என் மலர்
நீங்கள் தேடியது "துணை முதலமைச்சர்"
- திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
- திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.
சென்னை:
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது.
சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.
- வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக அரசியலில் தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கலைஞர் நீண்ட காலம் முதலமைச்சராக பணியாற்றினார்.
அவரது காலத்திலேயே மு.க.ஸ்டாலின் கட்சியில் இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றார். அதன் பிறகு சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி தனது ஆளுமை திறனை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கலைஞர் வழங்கினார். கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.
தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸடாலினும் தந்தை வழியில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.
அதன் பிறகு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
உதயநிதியின் தீவிரமான கட்சி பணியை பார்த்து அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
இது தொடர்பாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "நானும் என் தந்தை வழியில் துணை முதலமைச்சர் ஆக போகிறேன்" என்பது வதந்தி. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது முதலமைச்சர்தான் என்றார்.
- கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
- கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.
பெங்களூரு:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.
அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-
கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
- மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.
சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.
அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.
தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
- இந்து வாழ்வியலே சனாதானம்.
- இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.
சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.
சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உதயநிதியும், எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக அனுபவம் பெற்றுள்ளார்.
- தி.மு.க.வை பொறுத்தவரையில் தனி நபர் முடிவெடுப்பதில்லை.
சென்னை:
அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை தி.மு.க.வில் வலுப்பெற்று வருகிறது.
இதனால் உதயநிதிக்கு எப்போது வேண்டுமானாலும் துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப் படலாம் என்கிற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இன்னும் பழுக்க வில்லை என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதன் மூலம் தி.மு.க. ஒரு குடும்ப கட்சி என்கிற பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டு சரிதான் என்றாகி விடாதா? என்கிற கேள்விக்கு கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள பதில் வருமாறு:-
முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினை தனது மகன் என்பதற்காக கருணாநிதி தேர்வு செய்து விடவில்லை. அவர் 50 ஆண்டு காலம் கட்சி பணியாற்றியவர் ஆவார். தி.மு.க.வில் இளைஞர் அணியை தொடங்கி பொருளாளராகவும், செயல் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் பணியாற்றியுள்ளார். இப்படி பல்வேறு பதவிகளை வகித்த அவருக்கு நிர்வாகத்திலும் நல்ல அனுபவம் இருந்தது. அதனால்தான் அவர் தேர்வு செய்யப் பட்டார்.
அதே போன்று உதயநிதியும், எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக அனுபவம் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரை துணை முதல்-அமைச்சராக கட்சி தேர்வு செய்வதில் என்ன தவறு உள்ளது.
தி.மு.க.வை பொறுத்தவரையில் தனி நபர் முடிவெடுப்பதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகி களின் ஆலோசனைக்கு பிறகே முடிவுகள் எடுக்கப் பட்டு அறிவிக்கப்படு கின்றன.
அந்த வகையில்தான் உதயநிதியை துணை முதல்-அமைச்சராக்க மூத்த தலைவர்கள் விரும்பி இருக்கலாம். இதனை குடும்ப அரசியல் என்று எப்படி சொல்ல முடியும். எந்த கட்சியாக இருந்தாலும் குடும்பத்தின் சாயல் இருப்பது இயல்புதான்.
தலைவர் பதவியில் மட்டுமல்ல மாவட்ட செயலாளர், மாநில செயலாளர் பதவி களிலும் 2 தலைமுறைகளை சேர்ந்தவர்கள் இருந்து கொண்டுதானே உள்ளனர்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
- சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.
அரியலூர்:
அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.
ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.
தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.
அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும்.
- செந்தில்பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும்.
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆவது எப்போது என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினரிடைய மீண்டும் ஏற்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான சூழல் உருவாகவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் நடைபெறவில்லை.
இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினி டம் முதலில் நிருபர்கள் கேட்கும் போது கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் பழுக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதன் பிறகு மாற்றம் ஒன்றே மாறாதது. வெய்ட் அண்ட் சி என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி அமைச்சர் துரைமுருகன்-ரஜினி இடையே ஏற்பட்ட வார்த்தை போர் விவகாரத்தை நகைச்சுவையாக பார்க்க வேண்டும் பகைச் சுவையாக பார்க்க கூடாது என்று தெரிவித்தார்.
அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு அமைச்ச ரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறும்போது 'சொன்னதை தான் செய்வோம். செய்வ தைத்தான் சொல்வோம்" தி.மு.க. பவள விழா நடை பெற இருக்கும் நிலையில் நீங்கள் எதிர் பார்த்தது நடக்கும் என்றார்.
அதன் பிறகு 10 நாட்களாகி விட்ட நிலையில் இன்னும் அதற்கான அறிவிப்பு வந்தபாடில்லை. இடை இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'இந்த தேதியில் துணை முதல்வராகி விடுவார்' என்று தகவல்கள் கசிய விடப்பட்டன.
இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளிக்கும் போது, எனக்கு தெரியாது. அது முதல்-அமைச்சரின் முடிவுக்கு உட்பட்டது என்று நழுவிக் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று கொளத்தூர் சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சரவை மாற்றம் குறித்தும் உதயநிதி துணை முதல்-அமைச்சர் ஆவது பற்றியும் கேள்வி கேட்டனர்.
அப்போதும் பிடி கொடுக்காமல் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று சொல்லி விட்டார்.
இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் நல்ல காரியம் செய்யாமல் பலர் தள்ளிப் போடுவது உண்டு. அந்த வகையில் இந்த மாதம் அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்று பேசப்படுகிறது.
ஆனால் அதே சமயத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி அமாவாசை வருவதால் (புரட்டாசி 16) அதன் பிறகு வளர்பிறை நாட்களில் நல்ல நிகழ்ச்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் துணை முதல்-அமைச்சராவது உறுதி. அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர்.

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று உறுதிபட பலர் தெரிவிக்கின்றனர்.
செந்தில்பாலாஜி ஜெயிலில் இருந்து எப்போது ஜாமீனில் வெளியில் வந்தாலும் அவருக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- 6 அமைச்சர்களின் இலாக்காக்கள்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
- உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மாலையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் முதலமைச்சர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
'துணை முதலமைச்சர்' என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
இவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில், பல்வேறு இடங்களில் நேற்று இரவு தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.