என் மலர்
நீங்கள் தேடியது "மார்கழி"
- மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம்.
- சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
சேலம்:
மார்கழி மாதம் பிறந்து விட்டால் வீடுகளில் பெண்கள் சூரியன் உதிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர்.
அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இணைந்து வண்ணமயமான கோலங்களை இட்டு மகிழ்வர். கோலங்களில் புள்ளி வைத்து போடும் கோலம், ரங்கோலி, சிக்குக்–கலம், உருவ கோலம் இன்னும் பல வகையான கோலங்கள் உள்ளன.
மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
திறந்த வெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் உடலில் படிவதால் உடல் ஆரோக்கியம் தரும் என்பதால், அதிகாலையில் எழுந்து வீதிகளில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீதியில் கோலமிட தொடங்கினர். சேலம் டவுன், பட்டைகோவில் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்ப–டுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காண முடிந்தது. மார்கழி மாதம் முடிய பஜனை குழுவினரின் பாடல் பணி தொடரும். மார்கழி பிறப்பையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவில்,
சேலம் சுகவனேசுவரர் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை வேளையிலேயே பக்தர்கள் வழிபாட்டுக்கு சென்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் பெண்கள் அதிகாலையில் பாவை நோம்பு கடைபிடித்தனர். அங்கு கோவிலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும், பல கோவில்களிலும் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.
இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நரசிம்ம மூர்த்தி கோவில், ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
- உடல், உள்ளத்தை நல்லவிதமாக ஆக்குவதற்கு உரிய மாதம் மார்கழி.
- அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணியளவில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
திருப்பூர் :
உடல், உள்ளத்தை நல்லவிதமாக ஆக்குவதற்கு உரிய மாதம் மார்கழி. ஆண்டாள் பிறந்த நாள், திருமாங்கல்ய நோன்பு, ஆருத்ரா மஹா தரிசனம், வைகுண்ட ஏகாதசி என விசேஷ நாட்கள் இம்மாதத்தில் தான் இடம் பெறும்.அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை, உற்சவர் திருவீதியுலா, பக்தி பாடல்கள் பாராயணம், சிவாலயங்களில் தேவாரம், திருவாசகம் முற்றோதல், வைணவ தலங்களில் திருப்பாவை, திருவெம்பாவை இசைத்தல் என பக்தி மணம் கமழும். பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடர் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று மார்கழி மாதம் பிறப்பையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பெண்கள் வீட்டு வாசலில் மாக்கோலம், பொடிக்கோலம் போட்டு, மஞ்சள், மாட்டு சாணம் ஆகியவற்றில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பூக்கள் வைத்தும், அகல் விளக்குகள் வைத்தும் வழிபட தொடங்கி உள்ளனர்.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் அய்யப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில், திருப்பூர் - திருப்பதி கோவில், கோட்டை மாரியம்மன், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணியளவில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அவிநாசி, திருப்பூரில் சிவனடியார் திருக்கூட்டத்தினர் ரத வீதிகளில் வலம் வந்து திருவெம்பாவை, திருப்பாவை, தேவாரம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவற்றை பாடி வழிபடுகின்றனர்.
மார்கழி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கடைகளில் பூஜை பொருட்கள், நைவேத்யம் மற்றும் அபிேஷக பொருட்கள், பிரசாதம் செய்து வழங்க சுண்டல், பொங்கல், சாத வகைகளுக்கான பொருள் வகைகள், பூ, மாலை ரகங்கள், கோலம் போடப் பயன்படுத்தும் வெள்ளை மற்றும் வண்ண கோலப் பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
- வாழப்பாடி அருகே பழங்காலத்தில் மார்கழியில், சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு.
- ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு, பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க பேளூர், பழங்காலத்தில் வேள்வியூர் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிகத் தலமாக விளங்கியது. பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத் தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவிலும், தென் கரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், வைணவ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழியில், இப்பகுதி சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று, வழிபாடு நடத்துவதும் பல ஆண்டுகளாக மரபு மாறாமல் நடந்து வருகிறது.
நூறாண்டுக்கு மோலாக தொடர்ந்து வரும் சிறுவர்களின் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து வரவேற்று, சிறுவர்–சிறுமியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வழிபடுவர்.
