என் மலர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்"
- இசை நீரூற்று நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்
- கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 35 பேர் உலகம் முழுவதும் சாலை வழியாக கேரவன் வாகனத்தில் சென்று சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி துருக்கியில் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். அனைத்து வசதிகளையும் கொண்ட கேரவன் போன்ற வடிவமைப்புடைய 18 வாகனங்களில் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். 21 நாடுகளுக்கு சென்று அங்குஉள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட இவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
துருக்கியில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்தனர். நேற்று அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.
பின்னர் இரவு அவர்கள் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் முருகன் குன்றம் எதிரே அமைந்துள்ள இசை நீரூற்று கண்காட்சியை பார்வையிட்டனர். முன்ன தாக கன்னியாகுமரி வந்த அவர்களை இசை நீரூற்று கண்காட்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிதின் வரவேற்றார்.இன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அவர்கள் பின்னர் நேப்பாளம், பூட்டான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
- மருத்துவம் மற்றும் விளையாட்டு, அயல்நாட்டினரை ஈர்க்கும் காரணங்களில் முக்கியமானவை
- 2019ல் 10.93 மில்லியன் அயல்நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர்
இந்தியர்கள், தொன்று தொட்டு ஆன்மிக காரணங்களுக்காக நாடு முழுவதும் சுற்றுலா செல்வது வழக்கம்.
1947 சுதந்திரம் அடைந்த பிறகு அயல்நாட்டினரை ஈர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்க தொடங்கின.
சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 25, "தேசிய சுற்றுலா தினம்" (National Tourism Day) என கொண்டாடப்படுகிறது.
சுற்றுலா துறையை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கை மக்களுக்கு உணர்த்தி சுற்றுலா தலங்களையும், உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைத்து துறையை முன்னெடுத்து செல்லவும், இந்நாளில் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்தியாவின் பரந்து விரிந்திருக்கும் கலாச்சார பன்முகத்தன்மை, உணவு வகைகள், வரலாறு ஆகியவற்றின் பெருமைகளை அயல்நாட்டினர் அறிந்து கொண்டு சுற்றுலாவிற்கு அவர்களை ஈர்க்கும் வகையில் இன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கலாச்சார, இயற்கை, பாரம்பரியம், கல்வி மற்றும் தொழில் என பல வகை சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
இதை தவிர, விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்திய சுற்றுலா பெயர் பெற்றது.
இந்திய பணியாளர்களில் 15 சதவீதம் பேர் சுற்றுலா துறையில் உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தேசிய சுற்றுலா தின கருப்பொருள் வேறுபடும்.
2024ல், "நீடித்து நிற்கும் பயணங்கள், நீண்டகால நினைவுகள்" (Sustainable Journeys, Timeless Memories) என்பது கருப்பொருள்.

உலக புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையின் "உலகின் 50 அழகான நாடுகள்" பட்டியலில் இந்தியாவிற்கு 7-வது இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதம் சுற்றுலா துறையில் இருந்து வருகிறது.
2019ல், 10.93 மில்லியன் என இருந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் குறைந்திருந்தது.
பிறகு, அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இது அதிகரிக்க தொடங்கியது.
2023 அக்டோபர் வரையிலான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
- தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.
குன்னூர்:
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக குன்னூர் டென்ட்ஹில் பகுதியில் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு புனித தீர்த்த குடங்களுடன் தாரை-தப்பட்டை முழங்க, ஆடல் பாடலுடன் ஊர்வலம் தொடங்கியது. பாலகிளாவா, நீதிமன்றம், லெவல் கிராஸ், மவுண்ட் ரோடு வழியாக அணிவகுத்த ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலில் முடிவடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் டென்ட்ஹில் பகுதியில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தந்தி மாரியம்மன் திருவீதி ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.
முன்னதாக லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து லண்டனை சேர்ந்த சார்லஸ் கூறியதாவது:-
கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு தற்போது குன்னூர் வந்து உள்ளோம். இங்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, ஊர்வலத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தோம்.
எங்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கவுரவித்தனர். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வியந்து போனோம். இந்த நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாதது. தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குன்னூர் நகரமன்ற தி.மு.க. உறுப்பினர் சையதுமன்சூர் மற்றும் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.