search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் நிறுவனம்"

    • நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், நெய், வெண்ணெய், பன்னீா், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களையும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையுமின்றி விற்பனை செய்துவருகிறது.

    இதில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம்.

    அந்த வகையில், கிருஷ்ணஜெயந்தி (ஆக.26-ந்தேதி), விநாயகா் சதுா்த்தி (செப்.7-ந்தேதி) உள்ளிட்ட பண்டிகை களை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, ரூ.85-க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ.75-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

    இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள் கண்காணிப்பார்கள்.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது.

    மேலும் எருமை மாடுகள் வளர்க்கும் செலவை தாங்க முடியாத விவசாயிகளுக்கு கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உதவி செய்யப்படும்.

    தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை கடந்த 2007-ம் ஆண்டு 11.8 லட்சமாக இருந்தது. 2019 கணக்கெடுப்பின் படி 5.19 லட்சமாக குறைந்து இருக்கிறது.

    பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் பால் உற்பத்தியும் மேம்பட்டு உள்ளது.

    எனவே தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகள் தத்தெடுக்க ரூ.8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் 6 மாத வயதுடைய பெண் எருமை கன்றுகள் தேர்வு செய்யப்படும். அதற்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு 32 மாதம் வரை கண்காணித்து உணவு மற்றும் தாது கலவைகள் வழங்கப்படும்.

    பால் பண்ணையாளர்களுக்கு புரோட்டீன் நிறைந்த தீவனம், தாது கலவைகளை 26 மாதங்களுக்கு வழங்குவதுடன் இலவச மருத்துவ சேவைகளும் வழங்கப்படும்.

    இந்த பராமரிப்பின் மூலம் ஒரு நாளைக்கு 1.5 கிலோ வரை எடை அதிகரிக்கும். பின்னர் 26 முதல் 32 மாதம் வரை ஒரு நாளைக்கு 1.75 கிலோ அதிகரிக்கும். கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள் கண்காணிப்பார்கள்.

    எருமை வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக இருந்தாலும் செலவு மற்றும் தட்பவெப்ப நிலைகளால் சந்திக்கும் பிரச்சனைகளை மனதில் கொண்டு எருமை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் அறிவியல் தொழில் நுட்ப முறையில் செயற்கை கரூவூட்டல் மூலம் இனப்பெருக்க நுட்பங்களையும் செயல்படுத்தி உள்ளனர்.

    இந்த திட்டத்தின் மூலம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தி மேம்படும். ஆவின் நிர்வாக இயக்குனர் எஸ்.வினீத் கூறும்போது, கன்று வளர்ப்பு முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் உயர்தர பாலுக்கான முதன்மை ஆதாரமாக விளங்கும் எருமை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றார்.

    • ஆவின் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுக்கும், விற்பனைப் பிரிவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
    • தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பாலகங்களும்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமே, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். ஆவின் பாலகங்கள் கேட்கும் பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்வதில்லை என்றும், குறைந்த அளவில் விற்பனையாகும் தயிர், நூடுல்ஸ், இனிப்பு வகைகள், பிஸ்கெட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன என்றும், இவற்றை கட்டாயம் வாங்க வேண்டும் என்று ஆவின் பாலகங்களை ஆவின் நிறுவனம் வற்புறுத்துகிறது என்றும், இந்தப் பொருட்கள் அனைத்தும் காலாவதி காலம் நெருங்கும் நேரத்தில் விநியோகிக்கப்படுகின்றன என்றும் பால் முகவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

    இதற்குக் காரணம், ஆவின் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுக்கும், விற்பனைப் பிரிவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இது மட்டுமல்லாமல், மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, ஆவினுக்கு வருமானம் வந்தால்போதும் என்ற நிலையில் ஆவின் நிறுவனம் செயல்படுவது மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. திறமையற்ற அரசு தி.மு.க. அரசு என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையில்லை. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பாலகங்களும்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிகாலை 3, 4 மணிக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும்
    • போராட்டத்தில் டிரைவர்களிடம் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஆவின் பால் பண்ணை நிறுவனம் நாள் ஒன்றுக்கு காலை நேரத்தில் மட்டும் பேக்கிங் செய்யப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது.

    இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவன வாகனங்கள் மட்டுமல்லாமல் வாடகை வாகனங்கள் மூலமாகவும் மாவட்ட முழுவதும் ஆவின் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    அந்த வகையில் 46 வேன், டெம்போ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆவின் நிறுவனம் கடந்த 45 நாட்களுக்கு உரிய வாடகை பாக்கி தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) காலை திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 3, 4 மணிக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும். ஆனால் வாடகை வாகன டிரைவர்கள் தங்கள் வாகனங்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் சில வாடகை ஆட்டோக்கள் மூலமாக அருகாமையில் உள்ள ஏஜெண்டுகளுக்கு பால் சப்ளை செய்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆவின் ஏஜெண்டுகளுக்கு இன்று காலை பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் திருச்சி மாநகரில் காலை ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆவின் துணைப் பொது மேலாளர் நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு வாடகை பாக்கியில் பாதி தொகையான ரூ.27 லட்சமும், நாளை மீதித்தொகை ரூ.27 லட்சமும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் டிரைவர்களிடம் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று மாலை வழக்கம் போல் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாகனங்களை இயக்குவதாக உறுதியளித்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 30 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையானது.
    • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 18 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையாகி உள்ளது.

    சென்னை:

    கோடை வெயில் சுட்டெரிப்பதால் ஆவின் பாலகங்களில் மோர், லெஸ்சி, குல்பி ஐஸ் விற்பனை அதிகமாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 30 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையானது. இந்த ஆண்டு இப்போது வெயில் உச்சத்தில் இருப்பதால் ஏப்ரல் மாதம் முதல் தினசரி 40 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையாகி உள்ளது.

    இதுபோன்று பாக்கெட் மோர் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 10 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 18 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையாகி உள்ளது.

    இது தவிர லெஸ்சி, குல்பி ஐஸ், கப் ஐஸ், கோன்ஐஸ், பாதாம் கீர் பாட்டில் விற்பனையும் இருமடங்கு அதிகரித்துள்ளதால் இதன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.
    • சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட குறைவாகவே ஆவின் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிருவாக அமைப்பு முறையை கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலை நியாயமான மற்றும் நிலையான விலை கொடுத்து வாங்குவதையும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால்

    பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.

    1. இந்திய நாட்டின் பசு மாடுகளின் பாலில் சராசரியாக 3.3% முதல் 4.3% கொழுப்பு சத்தும் 8.0% முதல் 8.5% இதர சத்துக்கள் அடங்கியிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பசும்பாலின் தரத்தில் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்பு மற்றும் 8.5%

    இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் ஏ மற்றும் டி தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் என்ற பெயரில் லிட்டர் ஒன்றை 44 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம். சந்தை மதிப்பை

    ஒப்பிட்டால் பல நிறுவனங்கள் இப்பாலை விற்கும் விலையை விட இது மிக மிக குறைந்த விலையாகும். இந்த பால் பசும்பாலின் முழுமையான தரத்தில் வழங்கப்படுவதால் கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட சராசரி மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. எனவே இந்த வகை பாலை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    2. சில வாடிக்கையாளர்கள், குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள், தீவிர உடற்பயிற்சி செய்கின்றவர்கள் கொழுப்பு சத்து குறைந்த பாலை விரும்புவார்கள். அதற்காக கொழுப்புச்சத்து குறைக்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இது ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 16 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

    3. வளரும் குழந்தைகள், குறிப்பாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிக கொழுப்பு உள்ள பாலை விரும்பினால் அவர்களுக்காக நிறை கொழுப்பு பால் 6% கொழுப்பு மற்றும் 9.0 % இதர சத்துக்கள் அடங்கிய பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் லிட்டர் ஒன்று 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 14 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

     

    4. ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும். அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட

    திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை எனவேதான் Aavin for Healthy TN என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல், அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

    இந்த நடவடிக்கைகள் எதுவும் இலாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை, இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாதன், ஆவின் பொது மேலாளர் சுஜாதா, துணைப்பதிவாளர் ஆவின் இரா. கணேசன், வடக்கு மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.

    சென்னை:

    ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தால் செறிவூட்டப்பட்ட கொழுப்பு சத்து நிறைந்த பால் வகைகளை மாற்றி வேறு பெயரில் வினியோகம் செய்து வருகிறது.

    ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை ஒரு சதவீத கொழுப்பு சத்தை நீக்கி 3.5 சதவீதமாக ஆவின் டிலைட் (ஊதா நிறம்) என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

    இதே போல ஆரஞ்சு பால் பாக்கெட்டில் 6 சதவீதமாக இருந்த கொழுப்பு சத்தை 5 சதவீதமாக குறைத்து மஞ்சள் நிற பாக்கெட்டில் ஆவின் கோல்டு என வினியோகிக்கப்படுகிறது.

    தற்போது வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டினார்.

    பால் பாக்கெட் விலையை உயர்த்துவதற்கு பதிலாக மறைமுகமாக அதன் கொழுப்பு சத்து அளவை குறைத்து நஷ்டத்தை ஈடு செய்வதாக அவர் கூறினார். சென்னையில் பச்சை பாக்கெட் 50 சதவீதம் குறைக்கப்பட்டு ஊதா நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாகவும் அடுத்த மாதம் முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பச்சை பாக்கெட்டிற்கு பதிலாக ஊதா வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதாக பால் முகவர்கள் கண்டுபிடித்தனர்.
    • அரை லிட்டர் பாக்கெட்டில் 130 கிராம் எடை குறைவுடன் இருந்தது.

    சென்னை:

    சென்னையில் ஒரு சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்ட ஆவின் 'டிலைட்' ஊதா நிற பாக்கெட்டுகளில் 100 கிராம் எடை குறைவாக இருந்து உள்ளது. 520 கிராம் இருக்க வேண்டிய பால் பாக்கெட்டின் எடை 415 கிராம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதாக பால் முகவர்கள் கண்டுபிடித்தனர்.

    அரை லிட்டர் பாக்கெட்டில் 130 கிராம் எடை குறைவுடன் இருந்தது. பால் அளவை குறைப்பதற்கான காரணம் என்ன? எந்த ஒரு பொருளையும் அதில் குறிப்பிட்ட அளவில்தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் ஆவின் பால் பாக்கெட்டில் எதற்காக பால் அளவை குறைக்கிறார்கள். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதனை விற்பனை செய்யும் மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் தகராறு செய்கின்றனர். ஆவின் விற்பனை மையங்களிலும் எடை குறைந்த பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, கோவை, வேலூர் மாவட்டங்களில் எடை அளவு குறைவான ஆவின் பால், தயிர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் பால் அளவு குறைக்கப்பட்டு வினியோகம் செய்து உள்ளதாக புகார் வந்துள்ளது. எடை அளவை குறைத்து மோசடி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    • ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.
    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக ஆவின் நிர்வாகம் குறைத்து வந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் 4.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 50 சதவீதம் குறைத்து விநியோகம் செய்த நிலையில், மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தையும் நாளை (அக்டோபர்-3) முதல் 50சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏனெனில் ஆவின் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சமன்படுத்தப்பட்ட பால் என்றால் 3.0 சதவீதம் கொழுப்பு சத்தும், 8.5 சதவீதம் திடசத்தும் இருக்க வேண்டும் என்கிற நிலையில் ஊதா நிற பாக்கெட்டில் "செறிவூட்டப்பட்ட பசும்பால்" என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை "டிலைட் பால்" என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் சமன்படுத்தப்பட்ட பால் விற்பனையில் இருக்கும் போது தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் "சமன்படுத்தப்பட்ட பால்" என போட்டிருப்பதன் மூலம் ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.

    ஏற்கனவே 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம் என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50 சதவீதம் குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக 1 சதவீதம் கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனை செய்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்திட திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.

    தற்போது நடைமுறையில் உள்ள பால் பாக்கெட்டுகளின் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு முதல் ரூ.8 வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை செய்வதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் கடும் பாதிப்பு ஏற்படும்.
    • பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பால் பொருட்கள் விலையை உயர்த்துவது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆவின் நெய் விலை அனைத்து அளவுகளிலும் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    அதுபோல அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பால் பொருட்கள் விலையை உயர்த்துவது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    • ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.

    ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், நூடுல்ஸ், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் டிரிங்ஸ் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவினில் நெய் மற்றும் வெண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    15 மில்லி நெய்யின் விலை 14 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் ,100 மில்லி நெய்யின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    200 மில்லி நெய் பாட்டில் 145 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும் 500 மில்லி நெய் பாட்டில் 315 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் நெய்யின் விலை 630 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், 15 கிலோ டின் நெய்யின் விலை 10,725 ரூபாயில் இருந்து 11880 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் வெண்ணெயின் விலையானது 100 கிராம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 500 கிராம் 260 ரூபாயில் இருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×