என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவரப்பேட்டை விபத்து"
- எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The Mysuru-Darbhanga train accident mirrors the horrific Balasore accident—a passenger train colliding with a stationary goods train. Despite many lives lost in numerous accidents, no lessons are learned. Accountability starts at the top. How many more families must be… https://t.co/ggCGlgCXOE
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2024
- தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
- மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுதிரி மற்றும் ரெயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என ரெயில்வே அதிகாரிகள் தண்டவாளப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பாகமதி விரைவு ரெயிலை லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் ராமவதார் மீனா ஆகியோர் இயக்கிச் சென்றுள்ளனர்.
டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் லூப் லைனில் நின்றி கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.
- இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன.
- தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
#TrainAccident Drone footage shows the Chennai-Guddur section between Ponneri and Kavarappettai, where #TRAIN No. 12578 Mysuru-Darbhanga Express collided with a goods train last evening, derailing 12-13 coaches. pic.twitter.com/NVdGhZ2yUW
— अनुराग ?? (@VnsAnuTi) October 12, 2024
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
+2
- பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல பஸ்சின் வேகத்தை அதிகரித்ததால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
- பஸ் சின்னாபின்னமாக நொறுங்கியதால் காயம் அடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை.
கும்மிடிப்பூண்டி:
சென்னை கவரப்பேட்டை அருகே தச்சூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-
ஐதராபாத்தில் இருந்து சொகுசு ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 30 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ், சென்னை கவரப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்ரோடு மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. ஆம்னி பஸ்சும், லாரியும் சென்னை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இதனால் பஸ்சும் லாரியும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்றது.
லாரி முன்னே செல்ல ஆம்னி பஸ் அதன் பின்னால் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல பஸ்சின் வேகத்தை அதிகரித்தார். இதனால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
பஸ் மோதிய வேகத்தில் லாரி நொறுங்கி தலைகீழாக கவிழ்ந்தது. அதே நேரத்தில் பஸ்சும் நொறுங்கி சின்னா பின்னமானது. அதன் முன் பகுதியும், பக்கவாட்டு பகுதியும் பலத்த சேதம் அடைந்து கண்ணாடிகள் நொறுங்கின. நொடிப்பொழுதில் இந்த விபத்து நடந்து முடிந்து விட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கிய பயணிகள் கூச்சல் போட்டு உயிருக்கு போராடினார்கள். பஸ் சின்னா பின்னமாக நொறுங்கியதால் காயம் அடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை.
இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கவரப்பேட்டை போலீசாரும், பொன்னேரி தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் பஸ்சின் பாகங்களை வெட்டி அதில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த சென்னையை சேர்ந்த பயணிகள் தொக்கலா சதீஷ்குமார் (வயது 45), தும்மலா ரோஷித் (35) மற்றும் ஆந்திராவை சேர்ந்த பஸ் கிளீனர் ஸ்ரீதர் (35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. பலியான மகி கும்மிடிப்பூண்டி புதுவாயல் பகுதியை சேர்ந்தவர். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது கிராமத்தில் இருந்து லிப்ட் கேட்டு பஸ்சில் ஏறினார். சிறிது நேரத்திலேயே அவர் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார். ஆஸ்பத்திரியில் மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தை ஏற்படுத்திய பெங்களூருவை சேர்ந்த பஸ் டிரைவர் கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்