search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ குணம்"

    • சேப்பங்கிழங்கு இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.
    • குடல்புண்களையும் ஆற்றுகிறது.

    சத்துக்கள் நிறைந்தது இந்த சேப்பங்கிழங்கு இலை ஆகும். பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த சேப்பங்கிழங்கைவிட, இந்த கிழங்கின் இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.

    வைட்டமின் A, E, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளன. கண்களுக்கும், பற்களுக்கும் எலும்புகளுக்கும், உறுதியையும், ஆரோக்கியத்தையும் இந்த கிழங்கு தரக்கூடியது.

     நார்ச்சத்து அதிகமுள்ள இந்த கிழங்கு செரிமான கோளாறை நிவர்த்தி செய்து, குடல்புண்களையும் ஆற்றுகிறது.

    முருங்கை கீரையை போலவே, இந்த சேப்பங்கிழங்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது.

    சேப்பங்கிழங்கு இவ்வளவு நன்மைகளை தந்தாலும், சேப்பங்கிழங்கு இலைகளில் கூடுதல் மருத்துவ தன்மைகள் நிறைந்துள்ளன.

    இதய வடிவில் காணப்படும், சேப்பங்கிழங்கு இலைகளில், வைட்டபின் B நிறைந்துள்ளது. எனவே, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த இலைகள் சிறந்த மருந்தாகிறது.

    வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு உண்டு.

    பெண்களை அதிக அளவு பாதிக்கும், மார்பக புற்று நோயையும் நெருங்க விடாமல் செய்ய இந்த சேப்பங்கிழங்கு இலைகள் துணைபுரிகின்றன.

    இலைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.

    உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த கீரையை பயன்படுத்தலாம். இந்த சேப்பங்கிழங்கு இலைகளிலும் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. அதனால், அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


    ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து எனலாம். ஏனென்றால், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் அனைத்துமே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய அம்சங்களாகும். இந்த இலைகளின் சாறு, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

    எனவே, சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.

    இந்த இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை வைத்து, சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக இலையை சாப்பிடக்கூடாது..

    சிலருக்கு இந்த இலைகளால் தோலில் அலர்ஜி ஏற்படலாம்.. சிலருக்கு சிறுநீரக கற்களையும் உருவாக்கலாம். எனவே, பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடலாம். இத்தனை சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு இலைகளை, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று பயனடையலாம்.

    • தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு ஆகியவை அடங்கும்.
    • வெளிநாடுகளில் தேனடையுடன் தேன், காலை உணவாக உணவகங்கள் பரிமாறப்படுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் தருவேன் என்று பாடினார், அவ்வையார்.

    தற்போது, தேனைவிட தேனடை மதிப்பு மிக்கதாக உண்ணப்படுகிறது தேனடை என்பது ஒரு தேன்கூடு. தேனீயின் வீடு.

    இந்த வீட்டில்தான் தேனீக்கள், மகரந்தத்தையும், தேனையும் சேமித்து வைக்கும். இது மெழுகு போன்று அமைந்திருக்கும்.

    பொதுவாக, வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் தேன், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், தேனடையில் நேரடியாக கிடைக்கும் தேன் இயற்கையானது.

    தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு ஆகியவை அடங்கும். தனியாக பிழியப்பட்ட தேனில் இவை காணப்படாது.

    இதனால், தனி தேனை விட மகரந்தம், ராயல் ஜெல்லி மெழுகு அடங்கிய தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று நம்பப்படுகிறது. வெளிநாடுகளில் தேனடையுடன் தேன், காலை உணவாக உணவகங்கள் பரிமாறப்படுகிறது.

    தேன் கூட்டில் செறிந்து கிடக்கும் தேனில் புரதங்கள், தாதுக்கள், நீர், மகரந்தம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரிம அமிலங்கள், புரதங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவை தாராளமாக உள்ளன.

