search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபரீதம்"

    • டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே தனது நண்பர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்ட பெண், கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    முதற்கட்ட விசாரணையின்படி, நேற்று நாகினா தேவி தனது நண்பர்களுடன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்தார்.

    அவரது நண்பர்களில் ஒருவர் அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயர் தப்பினார். இவை, அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    பரபரப்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    • தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார்.

    சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது . மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் முஜாஹித் (வயது 20) என்ற வாலிபருக்கு நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

    முன்னதாக முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக அவரை ஓம்பிரகாஷ் என்பவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஜாஹித் தனக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து பேசியபோது, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பிருந்தே ஓம் பிரகாஷ் என்னை நிர்வாணமாக படம்பிடித்து தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவற்றை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். நான் வசித்து வந்த குடியிருப்பில் வைத்து என்னை ஓம் பிரகாஷ் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    இந்நிலையில் அவரது சூழ்ச்சியால் தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார். மேலும் எனது தந்தையை கொன்றுவிடுவேன் என்று ஓம் பிரகாஷ் மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

    சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

    இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.
    • சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், கோவிந்தஹள்ளியைச் சேர்ந்தவர் திருப்பதய்யா (வயது 39).

    இவர் முட்டை பஜ்ஜியை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி சுவர்ணா கடையில் முட்டை பஜ்ஜி வாங்கி வந்தார்.

    அதை திருப்பதய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.

    பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றார். வெளியே வராததால் திருப்பதய்யா மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுவர்ணா தொண்டையில் சிக்கிய பஜ்ஜியை எடுக்க முயன்றும் முடியவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருப்ப தய்யாவின் தொண்டையில் சிக்கியிருந்த முட்டை பஜ்ஜியை சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இருப்பினும் மூச்சு விட முடியாமல் திருப்பதய்யா இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டு வேலைகளை செய்யுமாறு தாய் சொல்லியும் வேலை செய்யாமல் சுமித்ராவை அவரது தாய்கண்டித்துள்ளார்,
    • வேதனை அடைந்த மாணவி வீட்டில் இருந்த பல்வேறு வகையான 26 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், பின்பு பள்ளிக்கு சென்ற போது திடீரென மயங்கிவிழுந்தார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா( வயது 18) இவர் பண்ருட்டியில் உள்ளஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்  நேற்று  வீட்டில் இருந்த போது வீட்டு வேலைகளை செய்யுமாறு தாய் கூறியுள்ார், ஆனால் வேலை செய்யாமல் சுமித்ரா இருநதார். இதனை அவரது தாய்கண்டித்துள்ளார்,

    இதனால், வேதனை அடைந்த மாணவி வீட்டில் இருந்த பல்வேறு வகையான 26 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், பின்னர் வழக்கம்போல், பள்ளி சென்றுள்ளார்  சிறிது நேரத்தில் திடீரென சுமித்ரா மயங்கி விழுந்தார், இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனே வகுப்பு ஆசிரியர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்   இதையடுத்து மாணவியை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தாய் திட்டியதால், மாணவி மாத்திரைகளை தின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்ப தகராறில் வாலிபரை மைத்துனர் குத்தி கொன்றார்.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவடடம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 32), கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்க ளுக்கு 2 குழந்தை கள் உள்ளனர். அன்னலட்சுமி யின் தாயார் சுந்தரி (42), தம்பி பொன்ராஜ் (20) ஆகியோரும் அதே தெருவில் வசித்து வருகின்றனர்.

    காமராஜூக்கும், அன்ன லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது பொன்ராஜ் அவர்களது வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பார். இது காமராஜிக்கு பிடிக்கவில்லை. அதனால் தன் குழந்தைகளுடன் பொன்ராஜ் விளை யாடும்போது கோபமாக பேசி சண்டை போடுவார்.

    இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளுடன் பொன்ராஜ் விளையாடி கொண்டிருந்தபோது காமராஜ் வழக்கம்போல் சண்டையிட்டுள்ளார்.

    அப்போதும் ஆத்திரத்தில் இருந்த காமராஜ் இரவு 9.30 மணி அளவில் பொன்ரா ஜின் வீட்டுக்கு சென்று தக ராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்தி ருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி உள்ளார். இதில் நிலைகுலைந்த பொன்ராஜை உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக பொன்ராஜின் தாயார் சுந்தரி கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.

    ×