சொல்வதெல்லாம் இதுதான், பிரிந்து கிடந்தால் தனித்தனியாக இருப்பீர்கள், ஒற்றுமையாக இருந்தால் எந்த தாய்க்கு பிறந்தவனாலும் உங்களின் தலை முடியைக் கூட அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்து விஷ்வ பரிஷத் உள்ளிட்ட தீவிர வலதுசாரி இந்துத்துவ இயக்கத்தினரால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் ரூ.1800 கோடி செலவில் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
