என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் கொலை"
- தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் காவலர் கொலை தொடர்பாக அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
* சட்டசபையில் என்ன பேச போகிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சபாநாயகரிடம் கூற வேண்டும்.
* என்ன பிரச்சனை எழுப்பப் போகிறோம் என்பதை அ.தி.மு.க.வினர் சொல்லவில்லை.
* அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
* விதிகளை மீறி அ.தி.மு.க.வினர் பேச முற்பட்டனர்.
* அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்தனர்.
* தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* காவலர் பணியில் இல்லாதபோது தனிப்பட்ட பகையில் மதுரையில் காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
* மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
* பொதுமக்கள் இடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்
- மது அருந்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது அருந்தும்போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
முத்தையன்பட்டி அரசு மதுக்கடையில் காவலர் முத்துக்குமார் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அங்கேயே மோதல் முடிந்தாலும் கூட, போதையில் இருந்த எதிர்கும்பல் முத்துக்குமாரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் படுகொலை செய்துள்ளனர்.
முத்துக்குமாரை கொலை செய்த கும்பல் கஞ்சா வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா வணிகத்தைக் கைவிட்டு திருந்தும்படி முத்துக்குமார் அறிவுரை வழங்கியதால் தான் அந்த கும்பல் ஆத்திரமடைந்து மதுபோதையில் படுகொலை செய்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மது, கஞ்சா ஆகிய இரண்டும் சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று.
மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை அரசு பொருட்படுத்தாதன் விளைவு தான் ஒரு காவலரின் உயிர் பறிபோயிருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத அந்த காவலரின் குடும்பம் ஆதரவின்றி நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் , சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மக்கள் நலனா, மது வணிகமா? என்ற வினா எழுந்தால் மக்கள் நலனுக்குத் தான் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுக்கடைகளை மூட வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் இல்லை.
மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்வதும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதும் தான் மாநில அரசின் அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இருப்பது மதுக்கடைகள் தான். எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பணத்துக்காக நடந்த கொடூர சம்பவம்.
- அரிவாள் வெட்டில் சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவருக்கு திருமணமாகி பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். மலையரசன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனது உறவினர்கள் அரவணைப்பில் குழந்தைகளை விட்டு விட்டு, மனைவி அனுமதிக்கப்பட்டு இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக கடந்த 18-ந்தேதி சென்றிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்தநிலையில் மதுரை அவனியாபுரம் சுற்றுச் சாலை ஈச்சனோடையை அடுத்த புதுக்குளம் கண்மாய் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான போலீஸ்காரர் மலையரசன் என்பது தெரிய வந்தது. அதனை அவரது உறவினர்களும் உறுதிப்படுத்தினர்.
மனைவியின் சிசிச்சை ஆவணங்களை வாங்க சென்றவர் எப்படி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய நபர் ஒருவரை தேடினர். இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் போலீஸ்காரர் மலையரசனை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் வைத்து மூவேந்திரனை கைது செய்ய முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து மூவேந்திரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் கையில் வெட்டுக்காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மூவேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 18-ந்தேதி மனைவியின் சிகிச்சை ஆவணங்களை வாங்குவதற்காக அழகாபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர் மலையரசன் வந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே வந்தபோது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரால் வாகனத்தை ஓட்ட முடியாததால் மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆட்டோவை பிடித்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவரான அவனியாபுரத்தை சேர்ந்த மூவேந்திரன் என்பவருடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் பாண்டிகோவில் அருகிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மீண்டும் மதுவாங்கி ஆட்டோவில் அமர்ந்தவாறு அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ்காரர் மலையரசன், ஆட்டோ டிரைவரான மூவேந்திரனிடம் தனது குடும்ப விஷயம் குறித்து கூறியுள்ளார். தனது மனைவி விபத்தில் இறந்து விட்ட தகவலையும் அவரிடம் தெரிவித்து உள்ளார்.
அப்போது தன்னுடை வங்கிக்கணக்கில் ரூ.80 ஆயிரம் பணம் இருப்பதாகவும், அதன் பாஸ்வேர்டையும் மூவேந்திரனிடம் பகிர்ந்துள்ளார். அந்த சமயம் மூவேந்திரன், தான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து தவிப்பதாகவும், குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாகவும் தெரிவித்ததையடுத்து இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
சற்றே நிதானம் இழந்த நிலையில் போலீஸ்காரர் மலையரசின் செல்போனை வாங்கிய மூவேந்திரன், அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை அவருக்கே தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.
இதனை கண்டுபிடித்தால் சிக்கலாகி விடும் என்பதால் போலீஸ்காரரை தீர்த்துக்கட்ட மூவேந்திரன் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த மூவேந்திரனின் நண்பர் பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொண்டார்.
பின்னர் வழியில் ஒரு பங்க்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு சம்பவம் நடந்த ஈச்சனோடை புதுக்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியால் போலீஸ்காரர் மலையரசனை தலையில் பலமாக தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.
குற்றுயிரும், கொலையுயிருமாக உயிருக்கு போராடிய போலீஸ் காரரை ஈவு இரக்கமின்றி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொடூரமாக கொலை செய்த மூவேந்திரன் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டிற்கு தப்பிச்சென்றுள் ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்ப வத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சரித்திர குற்றப்பதிவேடு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
- கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த புறவழிச்சாலையில் உள்ள ஈச்சனோடையில் கடந்த 4-ந்தேதி காலை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சாக்கு மூடை ஒன்று கிடந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூடையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன், ஒரு பெண்ணின் கால் வெளியே தெரியும் நிலையில் கிடந்தது. மேலும் சாக்கு மூட்டை முழுவதும் ரத்தக்கறையாகவும் காணப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (வயது 70) என்றும் தெரியவந்தது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலரான அவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், வில்லாபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சந்தேகப்படும்படியான சந்திரசேகர் (50), அமர்நாத் (38) இருவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நகைக்காக இந்திராணியை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகிலேயே நேற்று மாலை பாதி எரிந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மனைவியின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட மலையரசன், மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அங்கு மனைவியின் சிகிச்சை தொடர்பான கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு அவர் என்ன ஆனார், எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அவர் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீஸ்காரர் மயூரா மீது டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் நெலோகி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் மயூரா (வயது51). இவர் ஜேவர்தி தாலுகா நாராயண்பூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது போலீஸ்காரர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர். அவர் போலீஸ் மீது டிராக்டர் ஏற்றியதை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மந்திரி பிரியங்கா கார்கே கூறும்போது, மணல் கடத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.