பேளூரில், நிகழ்வாண்டு நடுங்கும் குளிரிலும், அதி காலையில் விழித்தெழுந்த சிறுவர்–சிறுமியர், மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு, பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது. உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாதர் சுவாமியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும், சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினர். கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும், பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
- திருவிழா ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்தி ருவிழா ஆண்டுதோறும் சிறப் பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திரு விழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.
இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கி றது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத் தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை சபை மண்டபத் தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபா ராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகை கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிர சாத், தெற்கு மண்மடம் நித் திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரி யார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக் குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட் டத்திற்கு வரவேற்பு கொடுக் கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தொடர்ந்து நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதி யின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர்கொடி யேற்றி வைக்கிறார். வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கி றார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவி லில் இருந்து எடுத்துவரப் பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலைய ரங்கத்தில் சமய சொற்பொ ழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல் வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.
விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசு வாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதி காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- கொலு மண்டபத்தில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது
- அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத் திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டிஅன்று அதிகாலை 4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும் அதைத்தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் உச்சிகால அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனை, 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் மேல்சாந்திகள் கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள்.ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது. பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளி இருக்கும் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த தாலாட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்திகள் நடத்து கிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. பின் னர் அத்தாள பூஜையும் ஏகாந்த தீபாராதனை யும் நடக்கிறது.
இந்த ஊஞ்சல் உற்சவத்தை தரிசிக்க திரளான பக்தர் கள் திரள்வார்கள். இதற்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் மண்ட கப்படி கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.
- மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.
உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியி ருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு மறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.
குளிர்ந்த வயிறை சுத்தமாக்குகிறது. இந்நாளில் துளசி இலை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.
- சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.
- கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.
முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வர பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமை படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.
அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும்பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழிதெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது. ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.
அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும். அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர். சங்கசூடனின் மனைவி துளசி மகா பதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.
அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.
பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப் பாடினாள். ஆடினாள்.
கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றால் பிறகு ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள். அவளது உயிர் மகா விஷ்ணு வின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.
அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீமகா விஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தகமாக்க காட்சி அளிப்பவர் ஆனார். மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன. அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.
ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.
சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள். ஆனால் தெய்வீக நோக்குடன் காணும்போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா. ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.
துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை. திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே. துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகா விஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.
கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச் சிக்க லாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.
இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம். கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள். சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யம்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்ப வருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீமகா விஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
- மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.
- மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.
மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.
வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி.
ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.
கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான்.
தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.
முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.
அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.
பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக் கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.
அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.
ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள்.
பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், "ஹூம்்" என்று ஓர் ஒலி எழுப்பினாள்.
அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.
ஏகாதசி
அதே நேரத்தில் ஏதுமறியாதவர் போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட
சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி,
"ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும்
அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்" என்று அருளினார்.
- மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும்.
- மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.
மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.
அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
மார்கழி ஏகாதசி
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள்.
ஞானேந்திரியம் ஐந்து, கர் மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதமாகும்.
அந்த நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ்பாடி விரதமிருந்தால், மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும் என்பது ஐதீகம்.
- இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.
- பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.
இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.
முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார்.
அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டு விடும் படியும்,
அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார்.
அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.
மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார்.
அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு,
'பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும்.
அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்' என்று வேண்டினார்கள்.
பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார்.
பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார்.
அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே,
தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று,
தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்
அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல்
வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும் என்று வரம் கேட்டனர்.
பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.
- பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம்.
- மறு பிறவியில் வைகுண்டவாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபட்ச
(வளர் பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம்.
இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது
அமுதம் வெளிப்பட்டது என்றும், துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து
தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும்,
அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹா விஷ்ணுவை துதிப்போருக்கு
இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன் மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு,
மறு பிறவியில் வைகுண்டவாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.