என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் குளிக்க தடை"

    • பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடு ப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விேசஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சுமார் 5 ஆயிரம் கன அடியாக அதி கரித்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் அதிகரித்து 105 அடியை எட்டும் நிலை யில் உள்ளது.

    இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக் கெடுத்து செல்கிறது.

    இதே போல் கொடிவேரி தடுப்பணையிலும் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதி களவு செல்கிறது.

    இந்த நிலையில் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பாது காப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணை முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் உள்ளது.

    இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தடுப்ப ணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது.

    நேற்றும் பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் பலத்த மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10.1 சென்டிமீட்டரும், நாலுமுக்கில் 9.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி தேயிலை தோட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை நீட்டித்துள்ளது.

    களக்காடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

    • தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் தடை நீடிப்பு.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், தற்போதும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் 2-வது நாளாக இன்றும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    • தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் குளிக்க அனுமதி.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இன்று காலை வரை பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று மாலையில் மட்டும் புலி அருவியில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இரவு தொடர்ந்து பெய்த மழையினால் மீண்டும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புலி அருவியிலும் இன்று காலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது

    அதாவது, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகமாக காணப்பட்டு வருவதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    ×