என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வாகனம்"

    • கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் காயம் அடைந்த 4 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜீமா என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயம் அடைந்த 4 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் பலியாகினர்.
    • இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது என முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ராணுவம் கண்டறிந்துள்ளது.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் இன்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

    பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர் கூட் பேயன் என்ற பகுதி அருகே சாலையின் ஒரு கூர்மையான வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில், பலத்த காயமடைந்த ராணுவ வீர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    யூனியன் பிரதேசத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது முதல் முறை அல்ல.

    கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து வீரர்கள் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் எதுவும் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நவம்பர் 4 அன்று, ரஜோரி மாவட்டத்தில் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு ராணுவ வீரர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.

    நவம்பர் 2, அன்று ரியாசி மாவட்டத்தில் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து கார் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 10 மாத மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர் மற்றும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல்.
    • 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

    வேனில் சென்று கொண்டிருந்தபோது நக்சல்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், வாகனத்தில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.

    நிலத்தில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    • பிஜப்பூரில் பாதுகாப்பு வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
    • மார்ச் 2026-க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படையினர் 8 பேர் உயிரிழந்தனர்.

    நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இச்சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    "பிஜப்பூரில் பாதுகாப்பு வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. ஆனால் நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று உறுதியளிக்கிறேன். மார்ச் 2026-க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்".

    இவ்வாறு அமித்ஷா தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.

    இது கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்காரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×