search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச வீடியோ"

    • ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி இருந்து வருகிறார்.

    இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அகோரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அதன்படி தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் மற்றும் சிலர் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    அதேபோல் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.
    • சிறப்பு விசாரணைக்குழு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மே 31 அன்று பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா அன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இதனிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரேவண்ணாவின் போலீஸ் காவலை ஜூன் 10 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தொலைந்து செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றன.
    • IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். ஹசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியானது. பல பெண்களுடன் பிரஜ்வல் இருப்பது போன்ற ஏராளமான வீடியோ கிளிப் அதில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெண்களை வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 3 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாணைக்குழு அமைத்தது. இதற்கிடையே பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

    கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நேற்று அதிகாலை பெங்களூரு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் அவரை வருகிற 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பிரஜ்வலை ஆண்மை பரிசோதனைக்கு உட்பட்டதாக தகவல் வெளியானது.

    பெண்கள் உடன் இருக்கும் வீடியோவை அவரது செல்போன் மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என சிஐடி நம்புகிறது. இதனால் அவரது செல்போனை கண்டுபிடித்தால் மேலும் பல தகவல்களை பெற முடியும் என நினைக்கிறது.

    ஆனால் பிரஜ்வல் செல்போன் கடந்த வருடமே தொலைந்து விட்டதாம். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்ததுள்ளார்.

    இதனால் புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தில் செல்போன் குறித்த தகவலை எஸ்ஐடி கேட்டுள்ளது. அவர்கள் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க முயற்சி செய்ய தீர்மானித்துள்ளது.

    ஒருவேளை போன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், போனை பிரஜ்வால் அழித்து இருக்கலாம் என்று நம்பும் நிலை ஏற்படும். அப்படி இருந்தால், ஆதாரங்களை சேதப்படுத்துதல் என்ற கூடுதல் குற்றச்சாட்டை பிரஜ்வல் மீது பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கர்நாடகா மற்றும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விசாரணைக்கு ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்திருந்தார்.
    • இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்தடைந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
    • விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சுமார் 2000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால் கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை கடத்திய குற்றத்திற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் பிரஜ்வாலின் தந்தையுமாகிய ஹச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.

    இந்த விவகாரத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வாலை நாடு திரும்புமாறு அவரது தாத்தா தேவகௌடா எச்சரித்தார்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (மே 31) நாடு திரும்புவதாக பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். அதன்படி நாளை (மே 30)  ஜெர்மனி தலைநகர் 'முனிக்'கிலுருந்து பெங்களூருவுக்கு விமானம் முன்பதிவு செய்துள்ள ரேவண்ணா, நாளை மறுநாள் பெங்களூரு கேம்பகௌடா விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். 

     

     

    • ஆபாச வீடியோ வெளியானதால் ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.
    • பிர்ஜவலுக்கு எதிராக மத்திய அரசு ஷோகாஸ் நோட்டிஸ் அனுப்பியது.

    கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தொடர்பான வீடியோ ஒன்று கடந்த மாதம் வெளியானது. அந்த ஆபாச வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இதனால் கர்நாடகா அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டதாக தகவல் பரவியது.

    அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா இரண்டு முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இதனால் கடந்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறப்பு விசாரணைக் குழு முன் வருகிற 31-ந்தேதி ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.வி. சேனல் மூலமாக பிரஜ்வல் தெரிவித்த தகவலில் "நான் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பேன். நான் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். பொய் வழக்குகள் என்பது நீதிமன்றம் மூலம் வெளியே வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது." என்றார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்கள் தனது பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் குறித்து பேசினர்.  இதனால் தான் மன அழுத்தம் அடைந்தேன். மற்றும் தனிமைப்படுத்தப்பட்டேன். இது அரசியல் சதி எனக் குற்றம்சாட்டினார்.

    ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. ஹசன் தொகுதி தேர்தல் முடிவடைந்து மே 27-ந்தேதி தனது சிறப்பு தூதர பாஸ்போர்ட் மூலமாக ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.

    • ஆபாச வீடியோ வெளியானதால் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்.
    • இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம்.

