என் மலர்
நீங்கள் தேடியது "சினிமா படப்பிடிப்பு"
- கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
- தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது. சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர் கண்காட்சி, காய், கனி கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என பூங்காக்களில் இந்த கண்காட்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடப்பதால் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நீலகிரியில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் கோடை சீசன் நடைபெறுகிறது.
- 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரியில் இந்த மாதம் (ஏப்ரல்) மற்றும் அடுத்த மாதம் (மே) கோடை சீசன் நடைபெறுகிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரளுவார்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இன்று (சனிக்கிழமை) முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர்.
- ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான மோயர்பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. பேய்களின் சமையல்அறை என அழைக்கப்பட்ட இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் குணா திரைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இடம் பிரபலமானது. இதனால் குணா குகை என அழைக்கப்பட்டது. இங்கு 15க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறந்துள்ளனர்.
இதனால் குணா குகையை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கு வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர். காலக்கெடு முடிந்த நிலையிலும் அங்கு தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ் வன பாதுகாவலருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியது, மரங்களை வெட்டியது, விதிகளை மீறி அனுமதிக்கப்படாத இடங்களில் சூட்டிங் நடத்தியது, வனப்பகுதியில் கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்தது உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதன்மை உதவி வன பாதுகாவலர் தெபாஸீஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றது குறித்து விசாரித்தனர். ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர்.
- கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள்.
ஊட்டி:
மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சுற்றுலா வுக்கு பெயர் போன பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்ப டும். .சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலை துறையினர் செய்து வருகின்றனர்.
கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள். சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும், மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
- சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விரட்டியடிப்பு
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பல்லுயிர் வனக்காப்பக்கமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மற்றும் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் திரைப்பட குழுவினர் அவ்வப்போது வந்து திரைப்படங்களை சூட்டிங் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட குழுவினர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை பிடித்து வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கினர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறும், பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் அச்சம் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த குழுவினரை விரட்டினர்.
இதற்கிடையே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதியதாக ஒரு திரைப்படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே வந்து முகாமிட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு காட்சியை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மேலும் ஜே.சி.பி., கிரேன், கம்ப்ரசர்களை கொண்டு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடிவைத்து தகர்த்தாக தெரிகிறது.
மேலும் அதிக அளவில் மண்எண்ணை, பெட்ரோல் கேன்களும் அங்கு இருந்தன. அந்த படக்குழுவினர் ஜே.சி.பி. எந்திரம், வெடிமருந்து பொருட்கள், கிரேன்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.
அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் இது குறித்து அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து படப்பிடிப்பு குழுவினர்களை சிறைபிடித்து சரமாரி கேள்வி கேட்டனர்.
தாங்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக கூறியதை ஏற்க மறுத்த கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளத்தில் எவ்வாறு வெடிவைத்து தகர்க்கலாம் என கேள்வி எழுப்பி அவர்களை வாகனங்களோடு சிறைப்பிடித்ததனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு திருப்பி அனுப்பி உள்ளனர்.
டங்ஸ்டன் பிரச்சனையால் பரபரப்பாக இருக்கின்ற சூழலில் அரிட்டாப்பட்டி பகுதியில் சினிமா படப்பிடிப்பு என்று கூறி பல்வேறு வாகனங்களோடு குவிந்தவர்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.