என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மாயம்"

    • கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுபோல் சேலம் தாத காப்பட்டி, தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). கடந்த மாதம் 28- ம் தேதி வீட்டில் இருந்து வேலை விஷயமாக வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    சேலம் சின்னத்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் தேவதர்ஷினி (20). இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    சேலம் திருவாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (27). கடந்த 1- ம் தேதி வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் கணவர் பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பூமிநா யக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (50). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1- ம் தேதி அருகில் உள்ள மளிகைக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயமானார்கள்.
    • இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலஅண்ணாதோப்பு பாண்டித்தெரு காம்பவுண்டை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பவித்ரா(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பவித்ராவிற்கும், அவரது வீட்டு மாடியில் வசிக்கும் வாலிபர் சரவணகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த இரு குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். அதன் பிறகு பவித்ராவிற்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற பவித்ரா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மாடி வீட்டில் வசித்த சரவணகுமாரையும் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அரசரடி முனிசிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்(44). வாடிப்பட்டி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி மீனாட்சி, தனியார் நிறுவனத்திற்காக சர்வே பணிக்கு சென்று வந்தார். மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் மோகன் வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை வீடு திரும்பிய மோகன், மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாலை திரும்பி வந்து பார்த்தபோது பெண்ணை காணவில்லை.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கந்தமேடு பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவரது மனைவி பர்வீன் (வயது 45). இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளுக்கு 17 வயது ஆகிறது. வீட்டிலேயே இருந்து வந்தார்.

    நேற்று பர்வீன் வேலைக்கு சென்று விட்டு மாலை திரும்பி வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிபர்த்தும் அந்த பெண்ணை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பர்வீன் அரூர் போலீசில் தனது மகள் காணாமல் போனது குறித்து புகர் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல பென்னாகரம் அருகேயுள்ள வி.அக்ரஹாரம் பூஞ்சோலை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் பிளஸ்-2 படித்து வரும் தனது மகளை காணவில்லை என்று பென்னாகரம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரும் திடீரென மாயமாகிவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்துள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மோனிஷா (வயது 22). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல உங்கரான அள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் உண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர்.

    இந்த வகையில் ஒகேனக்கல் அருகேயுள்ள ஏரிக்காடு பகுதியை சேர்ந்த மஞ்சு (24) என்பவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரும் திடீரென மாயமாகிவிட்டார்.

    இது குறித்து அவரது தாய் விஜய தந்த புகாரின்பேரில் ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 7-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் காலை காணவில்லை
    • 17 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் முத்துமணி இவரது மகள் சண்மதி (வயது22).

    இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் காலை காணவில்லை.

    இது குறித்து முத்துமணி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே போல் தருமபுரி மாவட்டம், பழைய புதூர் அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அருகே உள்ள குஞ்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் ஆட்டோ டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 45).

    சம்பவத்தன்று ஆட்டோ ஓட்ட சென்ற பழனி மாலை விடு திரும்பி பார்க்கும் போது அவருடைய மனைவி சாந்தி காணவில்லை. இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் பெரும்பாலை அருகே உள்ள சி.பாசிப்பாலி கோம்பை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி லாவண்யா (வயது30). இவருக்கு தர்ஷன் என்ற மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கரடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவருடைய தந்தை திருப்பூரில் வேலை செய்து வருகிறார். மாணவி தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாண வியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் ஜம்மன அள்ளி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு பால் எடுத்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் மொரப்பூர் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி அகிலா (வயது36). இருவருக்கும் மோஜித் என்ற மகன் உள்ளார்.

    கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அகிலா எம்.தோட்டம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் 7 வருடமாக வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியோர்கள் சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர்.

    இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வீட்டை வீட்டு வெளியே சென்ற அகிலா வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
    • குஜராத் மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு 9,268 பெண்களும், 2020-ம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும்.

    அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, "காணாமல் போன பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்" என கூறி உள்ளார்.

    • கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடிவருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இதில் இளைய மகள் சத்யா (வயது20). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் ராமியம்பட்டியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ராமு கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் திவ்யா. இவர் நாகனம்பட்டி அரசு கலை கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை கணேசன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நடூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். கடந்த 31-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நந்தினி என்கிற சோனியா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நந்தினி குழந்தை பெற்ற பிறகு மொரப்பூர் அருகேயுள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று நந்தினி குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மாயமாவது அதிகரித்து வருகிறது.
    • கடந்த 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடுமுழுதும் சுமார் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

    புதுடெல்லி:

    தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர்.

    இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆயிரம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள புனே–பள்ளியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கொடுமணபள்ளியைச் சேர்ந்த 17வயது சிறுமி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இதற்காக அந்த சிறுமி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மாதம் 17-ந் தேதி மாணவி, கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அந்த மாணவி, வீட்டிற்கு செல்லவில்லை.

    இதுகுறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×