    இதனை உண்ணும்போது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வலுவாக எதிர்த்து போராடும் வலிமையை அதிகரிக்கிறது. ஆதிகால மருத்துவத்தில் தும்மல், சளி மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தேனடையை மென்று சாப்பிட பரிந்துரைப்பது வழக்கம். இதனால், மேற்கண்ட உடல்நலக்குறைவு ஒரு சில நாட்களில் மறைந்து விடும் என்று நம்பப்படுகிறது.

    • ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    • இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவை...

    * நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    * நாவல் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கும். குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கும் உதவிடும். நாவல் பழத்தின் விதைகள் மற்றும் பட்டைகள் பாரம் பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

    * நாவல் பழத்தில் அந்தோசயின்கள், பிளா வனாய்டுகள், பாலி பீனால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    * நாவல் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சி அபாயத்தை குறைக்கும்.

    * நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

    * நாவல் பழத்தில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடும், விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும்.

    * நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம். கலோரி குறைவு. அதனால் உடல் எடையை சீராக நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தேர்வாக அமையும். குறைவாக சாப்பிட்டாலே வயிற்றுக்கு திருப்தி அளிக்கும். அதனால் அதிக கலோரிகளை உட்கொள்ள தோன்றாது. ஒட்டுமொத்தமாகவே கலோரி உட்கொள்ளும் அளவை குறைக்கும்.

    * நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும். அதன் இலைகள் மற்றும் பட்டைகள் வாய் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

    குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை நாவல் பழத்தை உட்கொள்ளலாம். அதேவேளையில் அவர்களுக்கு ஒவ்வாமையோ, செரிமான பிரச்சினைகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானது.

    மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் உதவும்.

    இரைப்பை குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் நாவல் பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அதனை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    • விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது ‘ஸ்பைருலினா’ (Spirulina) எனும் சுருள்பாசி.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.

    எதிர்காலத்துக்கான சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனத்தாலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது 'ஸ்பைருலினா' (Spirulina) எனும் சுருள்பாசி.

    மிகக் குறைந்த விலையில், நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மையைக்கொண்ட, நீலப்பச்சைப் பாசி.

    *ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, ஆயிரம் கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

    ஸ்பைருலினாவில் இருக்கும் காமாலினோலெனிக் அமிலம், உலகில் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த ஒரு உயிரினத்திலும் இல்லை. இந்த அமிலம்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலை வலுவாக்குகிறது. மற்ற எந்த உணவையும் விட, மிக அதிக அளவில் சீரணமாகும் தன்மையுள்ள புரதச்சத்துக்கள் நிரம்பி உள்ளது.

    ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...

    இந்த சுருள் பாசியில் மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ,டி,இ,கே, அமினோ ஆசிட், காமாலினோலெனிக் அமிலம், புரதம் (55% முதல் 65%வரை), மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டா கரோட்டின் , வைட்டமின் பி6,பி12, இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ் (SOD)போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.


    பயன்கள்

    மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து தயாரிப்பில் முக்கியமாக இந்தப் பாசி பயன்படுகிறது.

    அழகு சாதன பொருட்கள் தயாரிக்க, மீன்களின் வளர்ச்சியை அதிகபடுத்தும் உணவாக, மாடுகளை அதிக அளவில் பால் கறக்கச் செய்யும் தீவனமாக, பட்டுப்புழுவின் தரத்தை அதிகரிக்கும் வகையில் பட்டுப் புழுவுக்கு உணவாக, 'கொழுகொழு'வென கோழிகள் வளர்வதற்கு என்று ஸ்பைருலினா பாசியின் பயன்பாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

    இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.

    தாதுக்கள்

    இவற்றில் அனைத்து வகையான தாதுக்களும் அடங்கியுள்ளது. உடலை சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

    மக்னீசியம்

    ஸ்பைருலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான தாது உப்புகளாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது.

    வைட்டமின் ஏ

    கண்பார்வை சீராக இருப்பதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பது அத்தியாவசியமானது. பிற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் இச்சத்து அதிகளவில் உள்ளது.


    பீட்டா கரோட்டீன்

    இது கேரட்டில் இருந்து கிடைக்கக்கூடிய அளவைவிட ஸ்பைருலினாவில் இருந்து 10 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

    வைட்டமின் பி6-பி12

    ஸ்பைருலினாவில் இவை மிகுந்து காணப்படுவதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரின் கணையம் சீராக செயல்பட்டு இன்சுலினை தேவையான அளவு சுரக்கச் செய்து இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

    இரும்புச்சத்து

    மற்ற உணவுப் பொருட்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.

    கார்போஹைட்ரேட்

    நேரடியாக ஸ்பைருலினாவிலிருந்து நமது உடலுக்கு கிடைக்கிறது.

    காமாலினோலெனிக் அமிலம்...

    இவை ஸ்பைருலினாவிலிருந்து நேரடியாக கிடைப்பதால், உடலில் கொழுப்புச்சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனை குறைக்கின்றது.

    ஸ்பைருலினாவில் காமா லினோலினிக் அமிலம் இருப்பதால் தாய்ப்பாலுக்கு நிகரான உணவாக அமைகிறது.

    சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூட்டேஸ் (SOD)

    உடலில் இறந்த செல்களுக்கு புத்துயிர் கொடுக்கவல்லது. புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை தீர்க்கவல்லது.

    புத்துணர்ச்சி அளிக்கும்

    ஸ்பைருலினாவை தினமும் உட்கொண்டு வந்தால் அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதன்மூலம் உடலின் கலோரி அளவு குறைந்து உடல் எடை வேகமாக குறையும்.

    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்து

    நிறைவுறா ஒமேகா மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது

    ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் போஸ்டன் (1996 1998) ஸ்பைருலினா தொடர்பாக நடத்திய ஆய்வின் முடிவில் ஹெச்.ஐ.வி.வைரஸ் மேலும் மேலும் பெருக்கமடையாமல் தடுப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிகள் அதிக நாட்களுக்கு உயிர் வாழ உதவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.


    யாரெல்லாம் ஸ்பைருலினா சாப்பிடலாம்...

    ஸ்பைருலினாவில் உள்ள அதிகபட்ச செரிக்கும் தன்மைகளுடைய புரதத்தால், இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறுவர்கள் முதல் தாய்மார்கள் வரை, உடல் உழைப்பாளர்கள் முதல் மன உழைப்பாளர்கள் வரை, பாமரன் முதல் மேதைகள் வரை, எல்லோரும் உபயோகிக்கலாம், ஸ்பைருலினா அடைத்த கேப்ஸ்யூல்களையே, விண்வெளி வீரர்கள் உணவாக பயன்படுத்துகின்றனர்.

    உலகினில் தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில், அனைத்து சத்துகளும் கொண்டுள்ள ஸ்பைருலினா, பசும்பாலைவிட, நான்கு மடங்கு கூடுதல் சத்து மிக்கது.

    இத்தகைய நலம்தரும் தன்மைகளாலேயே, ஐக்கிய நாடுகள் சபை ஸ்பைருலினாவை முழு ஊட்டச்சத்துள்ள உணவாக, அங்கீகரித்திருக்கிறது.

    • நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது மற்றும் பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .
    • க்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு தடுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு மிகவும் திறம்பட செயல்படச் செய்கிறது.

    கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

    இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

    கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க...

    கறிவேப்பிலை ஒருவரின் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த இலைகள், எல்டிஎல் கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்றன. இது நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது மற்றும் பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .

    செரிமானத்தை அதிகரிக்க...

    பழங்காலத்திலிருந்தே கறிவேப்பிலையின் நன்மைகளில் ஒன்று செரிமானத்திற்கு உதவுகிறது. கடி பட்டா ஆயுர்வேதத்தில் மிதமான மலமிளக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது, இது வயிற்றில் தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது.

    கல்லீரலுக்கு...

    கறிவேப்பிலை ஆய்வின்படி, இலைகளில் உள்ள டானின்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகளின் வலுவான ஹெபடோ-பாதுகாப்பு பண்புகள் உள்ளன. மேலும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றுடன் இணைந்தால், அதன் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு தடுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு மிகவும் திறம்பட செயல்படச் செய்கிறது.


    முடி வளர்ச்சிக்கு...

    சேதமடைந்த கூந்தலுக்கு சிகிச்சையளிப்பதில், கறிவேப்பிலை மிகவும் வெற்றிகரமானது, தளர்வான முடிக்கு துள்ளல் சேர்க்கிறது, மெல்லிய முடி தண்டுக்கு வலுவூட்டுகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது. இது தவிர, இலைச் சாறு மலாசீசியா ஃபர்ஃபரின் பூஞ்சை உச்சந்தலையில் தொற்றுக்கு எதிராக பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை நிரூபித்துள்ளது, அதனால்தான் பொடுகுக்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தலாம் .

    கண் ஆரோக்கியத்திற்கு...

    கறிவேப்பிலையில் கரோட்டினாய்டு கொண்ட வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இதனால் கார்னியா பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. வைட்டமின் A இன் குறைபாடு இரவு குருட்டுத்தன்மை , பார்வை இழப்பு மற்றும் மேகம் உருவாக்கம் உள்ளிட்ட கண் கோளாறுகளை ஏற்படுத்தும் . இதனால், இலைகள் விழித்திரையைப் பாதுகாப்பாக வைத்து, பார்வை இழப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

    பாக்டீரியாவை நீக்க...

    கார்பசோல் ஆல்கலாய்டுகள், ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள், கறிவேப்பிலைகள் நிறைந்தவை மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்டவை மற்றும் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் இந்த மரங்களின் மலர் வாசனைக்கு காரணமான கலவை லினலூல் ஆகும்.

    எடை இழப்பை ஊக்குவிக்க...

    உடல் எடையை குறைக்கும் போது, கறிவேப்பிலை ஒரு நல்ல மூலிகை. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை வெளியேற்ற இது சிறந்த மருந்து. கறிவேப்பிலை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உடல் பருமனை தடுக்க உதவுகிறது .

    பக்க விளைவுகளை கட்டுப்படுத்த...

    கறிவேப்பிலை உட்கொள்வது கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையின் விளைவுகளை குறைக்கிறது மற்றும் குரோமோசோமால் சேதம் மற்றும் எலும்பு மஜ்ஜை பாதுகாப்பிலிருந்து பாதுகாக்கிறது.

    இரத்த ஓட்டத்திற்கு...

    கறிவேப்பிலையை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சினைகள், கோனோரியா , வயிற்றுப்போக்கு மற்றும் வலிகளைப் போக்க உதவுகிறது .

    நீரிழிவு எதிர்ப்பு பண்புக்கு...

    கறிவேப்பிலையின் மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது . ஒருவரின் உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் உற்பத்தி செய்யும் கணைய செல்கள் தூண்டப்பட்டு மறைக்கப்படலாம்.


    காயங்களை குணப்படுத்த...

    கறிவேப்பிலையின் பேஸ்ட்டை தடவுவதால் காயங்கள், சொறி, கொதிப்பு மற்றும் லேசான தீக்காயங்கள் போன்றவற்றில் குணமடையும் . இலைகளின் பேஸ்ட் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் தொற்றுநோயையும் தடுக்கவும் அகற்றவும் உதவுகிறது.

    • சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.
    • முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்.

     "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

    முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

    முருங்கை வேர் + அதன் பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.

    முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.


    இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்கிறார்கள்.. இந்த வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்றவையும் அகலும். முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும். முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்..

    முருங்கைப்பூ : முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும்போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.. முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.

    இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

    எதிர்ப்பு சக்திகள்: முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். வேர்க்கடலை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும்.

    தலைமுடி வளர: தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். தோல் வியாதிகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.


    தோல் வியாதிகள்: முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

    முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள். இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது.. இதற்கான காரணங்களை பாருங்கள், நீங்களே அசந்துபோயிடுவீங்க

    பொக்கிஷம்: மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மைவிட்டு விலகியே நிற்கும்..!!

    • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
    • நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

    • நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.

    • நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

    • பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

    • பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

    • உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.

    • கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


    • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

    • நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

    • பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

    • நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

    • கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.

    • பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.

    நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

    • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
    • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

    முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

    குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

    100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

     மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

    ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

    தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

    வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
    • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

    அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

    இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

    ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

    விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

    பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • குமரி மாவட்டத்தில் போட்டிபோட்டு வாங்கி செல்லும் மக்கள்
    • சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு தரும்

    நாகர்கோவில் :

    நாவல் பழம் என்றவுடன் தமிழ் ஆர்வலர்களுக்கு அவ்வை மூதாட்டியின் நினைவுதான் வரும்.

    அவ்வைக்கும், தமிழ் கடவுள் முருகனுக்கும் இடையே நாவல் பழத்தை மையமாக வைத்து ஒரு உரையாடல் இடம்பெற்றிருக்கும்.

    அதில் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என அவ்வையிடம், கேட்பார். அவரும் பழத்தில் சுட்ட பழம் இருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பியபடி, எனக்கு சுட்ட பழமே தா, எனக்கூறுவார்.

    உடனே முருகன், அருகில் இருந்த நாவல் மரத்தை அசைக்க அதில் இருந்து நாவல் பழங்கள் மண்ணில் விழும். அதனை அவ்வையிடம் முருகன் எடுத்து கொடுப்பார்.

    அந்த பழத்தில் மண் ஒட்டி இருக்கும். அந்த மண்ணை அப்புறப்படுத்த, ஒவ்ெவாரு பழமாக எடுத்து அவ்வை, அதனை ஊதி, ஊதி உண்பார். இதனை பார்த்த முருகன், அவ்வையே பழம் என்ன சூடாக இருக்கிறதா? என்று கேட்பார்.

    இப்படி நாவல் பழத்தை வைத்து முருகன் நடத்திய திருவிளையாடல் தமிழ் பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

    தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற நாவல் பழத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன என்பது பெரும்பாலோருக்கு தெரியாத விஷயம்.

    நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். தொடர்ந்து இதனை உண்டால் சர்க்கரை நோய் மட்டுப்படும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அதோடு மட்டுமின்றி சிறநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் சக்தியும் நாவல் பழத்திற்கு உள்ளது. நாவல் பழத்தின் விதைகளில் கால்சியம் மற்றும் புரத சத்து உள்ளது.

    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தின் சிறப்பை தெரிந்து கொண்ட கிராம மக்கள் அதனை வாங்கி உண்ண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    நாவல் மரங்கள் பெரும்பாலும் மலையோர கிராமங்களில் அதிகம் வளருகிறது. மதுரை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இதுபோல குமரி மாவட்டத்திலும் கன்னியாகுமரி, பொத்தையடி, குண்டல், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் இருந்து விழும் பழங்களை இப்பகுதி மக்கள் போட்டி போட்டு எடுத்து செல்கிறார்கள். சிலர் வீடுகளிலும் இந்த மரத்தை வளர்க்கிறார்கள்.

    இப்போது நாவல் பழத்தின் மகிமை கிராமங்களை தாண்டி நகர் பகுதிகளுக்கும் எட்டியுள்ளது.

    இதனால் நகர்புற மக்களும் நாவல் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கமான பழங்களை போல் இல்லாமல் இந்த பழம் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். நன்றாக பழுத்த பழத்தின் மீது சிலர் உப்பு தூவி உண்பார்கள்.

    அது இன்னும் டேஸ்டியாக இருக்கும். இந்த பழத்தை உண்டு முடித்தவுடன் நாக்கு, நாவல் பழ கலருக்கு மாறிவிடும். இதனால் குழந்ைதகளும் நாவல் பழத்தை ஆர்வமாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    நகர் பகுதிகளில் இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. கிராம புறங்களில் இந்த பழத்தை கூறுபோட்டு விற்கிறார்கள். ஒரு கூறு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

    நாகர்கோவில் பகுதியில் இப்போது தள்ளுவண்டிகளில் நாவல் பழம் விற்பனை ஜோராக நடக்கிறது. பெண்களும், மக்களும் இதனை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    ×