search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு பணி"

    • யார் யார் வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கிறது என்ற விவரம் மின் வாரியத்திலும் உள்ளது.
    • 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் தொழிற்சாலை வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன.

    இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். 2 மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கும் போது பல வீடுகளுக்கு அதிக மின் கட்டணம் வந்து விடுகிறது.

    இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண் டும் என்பதற்காக ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதை கண்டறிவதற்காக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் யார் யார் வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக் கிறது என்ற விவரம் மின் வாரியத்திலும் உள்ளது.

    தற்போது மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ அதை கண்டறிந்து நிறுத்துவதற்கு தற்போது வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளை பெற்றிருந்தால் அதை ஒரே மீட்டராக கணக்கில் கொண்டு வருவதற்கு ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது.

    மின் நுகர்வோர் இதை செய்ய தவறினால் மின் வாரியம் பொது பயன்பாடு கட்டணமாக யூனிட்க்கு 8 ரூபாய் கணக்கில் வசூலிக்க தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்பு இருந்தால் அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டில் ஒருவர் பெயரில் 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். இதற்காக தான் இப்போது வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி மின் வாரிய ஊழியர்களால் நடத்தப்படுகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

    • இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.

    இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர். 

    • தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், சாலையை நேராக அமைக்க கோரிக்கை எழுந்ததால், 4 வழிச்சாலை மாற்றுப்பணி நடைபெற்று வருகிறது.
    • ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே கணவாய் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆய்வு செய்தார்.

    தருமபுரி :

    தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே கணவாய் பகுதியில் உள்ள வளைவான சாலையால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது இந்த சாலை 4 வழிச்சாலையாக மாற்றுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் கோவிந்தசாமி எம.எல்.ஏ. சாலையை நேராக அமைத்தால் விபத்துகள் குறையும் என்று கூறினார்.

    அப்போது அந்த சாலை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே உள்ள கணவாய் பகுதியில் அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அந்த சாலை நேராக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை கோவிந்தசாமி எம்.எல்.ஏ, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்துக்கள் நடைபெறாத வகையில் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் ெபான்னுவேல், அங்குராஜ், கந்தசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது.
    • தேங்கும் தண்ணீர் கிட்டதட்ட 25 கி.மீ., தூரத்துக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.

    அவினாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டப்ப ணிகள் நிறைவு பெற்று வெள்ளோ ட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: - பெருந்துறையில் துவங்கி கோவை மாவட்டம் காரமடை வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே உபரி நீர் வெளியேற்றம் அமையும். பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், கள ஆய்வு நடத்தி திட்டத்தின் இர ண்டாம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகி ன்றனர். தற்போது நிறைவேற்றப்பட உள்ள திட்டத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் அவிநாசி கருவலூர் அருகே பெரிய கானூரில் 148 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த ஏரி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கம்என்ற அமைப்பை ஏற்படுத்தி குளத்தை ஆக்கிரமித்திருந்த சீமை கருவேலன் மரங்களை அகற்றினர்.குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தில் சுற்றியுள்ள குளம், குட்டைகளில் வெள்ளோ ட்ட அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், பெரிய கானூர் குளத்துக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-கோவை கவுசிகா நீர் கரங்களுடன் இணைந்து இக்குளத்தை இயன்றளவு பராமரித்துள்ளோம். இதில் தேங்கும் தண்ணீர் கிட்டதட்ட 25 கி.மீ., தூரத்துக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதன் வாயிலாக சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும்.கால்நடைகள் மற்றும் பறவைகள்வாயிலாக பல்லுயிர்பெருக்கம் ஏற்படும்.தற்போது பொதுப்பணித்துறை சார்பில் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ்வெ ள்ளோட்ட அடிப்படையில் இதுவரை தண்ணீர் திறந்து விடாதது ஏமாற்றமளி க்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.இவ்வாறுஅவர்கள் கூறினர். 

    • ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
    • சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அடுத்த ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறி, பழம், வெங்காயம், பழம்,செருப்பு, துணிகள், பாய், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவராங்காடு சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    சுற்றுவட்டாரத்தை ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வர்கள். சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து விட்டது.

    இதனால் சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

    நேற்று கடைகள் அமையுள்ள இடத்தை நகராட்சி சேர்மன் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×