    கர்நாடகா மாநிலத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பெண்கள் இருப்பது போன்ற வீடியோக்கள் பல பென் டிரைவ்கள் மூலம் கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடகா மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

    இதற்கிடையே வீடியோ வெளியானதும் பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார். தூதரக சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருந்த அவர் எளிதாக ஜெர்மனி செல்ல வழிவகுத்தது. அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கடிதம் எழுந்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மத்திய அரச ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கர்நாடகா அரசிடமிருந்து கடந்த 21-ந்தேதி அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    மேலும் எம்எல்ஏ ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் மீது பலாத்கார வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய கர்நாடகா போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், பென் டிரைவ் வெளியானது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 2 பெண் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தி போலீஸ் பெயரில் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

    இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பொய் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். செல்போனில் போலீசார் எனக்கூறி புகார் அளிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதுபற்றி 3 பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர், என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களை பொய் புகார் செய்ய கட்டாயப்ப டுத்துகிறார்கள். கடத்தி செல்லப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள். ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு புகார் செய்ய மறுக்கும் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் போடுவதாக மிரட்டப்படுகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு பயந்து பெண்கள் போலீசில் பொய் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கர்நாடகா போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ரேவண்ணாவும் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறையின் எஸ்ஐடி (சிறப்பு விசாரணைக்குழு) விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்று விட்டார். எஸ்ஐடி சம்மன் அனுப்பியும் பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராக வில்லை.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்ட 700 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 700 பெண்கள் புகார் அளித்துள்ளனர் என வெளியான தகவல் தவறானது. ஆபாச வீடியோ தொடர்பாக எந்த பெண்களும் புகார் அளிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்த பெண் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு போடப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வா லின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் ரேவண்ணாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவை வருகிற 14-ந் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ரேவண்ணாவை சிறையிலிருந்து அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி வெளிப்படையாக பிரஜ்வல் ரேவண்ணாவை குற்றம்சாட்டியிருந்தார்.
    • குற்றம்சாட்டிய ராகுல் காந்தியிடம் ஆதாரங்களை கேட்டு எஸ்ஐடி ஏன் சம்மன் அனுப்பவில்லை.

    பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடாக மாநில காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஆபாச வீடியோ தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜனதாவை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஏழு நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக எஸ்ஐடி சம்மன் அனுப்பியிருந்தத. அதன் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே ராகுல் காந்தி சிவமோகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது, 16 வயது மைனர் உள்பட 400 பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஈடுபட்டுள்ளார் என வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராகுல் காந்தியிடம் எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹெச்.டி. குமாரசாமி கூறியதாவது:-

    ஷிவமோகாவில் நடைபெற்ற பொது கூட்டத்தின்போது, 400 பெண்கள் கற்பழிப்பில் பிரஜ்வால் ரேவண்ணா ஈடுபட்டதாக ராகுல் காந்தி, நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். வயநாடு எம்.பி. நேரடியாக குற்றம் சாட்டியதன் மூலம் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக தகவல் மற்றும் ஆதாரங்கள் இருப்பது போல் பார்க்கப்படுகிறது. இது குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என எஸ்ஐடி ஏன் சம்மன் வழங்கவில்லை என்பது குழப்பமாக உள்ளது.

    இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வீடியோ பரப்பப்பட்டதற்கான பொறுப்புள்ளவர்களும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள். முதல்வர் தார்மீக கொள்கைகளை கடைபிடித்தால், சிவகுமாரை (பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்படுவதற்கு முக்கிய சதிவேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு) அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். சித்தராமையா-சிவகுமார் விசாரணைக் குழுவான எஸ்ஐடி இரண்டு தலைவர்களால் கையாளப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 26 ஆயிரம் பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஹசன் தொகுதிக்கு மட்டுமல்ல. பெங்களூரு புறநகர் மற்றும் மாண்டியாவுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 21-ந்தேதி பிரஜ்வலின் போலிங் ஏஜென்ட், ஹசன் துணை கமிஷனர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நவீன் கவுடா, கார்த்திக் கவுடா, சேத்தன், புட்டண்ணா ஆகியோர் பென் டிரைவ்களை வினியோகம் செய்ததில் பின்னணியாக இருந்தவர்கள் என புகார் அளித்துள்ளார். எஸ்ஐடி அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களை ஏன் தப்பிக்க விட்டார்கள்? அவர்களுக்கு எதிராக ஏன் ப்ளூ கார்னர் இல்லை?

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×