search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்டர் கவாஸ்கர் டிராபி"

    • உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும்.
    • நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான் என்றார் நாதன் லயன்.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாகும்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் கூறியதாவது:

    10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது. எங்களுடைய சொந்த மண்ணில் விஷயங்களை திருப்புவதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும். ஆனாலும் நாங்கள் விஷயங்களை திருப்பி கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கிறோம்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நாங்கள் வித்தியாசமான அணியாக இருப்பதாகவும் கருதுகிறேன்.

    நாங்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம்.

    இம்முறை இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அதிக பேச்சுகள் வருகின்றன. இதுவரை அவருடன் விளையாடவில்லை. நிச்சயம் அது எங்கள் அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதை கவனமாக பார்த்தேன். நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான்.

    இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் மற்றும் திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.

    எப்போதும் கிரிக்கெட்டை பற்றி ஆலோசிக்கவும், பேசவும் விரும்புவேன். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுடன் ஆலோசிக்கும்போது அவர்களிடம் இருந்து எனக்கு தெரியாத சில விஷயங்கள் கிடைக்கும். கிரிக்கெட்டை பற்றி ஏராளமான தகவல் பலரிடமும் உள்ளது. அதனை கண்டறிந்து நாம் ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது.
    • இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இதற்கிடையே, இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், இது 5 போட்டிகள் கொண்ட தொடராக உள்ளது. கடந்த இரண்டு முறை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் ஒருபோதும் முனையப் போவதில்லை. எங்காவது டிரா இருக்கும். மோசமான வானிலை இருக்கும். எனவே, இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என தெரிவித்தார்.

    • உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார்.
    • 61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முகமது சிராஜுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த டெஸ்டில் ஆடிய வீரர்களே இடம் பெற்றனர்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். டிரெவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறக்கினார்கள்.

    முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடினார்கள். சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார். தொடர்ந்து ஆடிய ஹெட் தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. மார்னஸ் லாபுசேன் 3 எடுத்திருந்த நிலையில் முகமது சமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து கவாஜா - ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி வருகின்றனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், சமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

    • பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொரில் கடந்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். ஆனால், குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார். 3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.

    • இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளம் மெதுவான தன்மையுடன், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடுகளம் வறண்டு காணப்படுவதால் சீக்கிரமே வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இந்த டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜாவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை.

    இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

    பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவருக்கு காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதிக்கு தேர்வானதை அடுத்து அவருக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

    2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற வீரர்களின் விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஜெயதேவ் உனத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ரஞ்சி கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஜெயதேவ் உனத்கட் விளையாடவுள்ளார்.

    இவரை தொடர்ந்து காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத அய்யர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இடம் பெறுவது கடினம் என தகவல் வெளியாகி உள்ளது.

     

    என்.சி.ஏ-ல் பயிற்சி பெற்று வரும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வது போல சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட திரும்புவதற்கான விதிமுறை குறைந்தபட்சம் உள்நாட்டு சுற்றுகளில் ஒரு ஆட்டத்தையாவது விளையாடுவதாகும்.

    எனவே உடனடியாக டெஸ்ட் அணியில் இடம் பெறுவது கடினமாகும். ரஞ்சி டிராபி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஐயர் தனது உடற்தகுதியை நிரூபிக்க மார்ச் 1-5 வரை நடைபெறும் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு விளையாட அழைக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா, பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய முகாமில் சேர்வதற்கு முன்பு தமிழ்நாடு அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த நிலையில் இந்திய அணியின் சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லபுஷேன் 49, மாட் ரென்ஷா 0, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 6, டாட் மர்பி 0 என வெளியேறினர். தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தேநீர் இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 177 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷேன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நாக்பூர்:

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர்.

    அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 

    உணவு இடைவேளை முடிந்து வந்த நிலையில் இந்திய அணியின் சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லபுஷேன் 49, மாட் ரென்ஷா 0, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 6, டாட் மர்பி 0 என வெளியேறினர்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

    முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
    • விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார்.
    • 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

    அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ×