என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலகக்கோப்பை"
- வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும்.
- நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்.
ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.
வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.
ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமி இடம்பெறவில்லை.
இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.
நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்" என தெரிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையில் முகமது ஷமி விளையாடினார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.
- இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
- வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்றதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.
ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.
தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
கடந்த 2022ம் ஆண்டு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணியும் தனது டி20 உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டது. இதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.
இதன்மூலம் போட்டிகளை நடத்தும் நாடுகள் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1 முதல் 29 வரை நடக்க உள்ளது
- இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்க உள்ளது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் மே 1- ந் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக மீண்டும் நியமன செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ,
டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் கேப்டனாக நியூசிலாந்து அணியை வழி நடத்த உள்ளார்.
இதற்கு முன் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2016 -ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கும், 2021- ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி சுற்றுக்கும், 2022 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர்.
- ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சி தொண்டர்களிடம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியை "காவி நிறமாக்கும்" முயற்சிகள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் ஆட்சி முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். நம் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது வான்கடேவில் (மும்பையில்) நடந்திருந்தால் நாம் உலகக் கோப்பையை வென்றிருப்போம் என்று நம்புகிறேன்.
அவர்கள் காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். வீரர்கள் எதிர்த்தனர். இதன் விளைவாக, அவர்கள் போட்டிகளின்போது அந்த ஜெர்சிகளை அணிய வேண்டியதில்லை. பாவிகள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள்.
இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தின்போதான உரையில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் "துர்ரதிர்ஷ்டசாலி'' என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
3வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்கிற இந்திய அணியின் கனவு இந்த முறையும் கனவாகவே போனது. இருப்பினும், இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களும் இந்திய அணிக்கு பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் அவர்களின் ஒரு பாராட்டுக்குரிய செயல்திறன் மற்றும் ஒரு அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அவரது சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்.
அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்கள் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்.
அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக நுழைந்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள். உங்கள் நெகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்றார்.
- உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- போட்டியை நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இறுதிப்போட்டியை நேரில் காணவும் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மக்கள் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பொது வெளியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
- உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
- ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட இருக்கின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய நாளான நாளைய தினத்தில், சத் பூஜை முன்னிட்டு டெல்லியில் நாளை ஒரு நாள் மட்டும் மதுபானக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத் என்பது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்களால் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.
இதுகுறித்து, ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பிரதிஹர் சஷ்டி அல்லது சூர்ய சஷ்டி (சத் பூஜை) ஞாயிற்றுக்கிழமை உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.
- இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டி இருந்தது.
இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அணி வெளியேறியது.
இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத சூழல். இருப்பினும் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்து.
இதனால், அரையிறுதிக்கு 4வது அணியாக நியூசிலாந்து முன்னேறியுள்ளது. இதையடுத்து வரும் 15-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
- இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, பாபர் அசாம் 38 ரன்கள், முகமது ரிஸ்வான் 36 ரன்கள், சவுட் ஷகீல் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
பகார் சமான், இஃப்திகர் அகமது, ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்குடன் வெளியேறினர்.
35.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.
களத்தில், அகா சல்மான் மற்றும் ஷஹீன் அஃப்ரிதி ஜோடி விளையாடினர். சல்மான் 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு, அஃப்ரிதியுடன் முகமது வாசிம் ஜோடி சேர்ந்தார்.
79 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வந்தது.
இதில், அஃப்ரிடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முகமது வாசிமுடன் ராஃப் ஜோடி சேர்ந்தார். இதில், ஹரிஸ் ராஃப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழத்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இதனால், அரையிறுதியில் 4வது அணியாக நியூசிலாந்து அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.
இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
- வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
- வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.
இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று 38வது போட்டி நடைபெறுகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
- விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார்.
பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், கே.எல் ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
ஆனால், ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இதில், குயின்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார், தொரடர்ந்து, தெம்பா பவுமா-11, அய்டன் மார்க்ரம்-9, ஹெயின்ரிச் கிளாசன்-1, ராசி வேன் டெர் துசன்-13, டேவிட் மில்லர்-11, கேஷவ் மகாராஜ்-7, மாக்ரோ ஜான்சன்-14, காகிசோ ரபாடா-6, லுங்கி ங்கிடி டக் அவுட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், தென் ஆப்பிரக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களில் சுருண்டது.
இதன்மூலம், இந்திய அணி 243 ரன்களில் இமாலய வெற்றியை அடைந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்