என் மலர்
நீங்கள் தேடியது "அனுமதி இலவசம்"
- நுழைவுக் கட்டணத்தை ரத்துசெய்வதால் அதிக மக்கள் இன்று அவற்றை பார்வையிடுவார்கள்.
- பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள்.
புதுடெல்லி:
உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் 18-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பாரம்பரிய தினத்தை (நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச தினம்) முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பார்வையாளர்களை ஊக்குவிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் 3,698 நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்கள் உள்ளன. மத்திய தொல்லியல் துறை நாட்டின் வரலாற்று மரபு மற்றும் கட்டிடக் கலை சிறப்புகளுடன் கூடிய இந்தத் தலங்களை மக்கள் பார்வையிட்டு அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் அதிக மக்கள் இந்த தினத்தில் அவற்றை பார்வையிடுவார்கள். இதன்மூலம் நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் இன்று முதல் ரோபோட்டிக் கண்காட்சி நடக்கிறது.
- இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் சார்பில் ரோபோட்டிக் பொருட்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. பொருட்காட்சியில் குழந்தை களை மகிழ்விக்க மாபெரும் பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற எண்ணற்ற பொழுது போக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாவிற்கு ருசியாக வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் கூறியதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை யாக பொருட்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம். பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு கூப்பன் வழங்கி தினந்தோறும் 50 நபர்களுக்கு அழகிய சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் பொருட்காட்சி வளாகத்தில் உள்ள வித விதமான 20 வகையான ராட்டினங்களில் விளையாட கட்டணங்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
- அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.
ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.
மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.