என் மலர்
நீங்கள் தேடியது "சீரியல் கில்லர்"
- சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
- சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார்.
காத்மாண்டு:
கொலை, கொள்ளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சை கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் 1975-ல் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ், 2008-ம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.
இதற்கிடையே, வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.
- எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது.
- கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்கள் அமைக்கப்பட்டது
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாகக் கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண் ஒன்பதாவதாகக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக இயங்கி வந்த போலீசார் ஒருவழியாக குல்தீப் என்ற அந்த கொலையாளியைப் பிடித்துள்ளனர்.

எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது. இதனால் கொலையாளியின் அடுத்த நகர்வு குறித்து அறிய முடியாத போலீஸ் படையினர் , அப்பகுதிகளில் விவசாயிகள் போலவும், ஊர்க்காரர்கள் போலவும் மாறுவேடத்தில் உலவினர்.
உள்ளூர்வாசிகள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கொலையாளியின் பென்சில் ஓவியத்தை உருவாக்கி அதை வைத்துத் தேடுதலைத் துரிதப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆபரேஷன் தலாஷ் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் தான் நவாபன்ஞ் மாவட்டத்தில் உள்ள கங்காவர் என்ற பகுதியில் வைத்து குல்தீப் என்ற அந்த சீரியல் கொலையாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். குல்தீப்பிடம் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. தான் 6 பெண்களைக் கொலைசெய்ததாக குல்தீப் போலீசிடம் தெரிவித்துள்ளான்.

திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின் மனைவி அவனை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்களின்மீது குல்தீப்புக்கு வெறுப்பு உருவாகி அதுவே கொலை செய்யத் தூண்டியுள்ளது. தனியாகச் சிக்கிய அந்த பெண்கள் உடலுறவுக்கு மறுக்கவே அவர்களை குல்தீப் கொலை செய்துள்ளான். குல்தீப்பிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்
ஆந்திரப் பிரதேச மாநிலம் தெனாலியில் 4 பேரை சயநைட் கலந்த பானத்தைக் குடிக்கவைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள் மூவர் தெனாலி பகுதியில் உள்ளவர்களைக் குறிவைத்து அவர்களிடம் சினேகமாகப் பேசி சயனைட் கலந்த குளிர்பானங்களைக் குடிக்க வைத்துள்ளனர்.
அதை குடித்தவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் பெறுமதியான பொருட்களைத் திருடிச்சென்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உயிர்பிழைத்தவர்கள் அளித்த புகாரில் பேரில் விசாரணை நடத்தி வந்த ஆந்திர போலீசார் தற்போது இவர்கள் மூவரை கைது செய்துள்ளனர் சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு சயனைட் சப்ளை செய்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூவரில் 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடத்தில் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட 6 பேரை சயனைட் மூலம் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்
- ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளார்.
குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி குஜராத் உத்வாடா ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்திற்கு அருகில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக வல்சாத் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. உத்வாடா ரெயில் நிலைய சிசிடிவிகள் ஆராயப்பட்டன. பெண்ணின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அந்த சந்தேகத்துக்கிட்டமான நபரை தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என்று கண்டறியப்பட்டது.

