search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவாகரத்து வழக்கு"

    • உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
    • 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக அவரது மனைவி பாயல் அப்துல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அவர்களது திருமணம் முறிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    திருமணங்களை கலைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அவர் கோரினார்.

    உமர் மற்றும் பாயல் அப்துல்லா செப்டம்பர் 1, 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இரு மகன்களின் பாதுகாப்பில் உள்ளனர்.

    முன்னதாக, மேலும் அவரது மனைவிக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் தலா 60,000 ரூபாய் வழங்கவும் தேசிய மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.
    • நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர்.

    சென்னை:

    நெல்லையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவி. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நெல்லை குடும்பநல கோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ''திருமணத்துக்கு முன்பே தேவிக்கு புற்றுநோய் இருந்தது. அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, புற்றுநோய் பாதிப்பினால், அவரது கர்ப்பப்பையும் அகற்றப்பட்டு விட்டது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் என்னை கொடுமை செய்வதாகும். எனவே, எனக்கு விவகாரத்து வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    ஆனால், இந்த காரணத்துக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது என்று நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.எம்.டி. டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், 4 முறையும் கரு கலைந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த பின்னர்தான், அவர் புற்றுநோய் தாக்கி 3-வது கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உயிரை காப்பாற்ற கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.

    இவை எல்லாம் மனவேதனை தரும் கொடுமையாகும். அதே நேரம், இந்த காரணத்துக்காக விவாகரத்து வேண்டும் என்று குமார் கூறுவதை ஏற்க முடியாது. இவையெல்லாம் தேவி கணவனுக்கு கொடுத்த கொடுமை என்று சொல்ல முடியாது. 'எல்லாம் விதி' என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர். அதனால், இப்போது அவர் விவாகரத்து கேட்கிறார்.

    கடவுளால் காப்பாற்றப்பட்ட தேவியை அவரது கணவனிடம் இருந்து பிரிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால், இவர்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த அகில்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26).

    இவரது கணவர் அகில்ராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். கொட்டாரக்கரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக அகில்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜரானார்கள்.

    அதன்பிறகு ஐஸ்வர்யா கோர்ட்டில் இருந்து ஸ்கூட்டரில், வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்த அகில்ராஜ், தனது மோட்டார் சைக்கிளால், ஸ்கூட்டரை இடித்துள்ளார்.

    இதனால் ஐஸ்வர்யா தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அவர் மீது பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி பெட்ரோலை அகில்ராஜ் ஊற்றியுள்ளார். பின்னர் அவர் மீது லைட்டரை பற்ற வைத்து நெருப்பை வீசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அபயக்குரல் எழுப்பியவாறு சாலையில் ஓடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்,விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் தோள் மற்றும் கழுத்து பகுதியில் ஐஸ்வர்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அகில்ராஜை கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

    ×