என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிச்சந்திரன் அஷ்வின்"

    • அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார்.
    • பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது.

    அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன் 54 ரன்களை எடுத்தார். குறிப்பாக 2-வது இன்னிங்சில் ஷ்ரேயாஸ் உடன் இணைந்து அஷ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன்பின்னர் இணைந்த அஷ்வின் - ஷ்ரேயாஸ் இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.

    2-வது டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்டிலும் அஷ்வின் ஜொலித்தார். இதனை பாராட்டியிருந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சேவாக் அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-


     



    அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன்.

    வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார்.

    பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

    வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கானபேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும்.

    ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 499 விக்கெட்டுகளோடு இருந்த அஷ்வின், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியை தனது 500வது விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறார்.

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் போட்டிக்கு பிறகு அஷ்வினிடம் பேசிய, கும்ப்ளே, "ஆஷ்! வாழ்த்துகள். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும். அதற்குக் குறைவாக விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூட நீங்கள் நினைக்க கூடாது" என்று பெருமிதமாக அவர் தெரிவித்தார்.

    அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக உள்ளார். கும்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில உள்ளார்.

    உலக அளவில் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் " இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    • மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி. சேப்பாக்க அணி தரப்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் குமார் துரைசாமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாராயண் ஜெகதீசன், பாபா அபார்ஜித் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.

    4.5 ஓவர்களில் 65 ரன்கள் அடித்து சேப்பாக் அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. அதிரடியாக விளையாடிய நாராயண் ஜெகதீசன் 32 ரன்களும் பாபா அபார்ஜித் 31 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது. 

    • பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.
    • இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.

    இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று 38 ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.

    வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அஷ்வின் முகத்தில் கேக்கை பூசினர். இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.

    அதன்பிறகு அஷ்வின் கேக்-ஐ வெட்ட அணியினர் அனைவரும் அவரை வாழ்த்தி பாடினர். அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அஷ்வின், ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.

    வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் சதமடித்து அசத்தினார். 108 பந்துகளில் சதம் கடந்த அஷ்வின் பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும். 

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் முகமது 4 விக்கெட்டுகளையும்  நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    • வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சதமடித்து அசத்தினார்.
    • இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அஷ்வின் சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    தனது சொந்த மண்ணில் சதமடித்து அசத்திய அஷ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "நம் மண்ணின் சிறந்த ஆல்ரவுண்டர் அஷ்வினின் டெஸ்ட் சதத்திற்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். மிகச்சிறப்பான ஆட்டம் அஷ்வின். உங்களின் ஹோம் மைதானத்தில் மீண்டும் சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

    • சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
    • இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை ஜடேஜாவுடன் சேர்ந்து மீட்டதோடு, சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

    இந்த இன்னிங்ஸில் 112 பந்துகளில் 102 ரன்களை எடுத்துள்ள அஷ்வின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். போட்டி துவங்கியதில் இருந்து இரண்டு இடைவெளியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.

     


    அப்போது களமிறங்கிய அஷ்வின் இன்றைய ஆட்டநேரம் முடியும் வரை தனது விக்கெட்டை கொடுக்காமல், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை எடுத்துள்ளது.

    இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகர கேப்டனான எம்எஸ் டோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை மட்டும் அடித்துள்ளார். அந்த வகையில், இன்றைய போட்டியில் சதனம் அடித்ததன் மூலம் அஷ்வின் எம்எஸ் டோனி போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை நிறைவு செய்துள்ளார். சதம் அடித்த அஷ்வினுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆசியாவில் 420 டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.
    • ஆசியாவில் 612 விக்கெட்டுகளை முத்தையா முரளிதரன் வீழ்த்தியுள்ளார்.

    இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 2-ம் நாள் ஆட்டமும் மழையால் கைதுசெய்யப்பட்டது.

    இப்போட்டியின் வங்கதேச கேப்டன் சாண்டோவின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.

    ஆசியாவில் 420 டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆசியாவில் 419 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார்.

    ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 612 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.

    • இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து சாதனைகளை படைக்க வாய்ப்பு.
    • 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து சாதனைகளை படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். தற்போது ஆஸ்திரேலிய அணியின் லயன் 187 விக்கெட்டுகளையும், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 185 விககெட்டும் வீழத்தியுள்ளனர்.

    11 விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளேவின் சாதனையை அஷ்வின் முறியடிப்பார். 15 விக்கெட்டுகளை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை அஷ்வினை சேரும்.

    ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வார்னேவின் சாதனையை அவர் முறியடித்து 2-வது இடத்தை பிடிப்பார். 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் லயனை பின்னுக்கு தள்ளி அஸ்வின் 7-வது இடத்தை பிடிப்பார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம்.
    • துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ.-இன் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. சிலர் இது சரியான முடிவு என்றும், சிலர் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, சுப்மன் கில் தேர்வு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "தற்போதைய அணியில் வேறு யாரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று யோசித்து பாருங்கள். சுப்மன் கில் நியமனம் சரி அல்லது தவறு என்று என்னால் எந்த முடிவையும் கூற முடியாது. ஆனால், அவர் தான் கடந்த சீரிசிலும் துணை கேப்டனாக இருந்தார் என்ற விளக்கம் சரியாக தெரிகிறது."

    "நான் தவறாகவும் இருக்கலாம், ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் கூட துணை கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, யார் அணியின் தலைவராக இருக்கலாம் என்பதை பொருத்து நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்."

    "ரிஷப் பண்ட் மற்றும் கேல்.எல். ராகுல் என இருவரில் யார் வேண்டுமானாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த பொறுப்பை ஆடும் லெவனில் உறுதி செய்யப்பட்ட வீரரிடம் துணை கேப்டன்சி பதவியை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் சுப்மன் கில் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டால், அவர் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவிடம் உதவிகளை பெறலாம்," என்று கூறினார். 

    ×