கொலை நடந்த அன்றைய தினம் அப்பகுதியில் தான் வேலை செய்த ஓட்டலில் தனது சம்பளத்தை வாங்குவதற்காக வந்திருந்த அவர் டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார் . அந்த பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததாக கருதி அவரை கொலை செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார்.
ராகுல் கரம்வீர் ஜாட் இந்த ஒரு கொலை மட்டுமல்லாது குறைந்தது 5 பேரை கொலை செய்ததைப் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் கொள்ளையடித்து அவரை கொலை செய்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் இறுதியில் மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் மேற்கு மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகே காதிஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீடி கேட்டு குடுக்கவில்லை என முதியவர் ஒருவரை கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரை கொலை செய்துள்ளார்.
பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால் அவரை பிடிப்பதில் அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் ரெயில் நிலைய நடைமேடைகளிலேயே அவர் இரவில் தூங்கியுள்ளார்.
சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த இவர் இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராகுல் கரம்வீர் ஜாட்-டின் தந்தை காலமான பின்னர் குற்ற செயல்களில் ஈடுபட இவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐந்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது இவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார்
- கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்
பஞ்சாபில் கடந்த 18 மாதங்களுக்குள் 11 ஆண்களை கொன்ற சீரியல் கில்லர் கொலையாளி போலீசில் பிடிபட்டுள்ளார்.
ஹோஷியார்பூரில் உள்ள கர்ஷங்கரின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயதான ராம் சரூப். போலீஸ் கூற்றுப்படி கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அதன்பின் அவர்களை கொலை செய்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துணியால் அவர்களின் கழுத்தை நெரித்ததாகவும்,சிலருக்குத் தலையில் காயங்கள் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார் ராம் சரூப்.
ஆகஸ்ட் 18 அன்று மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ மற்றும் தண்ணீர் விற்கும் 37 வயது நபரை கொன்ற வழக்கில் ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து நேற்று [செவ்வாய்க்கிழமை] ராம் சரூப் கைது செய்யப்பட்டார். அதன்பின் நடந்த விசாரணையில்தான் அவர் மேலும் 10 பேரை கொலை செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
இவற்றில் 5 கொலை வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று டோல் பிளாசா மோத்ராவில் டீ மற்றும் தண்ணீர் பரிமாறப் பழகிய 37 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சரூப் மேலும் 10 பேரைக் கொன்றது தெரியவந்தது. இவற்றில் ஐந்து வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹோஷியார்பூர் மற்றும் ஃபதேகர் மாவட்டங்களில் இந்த கொலைகள் நடந்துள்ளன.
ஏப்ரல் 5 ஆம் தேதி 34 வயதான டிராக்டர் பழுதுபார்ப்பவரின் கொலை மற்றும் ஜனவரி 24 அன்று காரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் கொலை ஆகியவற்றையும் ராம் சரூப் தான் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
ராம் சரூப் -க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் ஓரினச்சேர்க்கை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார்.

- நன்சாகூ (nunchaku) ஆயுதத்தை பயன்படுத்தி அவர்களை கழுத்தை நெரிப்பார்
- நெட்ஃபிளிக்ஸில் 2022 இல் வெளியிடப்பட்ட "புட்சர் ஆஃப் டெல்லி" என்ற ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றது.
ஒரு வருடமாக பிடிபடாமல் தப்பித்து வந்த 'புட்சர் ஆஃப் டெல்லி' என்று அழைக்கப்படும் சீரியல் கில்லர் கொலையாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரகாந்த் ஜா (57). ஓல்டு டெல்லி ரெயில் நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். பீகாரின் மாதேபுரா பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த், டெல்லியின் அலிபூரில் வசித்து வந்தார். இதுவரை 18 கொடூராமான கொலைகளை செய்தவர்.
அவர், பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நட்பாக பழகுவார், பின்னர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நன்சாகூ (nunchaku) ஆயுதத்தை பயன்படுத்தி அவர்களை கழுத்தை நெரிப்பார். அவர் அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, காவல்துறையை கிண்டலடித்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் அவற்றை திகார் சிறைக்கு அருகே விட்டுச் செல்வார்.

1998 ஆம் ஆண்டு டெல்லி, ஆதர்ஷ் நகரில் ஔரங்கசீப் என்பவரை கொலை செய்ததில் இருந்து சந்திரகாந்த் ஜாவின் சீரியல் கொலைகள் தொடங்கியது. அப்போது சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார், ஆனால் 2002 இல் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் பீகாரில் இருந்து டெல்லிக்கு வந்த தனது கூட்டாளி உட்பட 18 பேரைக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, 2006 மற்றும் 2007 க்கு இடையில் சந்தர்காந்த் ஜாவின் கொடூரமான கொலைகள் டெல்லியை அச்சத்தில் ஆழ்த்தியது.
அவர் மூன்று கொலைகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு முதலில் 2013 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் 2016 இல் விடுவிக்கப்படாமல் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்த அவர் தலைமறைவானார். அவரை பிடித்துக்கொடுத்தால் ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டது.
சந்திரகாந்தின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நெட்வொர்க்கை டெல்லி போலீசார் ஆறு மாதங்களுக்கும் மேலாக கண்காணித்து வந்த நிலையில் தற்போது அவர் பிடிபட்டுள்ளார்.

சந்திரகாந்தின் வழக்கு நெட்பிளிக்ஸில் 2022 இல் வெளியிடப்பட்ட "புட்சர் ஆஃப் டெல்லி" என்ற ஆவணப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றது.