search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஏஎஸ்"

    • பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
    • இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐஏஎஸ் பறிச்சி பெண் கலெக்டராக இருந்த பூஜா கெத்கர் காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் கலெக்டர் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தான் மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழை சமர்ப்பித்தும் சாதிவாரி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குடும்ப வருமானத்தை குறைத்தும் காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு ஐஏஎஸ் ஆகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரை வேறு இடத்துக்கு மாநில அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டியை அமைத்தது.

    இதற்கிடையே பூஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி நீதிமன்றத்தில் பூஜா முன்ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி முன் ஆஜராக மறுத்தத்ததாலும் அவர் மீது 30 புகார்கள் வரை  இருப்பதாலும் பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் யுபிஎஸ்சியால் உத்ராவிடப்பட்ட தகுதிநீக்கம் ஒரு மாதம் கழித்து தற்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பூஜா கெத்கரை ஐஏஎஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்து விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.
    • மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.

    மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தனது கணவர் குடியிருந்து வரும் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தற்கொலைக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டானின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த மரண வாக்குமூலத்தில் எழுதியிருப்பதாவது:-

    எனது பெயர் சூர்யா என்றும், மதுரையில் கடந்த 11-ம் தேதி மாணவன் கடந்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்கு அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை. என்னை ஏன் இந்த வழக்கில் ராஜலட்சுமி சம்பந்தபடுத்தினார் என்று புரியவில்லை. என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

    அவரது கணவர் பெயர் கூட எனக்கு தெரியாது. கடந்த ஆண்டு ஐகோர்ட்டு மகாராஜா மூலமாகதான் ராஜலட்சுமி எனக்கு அறிமுகம் ஆனார். அவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர். எனது பெயர் உபயோகித்து ராஜலட்சுமியிடம் ஐகோர்ட்டு மகாராஜா ரூ. 60 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஓடிவிட்டார்.

    அந்த பணம் குறித்து எனது கணவரிடம் கூறுவதாக ராஜலட்சுமி தெரிவித்ததால் மகாராஜா வாங்கிய ரூ. 60 பணத்தை நான் தருகிறேன் என்று ஒப்புக் கொண்டதன் பேரிலும் மேலும் எனக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.

    அந்த பணத்திற்கு வட்டி எடுத்துக் கொண்டு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், ஐகோர்ட் மகாராஜா வாங்கிய ரூ. 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய ரூ. 15 லட்சம் ஆகியவற்றை வட்டியும் முதலுமாகராஜலட்சுமி தனது மாமன் மகன் ஒருவரை அழைத்துவந்து 1.35 கோடி தரவேண்டும் என மிரட்டியதுடன் எனது பியூட்டி பார்லரையும் எழுதி வாங்கி கொண்டார்.

    அதன் பின்பும் எனது பியூட்டி பார்லர் 80 லட்சம் வரும் மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் எனது வாழ்வாதாரம் இழந்து கணவர் மற்றும் குழந்தைகளை இழந்து பெங்களூர் சென்று படிக்க நினைத்தேன். தொடர்ச்சியாக என்னை பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். என்னிடம் உள்ள அனைத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றும் நோக்கில் தற்போது சிறுவன் கடத்தல் வழக்கில் எனது பெயரை ராஜலட்சுமி சேர்த்துள்ளார். இதில் யார் ஈடுபட்டார்கள் என்றும், அவர்களது பெயர் கூட எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் எனது செல்போன் உரையாடலை சேகரித்து சோதனை செய்து பாருங்கள்.

    மேலும் இறந்து போன மைதிலி ராஜலட்சுமி கணவர் ராஜ்குமாருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

    அப்படி புகார் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எனது செல்போன உரையாடலை ஆய்வுபடுத்துங்கள், ஐகோர்ட்டு மகாராஜா ஜெயிலில் இருந்து ஓடிபோன பிறகு ராஜலட்சுமியுடன் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை ராஜட்சுமி வீட்டிற்கு அடிக்கடி மகாராஜா வந்தார். அதுபற்றி சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிந்துவிடும்.

    மேலும் குழந்தை கடந்தல் எவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியும். எனக்கும் 2 குழந்தைகள் இருக்கு. குழந்தைகளை பிரிந்து வாழும் வலி என்ன என்று எனக்கு தெரியும். ஐயா நான் என் தவறை திருத்ததான் வெளியூர் சென்று படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைத்தேன். எனது கணவர் என் நன்னடத்தை பார்த்து மன்னித்து என்னை சேர்த்துக் கொள்வார். நான் குழந்தை கடத்தல் செய்தேன் என்று கூற ஆதாரம் வேண்டும். இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது.

    நாளை நான் குற்றமற்றவள் என்று நிருபிக்கப்பட்டால் எனது மானம், எனது கணவர் மானம் திரும்ப கிடைக்குமா ஐயா, ஏன்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஐயா.. நீதி வேண்டும் ஸ்டாலின் ஐயா உங்கள் ஆட்சியை நான் பார்த்து வருகிறேன்... நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். நான் உங்கள் வீட்டு பெண்ணாய் இருப்பின் என்னை என்றாவது ஒருநாள் மேடையில் சூர்யா நிரபராதி என்று ஸ்டாலின் ஐயா மற்றும் உதயநிதி ஐயா சொல்லுங்கள்.

    எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா, உதயநிதி அண்ணாவை வாழ்த்தும். எனது கணவர் மிகவும் நல்லவர் அவரையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எனது குழந்தையிடம் உனது தாய் நல்லவள் என்று கூறுங்கள் என அந்த மரண வாக்கு மூலத்தில் கூறிபிட்டுள்ளார்.

    • தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
    • இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.

    இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று  குற்றச்சாட்டும் எழுந்தது.

    இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது

    • கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
    • தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

     

    இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.

     

     தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும்  தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.

     

     

    • காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
    • உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

    ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

    அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.‌
    • எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் கண் பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 442 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

    முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.

    எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்.

    • கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டார்.
    • தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

    சென்னை:

    தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டார்.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலாளராக இடம் மாற்றப்பட்டார்.

    விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கோபால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

    தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

    சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி கவிதா ராமு தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமனம்.
    • டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
    • 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

    • தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.
    • வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்.

    தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில், வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×