என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமுறை"

    • 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை தஞ்சை திலகர் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு அன்று மாலை 6 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை தஞ்சை திலகர் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இது குறித்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை திலகர் திடலில் நாளை மறுநாள் (18-ந்தேதி) மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 6.15 மணிக்கு திருமுறை விண்ணப்பம், 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

    தொடர்ந்து 7 மணிக்கு கயிலை வாத்தியம், 7.30 மணிக்கு லட்சுமணனின் தெருக்கூத்து, 8.15 மணிக்கு காமாட்சி பத்மநாபன் குழுவினரின் நாத இசை சங்கமம், 9 மணிக்கு சீர்காழி சிவசிதம்பர குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு ராமலிங்கம் குழுவினரின் பட்டிமன்றமும், 11:30 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும், 12 மணிக்கு கலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியமும்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு திவ்யசேனாவின் குச்சிப்புடி நடனமும், அதிகாலை 1 மணிக்கு தேன் மொழி ராஜேந்திரனின் காவடியாட்டம், 1.30 மணிக்கு கரகாட்டம், 2 மணிக்கு நையாண்டி மேளம், 2.30 மணிக்கு சிவன் சக்தி ஆட்டம் நடைபெறுகிறது.

    3 மணி முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்து சிற்பி, ஸ்ரீகாந்த், ஹரிகரன் மாளவிகாசுந்தர்,சோனியா குழுவினரின் இசை சங்கமம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமுறை புத்தகங்களை யானை வாகனத்தில் வைத்து வீதியுலா காட்சி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவார பதிகங்கள் பாடி வீதியுலா வந்தனர்.

    வேதாரண்யம்,:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 12-ந்தேதி இரவு திருவாசகம், திருமந்திரம், சிவபுராணங்கள் அடங்கிய திருமுறை புத்தகங்களை யானை வாகனத்தில் வைத்து, வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா காட்சி நடந்தது.

    இதில் கோவில் ஓதுவார் மூர்த்திகள் பரஞ்ஜோதி, திருவாரூா் சந்திரசேகர், முத்துக்குமார், திருசெங்காட்டாங்காடி செல்வமுத்துகுமார், சிவகாசி ரமேஷ், மிருதங்க வித்வான் கடலூர் ராஜேஷ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், சச்சிதானந்தம், சேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவார பதிகங்களை இசையுடன் பாடி வீதியுலா வந்தனர்.

    ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • ஆடி அமாவாசை தினமான அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவிலாகும். இந்த கோவிலில் சமய குறவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் தடுத்தாட்கொண்ட தலமாகும். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த தலத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள தலை சிறந்த ஓதுவாமூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சேர்ந்திசையில் திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஓதுவா மூர்த்திகளை மேளதாளம், நாதஸ்வரம், கைலாய வாத்தியம் முழங்க இந்து ஆன்மீக பேரவை மற்றும் சிவனடியார்கள் கூட்டத்தினர் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுக ளை கோவில் நிர்வாகத்தினர், ஒதுவாமூர்த்தி கள் நல சங்கத்தினர், இந்து ஆன்மீக அறக்கட்டளையினர் மற்றும் ஆலய ஓதுவா மூர்த்தி ராஜ்குமார் சிவனடியார்கள், சிவதொண்ட ர்கள் செய்தனர்.

    ×